ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 2, 2013

இன்று புதிது புதிதாக விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எப்படி வெளிவருகின்றது?

1. கெமிக்கல் கலந்த உணர்வைத்தான் நாம் இன்று சுவாசிக்கின்றோம்
இன்று விஞ்ஞானிகள், விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு உலகம் முழுவதற்கும் பரப்புகிறார்கள். நீங்கள் அனைவரும் மந்திரம் என்றால் என்ன? விஞ்ஞானம் என்றால் என்ன? என்பதை அவசியம் தெரிந்து கொள்வது நல்லது.

விஞ்ஞானத்தில் எத்தனையோ நிலைகள் இருந்தாலும்,
ரேடியோ, TV, போன்ற சில அலைவரிசைகளில்
அவர்கள் வெளியிட்ட கெமிக்கல் கலந்த உணர்வை
நமக்குள் கவரும்படி செய்து
நம் உடலுக்குள் இருக்கக்கூடிய காந்த செல்களில்
இந்த உணர்வுடன் கலந்துவிடுகின்றார்கள்.

நாம் பாடக்கூடிய பாடல்களை டேப் எடுத்து (பதிவு செய்து), அதை மீண்டும் இயந்திரத்திலே புகுத்தி, பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் வெப்ப காந்த அலைகளுடன், இந்த அலைகளை அதனுடன் பரப்புகின்றார்கள்.

நம் மனித உடல்-கெமிக்கல் கலந்த இந்த உணர்வின் ஆற்றலை,
மீண்டும் இயந்திரத்திலே புகுத்தி,
அதை அலைகளாகக் காற்றிலே படரச் செய்யும் பொழுது,
நாம் மீண்டும் TV, ரேடியோ மூலம் பார்த்து, கேட்டுணருகின்றோம்.

அந்த உணர்வின் ஒலிகள், நம் செவிப் புலனறிவாலே ஈர்க்கப்பட்டு நம் உடலிலே சேர்க்கப்படும் பொழுது, உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது, கெமிக்கல் கலந்த உணர்வின் தன்மை உமிழ்நீராகச் சுரக்கின்றது.
2. மனித மூச்சலைகள்தான் கம்ப்யூட்டருக்குள் இயக்கும் சிலிகன் (SILICON)
இதைப் போன்று, நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வின் தன்மையும் எதிலே எண்ணங்களைச் செலுத்தினோமோ, இதிலே சேர்த்து விடுகின்றது.

அப்படிச் சேர்த்துக் கொண்டு நாம் விடும் மூச்சலைகள், இன்று கம்ப்யூட்டர் என்ற நிலைகளுக்குப் பயன்படுத்துவதற்கு முடிகின்றது.

ஆக, சிலிகனுடைய (SILICON) நிலைகளை விஞ்ஞானிகள் செயல்படுத்தினார்கள் என்றால், இன்ன அலைவரிசையில் வைத்து இன்னதுதான் என்று செய்யப்படும் பொழுது, அதற்குண்டான இயந்திரத்திலே புகுத்திவிடுகின்றனர்.

நாம் எப்படி டேப்பில் பதிவு செய்கின்றோமோ, அதைப் போன்று இந்த உணர்வைச் செயல்படுத்தி, இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது, மனித உடல்களில் விளையவைத்த இந்த மூச்சலைகள்தான் சிலிகன்களாக வந்து, கம்ப்யூட்டர் அலைவரிசைகளுக்குக் கிடைக்கின்றது. இதைத்தான் மனித மூளை என்று இவர்கள் சொல்வார்கள்.

இயந்திரத்தால் கலக்கப்பட்ட இந்த உணர்வுகள்
மனித உடலின் உணர்வுக்குள் கலக்கப்பட்டு
அது வெளிப்படும் பொழுது,
இதே முறைப்படி விஞ்ஞானத்திலே காணும் பொழுது, இதைப் போன்ற நிலைகள் அவனுக்குள் சிக்குகின்றது.

