ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 19, 2013

அகஸ்தியர் தமக்குள் ஒளியாக உருவாக்கிய நிலையை, விஞ்ஞானிகள் எட்டவில்லை.

இன்று விஞ்ஞானிகள் பலவற்றைக் கண்டுணர்ந்தாலும், அகஸ்தியர் கண்டறிந்த எல்லை வரை செல்லவில்லை.
விஞ்ஞானம் உடலின் இச்சைக்குத் தான் வழியமைக்கின்றதே தவிர
ஆன்மாவிற்கு வழியறியவில்லை.

விஞ்ஞானிகள், வானுலக ஆற்றலில் சிலவற்றைக் கண்டறிகின்றனர். வானியலில் விஞ்ஞான அறிவுகொண்டு செயல்பட்டாலும்,
அகஸ்தியரின் அருளுணர்வுகள்
சிறிதளவு கிடைத்தால்தான்,
அந்த விண்ணுலக ஆற்றலுக்குச் செல்கின்றனர்.

ஆனாலும், அகஸ்தியர் கண்ட உண்மையின் உணர்வை, தமக்குள் ஒளியாக உருவாக்கிய நிலையை விஞ்ஞானிகள் இன்னும் எட்டவில்லை.