ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 30, 2013

மனிதனுடைய கடைசி எல்லை -- "ஞானகுருவின்" விண் செல்லும் மார்க்கம்

1. குருதேவர்,  மனைவியின் ஆன்மாவையும் தன்னுடன் இணைத்து விண் செலுத்தும்படி செய்தார்
என் மனைவியை (யார்? குருநாதருடைய மனைவியை).அது இறந்தபின் அதைத் தவறி விட்டுவிட்டேன் அதனால் அது எங்கே இருக்கின்றதென்று தெரியவில்லை. அதை நீ இந்த மாதிரி இதை அந்த உணர்வை எடுத்துப் பாய்ச்சப்படும் பொழுது, இந்த உணர்வின் நிலை கொண்டு ஒரு காலம் வந்தால், இணைத்து விடு என்று சொல்கிறார், குருநாதர்.

இது பரம ரகசியம். சொல்வது அர்த்தம் ஆகின்றதா? அது விண் சென்றாலும் கூட, இதில் நாம் எப்படி அதனுடன் இணைய வேண்டும்? அவருடன் இணைத்து அந்த வளர்ச்சியின் தன்மை பெறும், என்று சொல்லித்தான் அப்புறம் உணர்வைக் கொடுக்கின்றார்

பல இதுகளை எடுத்த பிற்பாடு குருநாதர், அவர் இருக்கும் பொழுதே இதைச் சொல்கிறார் என்றால், அதைக் கண்டுபிடிப்பதற்கு ம்மிடம் கொடுத்தார் அவருக்கு ஆசை இருக்கின்றது இருந்தாலும் கூட, “நீ இதைக் கண்டுபிடி” என்று சொகின்றார்.

அதன் பிறகுதான், இந்த ஆன்மா இங்கே அந்த உடலை விட்டு வந்த பிற்பாடு, இவருடைய உணர்வுகள் எண்ணங்களில் பதிக்கச் செய்து, பதிக்கச் செய்து, ஆவி அந்த ஆன்மாவாக (குருநாதருடைய மனைவி) இருக்கின்றது, அது,
இதை எடுத்துத்தான், இது இந்த உணர்வோட இணைத்து,
அங்கே சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு போகச் சொன்னார்.

தை யாம் தெரிந்து கொள்வதற்காக,
முதலில் உயிருடன் இருக்கும் பொழுது,
குருநாதர் தையெல்லாம் சொல்கின்றார்.
ஏனென்றால், எல்லாம் சூட்சம உணர்வுதான்,

அப்புறம் மனைவியுடன் இணைத்துக்கொண்ட பிற்பாடுதான், சப்ரிஷி மண்டலத்தில் சேர முடிகின்றது. இல்லையென்றால், அங்கே சேர்க்க முடியாது.
மனைவியோடு சேர்க்கப்படும் போதுதான்,
அணுவின் நிலைகள் ஒளியாக மாறும்.

ஆண் பெண் என்று, செடி கொடிகளில் அதன் வித்தை உருவாக்குகின்றது. இதைப்போல ஆண் பெண் என்ற நிலைகள் வரப்போகும் போது, தன் இனத்தை எப்படி விருத்தி செய்கின்றதோ, இந்த இரண்டு உணர்வும் ஒளியான பின் ஒளியின் சரீரமாக ஆன பிறகு உணர்வைக் கருவாக்கி, ஒளியின் சரீரமாக்கும் ஆக, விண்ணின் நஞ்சினை ஒளியாக மாற்றும் தன்மை பெற்றது
2. திருமணம் ஆகாதவர்கள் தாய் உணர்வுடன் விண் செல்லலாம்
ஹரித்துவாரில், இவன் அரசனாக இருந்து (ஆயிரம் வருடம் தவம் இருந்த ஒரு ஆன்மா) தவமிருந்தாலும் கூட, இதனுடைய உணர்வுகள் அங்கே தாயுடன் இணைத்துவிடும்படிச் சொன்னார் குருநாதர்.

