இன்றைய உலகில் எத்தனையோ பேர், நாம் இந்த உடலை விட்டு இறந்த
பிற்பாடு என்னவாக ஆகப் போகிறோம்?
அதைப் பற்றி நமக்கென்ன தெரியப் போகிறது? என்றிருப்பார்கள்.
அதே சமயத்தில், சில பேர் நாம் இப்பொழுது மனிதனாக இருக்கிறோம்.
இறந்த பிற்பாடு,
மனிதனாகப் பிறக்கின்றோமா?
நாயாகவோ, அல்லது பேயாகவோ பிறக்கிறோமா?
இதையெல்லாம் நாம் தெரிந்து கொண்டு இருக்கப் போகின்றோமா?
என்று சொல்லிக் கொண்டு, அவர்கள் செய்கின்ற தவறுகளை
இன்னும் அதிகமாகவே செய்து கொண்டிருப்பார்கள்.
ஏனென்றால், இயற்கையின் நிலைகள் காலத்தால் இயற்கை எப்படி
இயங்குகின்றது? இறந்த பிறகு என்ன என்ற நிலைகளை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த உடலுக்குப் பின் என்ன? என்ற நிலைகளை அறிந்து கொண்டால்
நாம் அடைய வேண்டிய
எல்லையை அடையலாம். அதற்குத் தான் இதைச் சொல்கின்றோம்.