ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 20, 2013

நெல்லின் உமியை நீக்கியது போன்று, துன்பத்தை நீக்கினார்கள் ஞானியர்கள்

1. சாதாரண மக்களைத் தேடி ஏன் ஞானியர்கள் வருகின்றனர்?
நாம், இன்று எவ்வாறு கோயிலுக்கோ, ஞானியரையோ, தேடிச் செல்கின்றோமோ, அதைப் போல, ஞானியர் ஒவ்வொருவரும் சாதாரண மக்களைத் தேடி வருகின்றனர்.

தனுடைய உட்பொருளே, ஒரு மனிதன்எவ்வளவு துன்பத்தில் ஆழ்ந்திருக்கின்றானோ, அந்தத் துன்பத்தை நீக்கி, அந்தத் துன்பத்தை உருவாக்கிய,
அந்தக் காரமான தீய உணர்வின் சக்தியை, விலக்கச் செய்து,
ஆற்றல்மிக்க, உள் உணர்விலே தோன்றிய,
நல்ல உணர்வின், அணுவின் ஆற்றலை
உருவாக்கச் செய்வதற்குத்தான்.

உதாரணமாக, ஒரு கருணைக் கிழங்கு, விஷத்தின் தன்மை கொண்டிருந்தாலும் அதிலுள்ள விஷத்தை நீக்கிய பின், ஆற்றல் மிக்க நிலைகள் கொண்டு, நம் சரீரத்திற்குள் சத்தாக ஆகின்றது.
2. அரிசி உருவாக, அதனின் உமியே பிரதானமாகின்றது
அதைப் போன்று,  அரிசி உருவாவதற்கு, அந்த உமியே பிரதானமாகின்றது. இவ்வாறு, கடினமான உணர்வின் ஆற்றல்களாக இருந்தாலும், அதே ஆற்றல், உடலுக்குள் சென்றுவிட்டால், தீயதை விளைவிக்கும்.

நாம் நெல்லின் உமியை நீக்கியபின், அரிசி எவ்வாறு இருக்கின்றதோ, அதைப் போன்று, கடுமையான அந்த சுவாசத்தை நாம் சுவாசித்தாலும், நாம் சுவாசித்த அந்த உணர்வின் அலைகள், நம் உடலுக்குள் கலந்து விடுகின்றது.

நெல்லின் உமியை நீக்கிவிட்டு, உள்ளே இருக்கக் கூடிய அரிசியை நாம் பெறுகின்றோம். அதை உணவாகச் சாப்பிடுகின்றோம். அதைப் போன்று,  அந்த மகரிஷிகள்
விஷத்தின் ஆற்றலுக்குள் இருக்கக்கூடிய,
இயக்கும் அந்த உணர்வின் ஆற்றலை
நாம் சுவாசிப்பதற்குதான்,
அவர்கள் பெற்று,
பெற்ற அந்த உண்மையினுடைய நிலைகளை,
மனிதன் உடலிலே செலுத்தி,
அந்தத் துன்புறுத்தும் உணர்வலைகளை நீக்கினார்கள்.

ஏனென்றால், அந்த உடலுக்குள்தான், அந்த துன்புறுத்தும்  உணர்வான அணுக்கள் விளைகின்றது. அந்த விளைந்த அணுவின் தன்மையை, அதை நீக்குவதற்கு அந்த மெய்ஞானியின் அருள் சக்தியின் தன்மையை, யார் துன்புற்றுக் கொண்டிருக்கின்றனரோ அவர் உடலிலே அந்த சுவாசத்தைப் பாய்ச்சி, உணரச் செய்தார்கள்.
3. நெல்லின் உமியை நீக்கியது போன்று, துன்பத்தை நீக்கினார்கள் ஞானியர்கள்
அங்கே இருக்கக் கூடிய துன்பத்தின் உணர்வலைகளை, நெல்லின் உமியை நீக்கி அரிசியை எடுப்பது போன்று, மனித உடலுக்குள், துன்புறுத்திக் கொண்டிருக்கும் அந்தச் சக்திகளை, உமியை நீக்கியது போன்று, அந்தத் துன்பத்தை நீக்கி,
அந்த நல்ல வித்தான சத்தை,
அங்கே உருவாக்கினார்கள், மகரிஷிகள்.

உதாரணமாக, தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியவுடன், அதிலே கலந்திருக்கக் கூடிய பித்தளை, மற்ற மட்டமான சரக்குகள் எப்படி ஆவியாக மாறுகின்றதோ, அதைப் போல மகரிஷிகள் அவர்கள் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் தன்மை கொண்டு, ஒரு மனிதன் துன்புற்றுக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய சுவாசத்திலே இதைச் செலுத்தி, அங்கே இன்புறச் செய்கின்றார்கள்.

அவ்வாறு அவர்களை இன்புறச் செய்து,
அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கச் செய்து,
அந்த உடலிலிருந்து வெளிப்படுத்தி,
அதிலிருந்து வெளிப்படும் உண்மையான உணர்வலைகளை இவர்கள் சுவாசித்து, தன் உடலிலே ஆற்றல் மிக்க  சக்திகளாகப்  பெற்றார்கள்.

ஆகவே, அந்த மகரிஷிகளைப் போன்றே, நாமும் விஷத்தை அடக்கி, அதை ஆற்றல்மிக்க சக்தியாக மாற்றி, உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி, அழியா ஒளிச் சரீரம் பெறுவோம். எமது அருளாசிகள்.