தாய் அதனுடைய உணர்வோடு இணைக்கப்படும் போது, அந்தக் கருவுடன் உருவாக்கிவிடுகின்றது.
அப்படிப் பல நிலைகள்
சப்தரிஷி மண்டலங்களில் உண்டு

தாய் தன் கருவுடன் இணைந்து விடுகின்றது அப்பொழுது, தாய் என்ற நினைவு வரும்பொழுது, அந்த ஒளியுடன் அதனுடன் சேர்த்து, பிள்ளை இணையும் இது வேறு மாற்றம். அதாவது, தாயிற்குள் இது புகும்.
3. அகஸ்தியன், அவன் மனைவி, தாய் தந்தையர் நால்வரும் இணைந்து, ஒளியின் உணர்வாக இன்று இயக்குகின்றார்கள்
ஆதியிலே, அகஸ்தியனுடைய தாய் தந்தையருடைய உணர்வுகள் தான்,
அகஸ்தியனுடன் சேருகின்றது
அதுதான் துருவநட்சத்திரமாக ஆகியிருக்கின்றது
அகஸ்தியனுடைய மனைவியும் சேர்த்து, நான்கு ரூபமாக இருந்து, அந்த உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது. இப்படி இணைகின்றதும் உண்டு

தன் மனைவி என்று சொல்லும்போது தன்னுடைய இனத்தை எடுத்துக் கருவாக மாற்றுகின்றது தாய் என்ற உணர்வுக்குள் இப்பொழுது என்ன செய்கின்றது? இந்த ஆன்மா இங்கே வருகின்றது அவர் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை வருகின்றது

இது வளர்த்துக்கொண்ட பின், தன் மனைவி என்ற நிலைகள் வரப்படும் போது இணைத்து, (துருவ நட்சத்திரம்) ஒரு குடும்பமாகவே இன்றைக்கு இயக்குகின்றார்கள்.

அதனால் தான், இங்கே தாய் தந்தையின் முக்கியத்துவத்தைக் கொடுத்து, இங்கே உங்களுக்கு வளர்க்கச் சொல்வது. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா?

அப்பொழுது, தாய் தந்தையரின் உயிராத்மாக்கள் விண்ணிலே செல்லப்படும் போது, அந்த விண் சென்ற உணர்வலைகளை எடுக்கும்போது ந்த ஒளியான உணர்வுகள் நமக்கு மீண்டும் கிடைக்கும் து தனித்தன்மை வாய்ந்ததாகப் போகும். ப்படி வித்தியாசங்கள், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்தியாசம் உண்டு

ஏனென்றால், முன்பின் சேர்த்த நிலைகளில் இப்படி சப்தரிஷி மண்டலங்களில் எத்தனையோ வகைகள் உண்டு. அது வளர்ச்சி கொண்டு வருவதும், அதில் வளர்ச்சி பெறாததும் உண்டு.
4. தனித்த நிலையில் யாருடைய துணையும் இல்லாமல், விண்ணுக்குச் செல்ல முடியாது
இப்படி (ஹரித்துவாரில் 1000 வருடம் தவம் செய்தவர்) தனித்த முறையில் போகிறவர்களுக்கு, இங்கேயிருந்து உந்தித் தள்ளுவதற்கு, யாரும் இல்லையென்றால் அவர்கள் விண்ணுக்குப் போக முடியாது.

ங்கே தரையில் இருக்க வேண்டும்.
இந்த புவியீர்ப்பிலிருந்து கடக்க வேண்டும்.
புவியீர்ப்பைக் கடக்க வேண்டும்

புவியீர்ப்பைக் கடக்க வேண்டுமென்றால், அந்த விண்ணின் ஆற்றல், அந்த சப்தரிஷிமண்டல ஆற்றலை வலு சேர்க்க வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையைத்தான், உயிராத்மாக்களின் முகப்பில் சேர்க்க வேண்டும் அப்பொழுது, அந்த சப்தரிஷி மண்டலத்துடன் சேரவேண்டுமென்றால் இதை இழுத்துக்கொண்டு போகும்.

எதுவும் கடிவாளம் இல்லாதபடி, எங்கேயும் போக முடியாது  அதற்குச் சரியான குரு வேண்டும். நான் தனியாக விண்ணுக்குப் போய் விடுவேன் என்று சொன்னால், அது முடியாது. ஒருவர், ஒரு துணையில்லாதபடி ஒன்றும் ஒன்றும் செய்ய முடியாது

அதனால், ங்கே நீங்கள் பலர் இருக்கப்படும் போது, சரியான நிலையில் தயார் ஆகிவிட்டீர்கள் என்றால், எல்லோரும் வளர்ச்சி அடைவதற்கு உறுதுணையாக இருக்கும்.
5. குருநாதர் சொன்ன பிற்பாடுதான், இப்பொழுது உயிராத்மாக்களை விண் செலுத்தச் செய்கின்றோம்
ஏனென்றால், வெகுகாலம் இடைவெளிவிட்டது.
அதாவது, திருமூலருக்குப் பிற்பாடு, போகருக்குப் பிற்பாடு
இது நான்காயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டது
அதற்கப்புறம், சப்தரிஷி மண்டலத்தில் யாரும் இணைந்தது இல்லை.

