ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 24, 2013

சூரியனிலிருந்து அதிகமாக காந்தப்புயல்கள் வருவதற்குக் காரணமும், அதன் விளைவுகளும்

1. சூரியனிலிருந்து அதிகமாக காந்தப்புயல்கள் வருவதற்குக் காரணமும், அதன் விளைவுகளும்
இன்று சூரியனிலிருந்து காந்தப் புயல் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றது. அந்த  காந்தப் புயல் அதிகமாக அதிகமாக, விஷத்தன்மைகள் கூடும். ஆனால், அதே சமயத்திலே சூரியனுக்குள் காந்தப் புயல் இல்லை.

இவன் (விஞ்ஞானிகள்) வெடித்துப் பார்த்த அணுகுண்டினுடைய தன்மைகள் பிரபஞ்சத்திற்குள் ஊடுருவி, இந்த கதிரியக்கச் சக்திகள் தாக்கப்படப் போகும்போது, இந்த உணர்வின் தன்மையாக அதனுடைய உண்மைகள் இவர்களுக்குத் தெரியும்.

பிரபஞ்சத்திற்குள்ளேயே இராக்கெட் மூலமாக பல ஆயிரக்கணக்கான செயற்கைக் கொள்களைப் பறக்க விட்டிருக்கின்றார்கள். அதிலே கதிரியக்கச் சக்திகளையும் இணைத்து அனுப்பியிருப்பதால், அந்த நச்சுத்தன்மைகளும் பரவிக்கொண்டிருக்கின்றது.

இதைப்போல நம் பூமிக்குள்ளும் அணுகுண்டுகளை வெடித்து, அவை ஊடுருவி நீர்நிலைகள் இருக்கும் பக்கம் எல்லாம் போய்க் கலந்து கொண்டிருக்கின்றது.

தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கழிவுகள்
(நச்சுத்தன்மைகள்) அனைத்துமே
பூமிக்கடியில் போய் இறங்கி
நாம் குடிக்கிற நீரிலிருந்து எல்லா வகையிலும் இது கலக்கிறது.
ஆக பூமியில் வெப்பம் ஊடுருவி வரப்படும்போது
இந்த விஷத்தன்மைகள் எல்லாமே இந்த நீருடன் கலக்கிறது.

தாவர இனங்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிக்கின்றார்கள். அந்த மணத்தையும் நஞ்சின் தன்மையாக சூரியனுடைய காந்த அலைகள் எடுத்துக் கொள்கிறது. பூமி முழுவதும் அது படர்ந்துள்ளது.

அதே மாதிரி தொழிற்சாலைகளிலே இவர்கள் சேர்க்கும் ஒவ்வொரு கலவைகளிலும் வரக்கூடிய விஷத்தன்மைகள் அனைத்துமே மழை நீருடன் கலக்கிறது. அதுபோக காந்த அலைகளுடன் கலக்கின்றது.
2 மனிதனுடைய சிந்தனைகளை முழுமையாகச் செயலிழக்கச் செய்கின்றது
இப்படியெல்லாம் பல விஷத்தன்மைகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. இது நாளுக்கு நாள் பெருகிவர,
நாம் சிறிதளவு கோபப்பட்டாலும்
அந்தக் கோபம் ஏன் வந்தது? எதற்கு வந்தது? என்று
சிந்திக்கக் கூட நேரமில்லாமல் போய்விடும்.

இதைப்போல் வாழ்க்கையிலே நல்லவர்களாக இருப்போம். நாம் தவறு செய்யவில்லை. ஆனால், உங்களை அறியாமலேயே பிறர் செய்யக்கூடிய தவறுகளை எண்ணி எண்ணிப் பார்த்து, “இப்படிப் பண்ணுகிறார்களே, இப்படிப் பண்ணுகிறார்களே” என்று சுவாசித்துக் கொண்டிருந்தால் போதும், நீங்களே கடைசியிலே தப்பு பண்ண ஆரம்பித்துவிடுவீர்கள்.

உங்களை அறியாமலேயே உங்கள் சொல்லுக்குள் அந்த வேதனை வந்து, "அவர்கள் அப்படித்தான், இவர்கள் அப்படித்தான்” என்று அந்தக் குறையையே நீங்களும் பேசவேண்டிய நிலை வந்துவிடும்.

எனக்கும் நல்லதாக வேண்டும்,
மற்றவருக்கும் நல்லதாக வேண்டும் என்ற சொல்
வாயில் வரவே வராது.
ஆக, நல்லதைப் பற்றிச் சிந்திக்க முடியவில்லை.

இன்றைக்கே இப்படி இருந்தால், இனி நாளைக்கு வரக்கூடிய  விஷத்தன்மையினுடைய நிலைகள் இன்னும் அதிகமானால் எதைச் செய்யப்போகிறோம்?

இன்றைய உலக நிலையில் மனிதனாகப் பிறந்த அனைவருமே எங்கெங்கோ எப்படி எப்படியோ செயல்படுகின்றார்கள். மனித சிந்தனையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் அளவிற்கு விஷத்தன்மைகள் காற்றிலே கலந்து வந்து கொண்டிருக்கின்றது. 
3. நம்மையும் இந்த உலகையும் காக்கச் செய்ய குருநாதர் காட்டும் வழி
இதிலிருந்து நாம் நம்மையும் காத்து,
நம்மை அணுகி உள்ள மற்றவர்களையும் காத்திடும் சக்தியாக
நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் செயல்படுவோம். அந்த ஆற்றல் நமக்கு உண்டு.

ஆகவே, ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்ப்போம். அந்த ஆற்றல்மிக்க அருள் சக்திகளை நமக்குள் விளைய வைத்து, எல்லோரும் அதைப் பெறவேண்டும் என்ற மூச்சலைகளை இந்த உலகம் முழுவதும் பரவச் செய்வோம்.

நாம் அனைவரும் உலகுக்கு எடுத்துக் காட்டாக, இந்த உலகைக் காத்திடும் அருள்ஞானிகளாக உருவாவோம். எமது அருளாசிகள்.