ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 11, 2014

இன்று புதுவிதமான வைரஸ் கிருமிகள் பரவக் காரணம் என்ன?

விஞ்ஞான அறிவால் விஷத்தன்மைகள் பலவாறு பரவி, மக்களை இன்றைக்கு மடியச் செய்யும் நிலைகள் வருகின்றது.

இன்று நமக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணு உலைகளை உருவாக்குகின்றோம். அதிலிருந்து வரும் கசிவுகளை சூரியன் கவர்ந்து கொள்கின்றது.

அணு உலைகளிலிருந்து வரும் இந்த அணுக்கசிவுகள் (கதிர்வீச்சுகள்) நம் பூமி முழுவதும் பரவுகின்றது.
அதன் எல்லையை நுகர்வோர் அனைவரையும்
இத்தகைய விஷத்தன்மை கதிர்களைப் பாய்ச்சுகின்றது.

இந்த உணர்வு மனித உடலில் இறந்தபின் இதனால் இறந்தபின், இந்த அணுக்கள் தன்மை மீண்டும் பெருக்குகின்றது. மனிதனை ஒத்த நிலைகள் வரப்படும் பொழுது, மிகக் கடுமையான நோய்களாக மாறுகின்றது.

ஆக, முதலில் மனித உடலுக்குள் சென்று அந்தத் தீய அணுக்களின் தன்மை உருவாகின்றது.
இவன் இறந்தபின்
இதே உணர்வு மனிதன் ஒத்த நிலைகள் கொண்டு
புதுவிதமான நோய்கள் வருகின்றது.

இதைத்தான் “வைரஸ்” என்ற நிலையில் ஒவ்வொன்றுக்கும் என்னென்ன நிலைகள் என்று இன்றைக்குப் பரிசீலித்துப் பார்க்கும் பொழுது சில வைரஸ்களை மாற்ற முடியவில்லை என்று கூட சொல்லி வருகின்றார்கள்.

ஏனென்றால், இந்த அணுத்தன்மைகள் உடலில் நுகர்ந்துவிட்டால், அது அணுக்களானபின், எப்படி கேன்சர் விஷத்தன்மை கொண்டு ஆனபின், எந்த விஷத்தைக் கொண்டும் அந்தக் கேன்சரை நீக்க முடிவதில்லையோ, இதைப் போல அந்த வைரஸ் என்ற கிருமிகள் அதிகமாகிவிட்டால், அதை மற்ற மருந்து கொண்டு மாற்றுவதற்கு முடியவில்லை.
ஆக, எதிர்நிலையாக வரும் பொழுது
காய்ச்சல் அதிகமாகவே இருந்து கொண்டிருக்கும்.

அந்தக் காய்ச்சல் அதிகமாக இருக்கும் பொழுது, இதை மாற்றுவதற்காக ரத்தங்களைப் பரிசோதித்து இவனுடைய மலங்கள் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலையும் இது கண்டுப்பிடிப்பதற்கே தொடர்ந்து குறைந்தது பத்து நாளாவது ஆகும்.

இந்த உணர்வின் தன்மை சேர்த்து சேர்த்து, அதற்கு இது ஒத்துக் கொள்கின்றதா, இந்த உணர்வின் தன்மை எது என்ற நிலையிலும் இது புதுவிதமான வைரஸாக இருப்பதனால் இதற்கு நிலைகள் என்ன என்று பல மருந்துகளை கொடுத்து அதைப் பரிசீலித்துப் பார்ப்பார்கள்.

அதற்கப்புறம் அது பலவீனமானால் சரி, இல்லையென்றால் அந்த வைரஸின் தன்மை அதிகரித்து அந்தக் காய்ச்சலையே (புது விதமான காய்ச்சல்) போக்க முடியாமல் எத்தனையோ பேர் பல அவஸ்தைகள் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால், இதைப் போன்ற அணுக்கதிர்களால் தாக்கப்பட்டு
இந்த உணர்வின் தன்மை மண்ணிற்குள் வந்து.
இன்று அந்த இடத்தில் வாழ்பவர்களுக்குள் இணைந்து,
அவர்கள் இறந்தார்கள் என்றால் அந்த அணுக்கள் பரவுகின்றது.

அவர்கள் யாருடன் பழகினார்களோ அந்த உடல்களில் இது பரவுகின்றது. இப்படி வரப்படும் பொழுது இந்த வைரஸ் இந்த அணுக்கள் இந்தத் தன்மைகள் வருகின்றது.

ஆக, ஒருவருக்கொருவர் தொடர் கொண்டு எப்படி வருகின்றது என்ற நிலையும், நமது குருநாதர் இந்த உலகம் முழுவதும் சுற்றி இந்த உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றார்.

இன்று அதிலிருந்து மீட்டுவதற்காக, துருவ நட்சத்திரம் இந்த விஷக் கதிரியக்கங்களை வென்றது.

அந்த உணர்வின் தன்மையைப் பருகச் செய்யும்
இந்த உணர்வின் தன்மைகளைத்தான்
உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்வது.