அப்புறம், யாம் குருநாதரிடம் வந்த பிற்பாடு, இதனுடைய தொடர் வரிசையில், ஒவ்வொரு உயிராத்மாவாக நாம் அனைவரும் இப்பொழுது விண்ணுக்குச் செலுத்துகின்றோம்.

ஏனென்றால், இப்பொழுது இனம் இனத்தைச் சேர்க்கும். நீங்கள் தையெடுத்தாலும், அந்தக் கூட்டமைப்புடன் சேர்த்து வளர்த்துத்தான், நாம் அந்த வளர்ச்சியைப் பெறமுடியும்.
6. தனித்த நிலையில் எதுவுமே இயங்கவும் முடியாது, வளரவும் முடியாது
தனித்த நிலையில் எந்த ஒரு மண்டலமும் வளராது. ஒரு பிரபஞ்சம் இருக்கிறதென்றால், பிற மண்டலங்களிலிருந்து எடுத்துத்தான் இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளே இரையாகக் கொடுக்கின்றது.

இதே மாதிரிதான், மனிதன் தன் உணர்வின் தன்மை எடுத்து வளர்க்கப்படும் பொழுது, அந்த அடர்த்தி அதாவது மற்றதை இழுத்துத் தனக்குள் உணவாகப் பெருக்கும் தன்மை வருகின்றது.

ஒன்று தனித்து, என்றுமே ஒன்றும் வேலை செய்யாது. இந்த உண்மையைத் தெரிந்து கொண்டால், நாம் விலகி நிற்க மாட்டோம்.

நீயா? நானா? என்று போர் செய்து கொண்டிருந்தால் என்னகின்றது? இப்பொழுது சொல்வதெல்லாம், அந்த இயற்கையின் உண்மை நிலைகள். ஏனென்றால், யாம் இதில் ஆயிரம் மறைத்திருக்கின்றோம்
7. விண் செல்லவேண்டுமென்றால், குரு வழியில்தான் அது முடியும்.
உங்களிடம் பதிவு செய்த இந்த உணர்வுகளை,
நீங்கள் ஒவ்வொன்றாக இணைத்து,
அதைக் கொண்டுவர முயற்சி எடுத்தீர்கள் என்றால்,
எல்லாவற்றையும் உங்களுக்குள் பார்க்க முடியும்.
யாம் சொல்வதைக் கேட்டுக்கொண்டு மட்டும் இருந்துவிட்டால்,
அதனால் பலன் இல்லை.

நமது குருநாதர் எமக்குக் கொடுத்த அந்த உணர்வை, நீங்கள் பெறக்கூடிய தகுதியைத்தான் யாம் உங்களிடம் உருவாக்குகின்றோம். நீங்கள் தொடர்ந்து வந்தீர்கள் என்றால், அது கிடைக்கும், பின் அது வளர்ச்சியடையும்.

இயற்கையில் ஒவ்வொரு செடிக்கும் நாம் என்ன செய்கின்றோம்? உரத்தைச் சேர்க்கிறோம் என்றால், அது ஆவியாகப் படுகின்றது. அந்தச் செடியில் இணைத்துக் கொண்டபின் என்ன செய்கின்றது? அந்த ஆவி, செடியுடன் இணைந்து உறையப்படும் பொழுதுதான், அந்தச் செடி வீரிய சத்தாக எடுத்து, நன்றாக மீண்டும் வளர்ப்பதற்கு வழி செய்கின்றது.

ஏனென்றால், அது இழுக்கும் சக்தி இல்லை செடியிலிருந்த சத்தும், உரமும் இணைய வேண்டுமென்றால் இந்த மாதிரி சில நிலைகளை நாம் உருவாக்கச் செய்ய வேண்டும்.

அதைத்தான் இப்பொழுது இந்த உரங்களை உங்களுக்குள் இணைத்துக் கொடுத்து, உங்களிடம் அந்த விண்ணின் ஆற்றலை எடுக்கும் சக்தியைக் கொடுக்கின்றோம். தை எடுத்து, உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இதைப் பரப்ப வேண்டும்.
வாயில் சொல்லிவிட்டுப் போனால்,
அப்புறம் இந்த குண்டுச்சட்டிக்குள் தான்
ஓடிக் கொண்டு இருக்கவேண்டும்.

விண்ணின் ஆற்றலுக்குச் செல்ல வேண்டுமென்றால், தை “குருவழியிலே பெற்றிருக்க வேண்டும்”. அதை எல்லோருக்கும் கொடுத்துப் பழக வேண்டும்.

அந்தப் பாதை தெரியாமல் யாரும் போகமுடியாது.