ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 29, 2013

விஞ்ஞானி, தான் இந்த உடலுக்குப் பின் என்ன ஆவோம்? என்று காண முயற்சிக்கக் கூட இல்லை.

விஞ்ஞான அறிவில் மனிதன் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற முறையில், கம்ப்யூட்டர் துணை கொண்டு நாடாக்களில் (CD) பேசி, பதிவு செய்துவிடுகின்றார்கள்.

அந்தப் பேச்சின் பதிவின் பிரகாரம், இப்படித்தான் இயந்திரம் இயக்க வேண்டுமென்று கட்டளையிடும் பொழுது,
எலெக்ட்ரன் என்ற நிலையில் இயந்திரத்துடன் இணைத்து,
இத்தன மணிக்கு இது ஓடவேண்டும்,
இத்தனை மணிக்கு இது ஆகவேண்டும், என்று சொல்லி,
பதிவு செய்த நிலை கொண்டு
இயந்திரத்தை இயக்கும் நிலை வருகின்றது.

சொல்லாகவே சொல்லி, இயந்திரத்தை இயக்குகின்றான். அது மட்டுமல்லாமல் ரோபோட்டுகள் எனும் இயந்திரங்களைக் கொண்டு ஆபரேஷன்களைச் செய்கின்றனர்.

இன்றைய விஞ்ஞானக் காலத்தில் எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு,
செயற்கைக் கோள் மூலமாகக் கட்டளைகளை அனுப்பி,
இங்குள்ள இயந்திரத்தை இயக்கி,
இங்கிருக்கும் மனிதருக்கு ஆபரேஷன் செய்கின்றனர்.

டாக்டர்கள் ஒருவருக்குக் கட்டியை அகற்றும் ஆபரேசன் செய்யும் பொழுது, கத்தியை வைத்துக் கிழிக்கும் பொழுது, சந்தர்ப்பத்தில் ஏமாந்து பிறிதொரு நரம்பின் மேல்பட்டு, அதனால் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் உருவாக்கப்பட்ட இயந்திரமோ, அதனுடைய பதிவுக்கு ஏற்றவாறு எந்த அளவுக்குப் போகவேண்டுமோ, அந்த நோயின் உணர்வுகள் இருக்கும் வரை செல்கின்றது. அதற்கு மேல் செல்வதில்லை. அதனுடன் நிறுத்திக் கொண்டு, ஆபரேஷன் செய்கின்றது.

இப்படி, விஞ்ஞான அறிவு வெகு தூரம் முன்னேறியுள்ளது. ஆனாலும், நாம் இன்னும் அறியாமையில்தான் உழன்று கொண்டுள்ளோம்.

அன்று மெய்ஞானிகள் கண்டுணர்ந்ததை வைத்து, இன்று விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். ஆனாலும், மெய்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வுகளில் ஆயிரத்தில் ஒரு மடங்கு கூட, விஞ்ஞானிகள் காணவில்லை.

உணர்வின் இயக்கமாக இயந்திரத்தை இயக்கக் கற்றுக் கொண்டான் விஞ்ஞானி, தான் இந்த உடலுக்குப் பின் என்ன ஆவோம்? என்று காண முயற்சிக்கக் கூட இல்லை.


இதுதான் இன்றைய மனிதர்களின் உண்மையின் நிலைகள்.