ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 16, 2013

அகஸ்தியர் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டுணர்ந்தவைகளை நாமும் பெறமுடியும்

உதாரணமாக, தீபாவளிக் காலங்களில் வேடிக்கை காண்பிப்பதற்காக பல வெடிகளைக் கோர்த்து உருவமாக வடிவமைக்கச் செய்கின்றனர். இத்தகைய வெடிக் காட்சிகளில், பல வண்ணங்களில், பல உருவங்கள் தெரிகின்றது.

இந்த வெடிகளில், எதிர்மறையான நிலைகள் கலந்து வெடிக்கச் செய்யப்படும் பொழுது ஒளிக்கற்றைகள் அதனின் ரூபமாக வெளிப்படுகின்றது.

இதைப் போன்று, வான்வீதியில் இந்த உணர்வுகள் மோதப்படும்பொழுது உணர்வுக்கொப்ப அணுக்களின் ரூபம் மாறுகின்றது. இதுபோன்ற உணர்வின் உண்மையின் தன்மைகளை, அகஸ்தியர் அறிந்துணர்ந்தார்.

அவர் அறியாத பருவத்தில் இருந்த பொழுது உணர்ந்த உண்மைகளை, சொல்லால் வெளிப்படுத்த முடியவில்லை. ஆகவே, உணர்வின் ஒலிகளுக்கொப்ப அ, உ, எ, ஏ என்று இது-போன்ற ஒலியின் ஓசைகளை அறிந்து, ஒன்றுடன் ஒன்று அடக்கி அதன் சுருதிகள் மாறுவதை  இசையின் தன்மையால் அறிந்தார்.

உணர்வின் அலைகள் ஒன்றுடன் ஒன்று மோதி, ஒன்றினுள் ஒன்று கலக்கும் பொழுது, அதனின் செயல்களையும், அதனின் இசைகளையும், அதனின் ரூபங்களையும் அறிந்தார். அகஸ்தியர் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் கண்டுணர்ந்தவை இவை.

அண்டத்தையும், அதனின் விரிந்த பரப்பையும், நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் மின் கதிரியக்க உணர்வின் நிலைகளையும் அகஸ்தியர் அறிந்துணர்ந்தார்.
அதன் தொடர் கொண்டு பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றது?
என்ற நிலையையும் கண்டுணர்கின்றார்.
 
அதே சமயம், மின்னல் தாக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதி ஆவிகளாகச் சுழல்கின்றன. சனிக் கோளுக்கு மேல்தான் நட்சத்திரங்கள் இருக்கின்றன.

அவைகளிலிருந்து வெளிவருவதைக் கவர்ந்து அடுக்கு வரிசையில் வரப்படும் பொழுது, ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது கலவைகள் மாறுகின்றன. ஆவியின் தன்மை எடையற்றதாக மாறுவதை சனிக்கோள் தனக்குள் கவர்ந்து, அதை நீருள்ளதாக மாற்றுகின்றது.

விஷத்தன்மை கொண்ட கேது, ராகு இவைகளின் இயக்கத்தால், சூரியன் தனக்குள் இரைக்காக எடுத்துக் கொள்ளும் உணவினை மற்ற கோள்கள் இடைமறித்து, தனது நிலைக்கு மாற்றி தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.

அப்படிக் கவர்ந்து, ஒவ்வொரு கோளின் நிலையும் அமைகின்றது. ஒவ்வொரு கோளிலும், பல உப கோள்கள் வளர்வதையும் அறிந்துணர்ந்தார் அகஸ்தியர். ஆனால், வெளியில் சொல்ல இயலவில்லை.
 
அகஸ்தியர் கண்களால் பார்த்து,
உணர்வால் நுகர்ந்து,
அவரினுள் பதிவாகி,
அந்தப் பதிவின் நிலைகொண்டு
ம்முள் விளைந்த ஆற்றலை வெளிப்படுத்தினார்.
அது இன்றும் உண்டு. 

யாம் உபதேசித்த உணர்வை, மீண்டும் நினைவுபடுத்தினால், அவர் கண்ட பேருண்மைகளையும், அவர் பெற்ற ஒளியான உணர்வுகளையும் நாமும் பெறலாம்.