அவனுடைய சந்தர்ப்பத்தில் சிக்கப்படும் பொழுது, அந்த உணர்வின் நிலைகள் வருகின்றது. இது எப்படி சிக்குகின்றது?
3. இன்று புதிது புதிதாக விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எப்படி வெளிவருகின்றது?
ஒரு விஞ்ஞானி, விஞ்ஞானத்தின் அறிவு கொண்டு எண்ணங்களைச் செலுத்திக் கொண்டேயிருக்கின்றான். ஆக, இந்த விஞ்ஞான அறிவைத் தனக்குள் செலுத்தி, இந்த உணர்வின் தன்மை இவனுக்குள் வரும் பொழுது, இதே உணர்வாலே ஒரு நாள் விஞ்ஞானி இறந்துவிடுகின்றான்.

அப்படி இறந்துவிட்டால், அதே விஞ்ஞான நிலைகள் கொண்டு ஒருவன் செயல்படும் பொழுது,
இந்த உணர்வின் ஆற்றல் இவனுக்குள் செருகப்பட்டு.
எந்த மனிதனுடைய உடலிலே சேர்ந்ததோ,
அதே உணர்வின் அலைகள் இவனுக்குள் வருகின்றது.

எந்த விஞ்ஞான அறிவின் செயலிலே வந்தானோ, அந்த உணர்வின் தன்மை இவனுக்குள் வரப்படும் பொழுது, அவன் கண்டதைக் காட்டிலும் ஒரு நுண்ணிய அறிவின் தன்மை இவனிடத்தில் இவனையறியாமல் ஒரு அதிசய நிலைகள் வரும்.

சாதாரணமாக ஒரு மனிதன் ஆற்றல்மிக்க ஒரு செயலை எண்ணிவிட்டால், அந்த உணர்வின் தன்மை இவன் உடலுக்குள் ஏவிய உடன் பல அற்புத நிலைகள் செய்வதைப் பார்க்கலாம். பல மந்திர எந்திர ஜாலங்கள் செய்வதைப் பார்க்கலாம்.

ஒரு சந்தர்ப்பத்தில் அவனையறியாமல் பயத்திலே ஒரு உடலுக்குள் ஏவிவிட்டால், இவனையறியாமல் பல அதிசயங்களைச் செய்யும் சில உணர்வுகள் வருவதைப் பார்க்கலாம்.

இதைப் போன்றுதான், விஞ்ஞான அறிவு கொண்டு உணர்வின் தன்மை செயல்படுத்தும் பொழுது ஒரு விஞ்ஞானியின் தன்மை இவன் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அவ்வாறு வந்த உணர்வின் தன்மை இவனுக்குள் செயல்படும் பொழுது, இவனை அறியாமலேயே நுண்ணிய அலைகள் இவனுக்குள் தெரியும்.

அப்பொழுது இந்த இயந்திரத்தின் துணை கொண்டு சிக்கப்படும் பொழுது, இவனுடைய உணர்வும் அவனுக்குள் கலக்கின்றது. ஆக, இந்த காந்த அலைகளுக்குள் ஓரு கெமிக்கல் கலந்த உணர்வின் தன்மையை இவன் இயந்திரத்திலே உருவாக்கப்படும் பொழுது அதை எடுத்துப் பதிவாக்கி, இவனின் உணர்வின் அலையை காற்றிலிருந்து எடுக்கும் நிலை வருகின்றது.

ஆக, எப்பொருளின் தன்மை கொண்டு
இவன் கலவை செய்கின்றானோ,
அந்தக் கலவைக்குள் மற்றொன்றின் நிலைகளை
அதன் நுண்ணிய அலைகளை அறிய முடிகின்றது.

அவ்வாறு அறிந்த நிலைகளைக் கொண்டுதான் புதிது புதிதாகக் காணுகின்றான். இன்றைய விஞ்ஞானி. இததையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.