ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 20, 2013

பழனி மலையில், போகர் அமைத்துள்ள இடும்பனின் தத்துவம்

சாதாரண மனிதர்களான நாம், உண்மையின் தன்மையை உணர வேண்டும் என்பதற்காக, மகாஞானி போக மாமகரிஷிகள் மனிதனின் உயிரைக் கடவுளாக எண்ணி, மனிதனின் உடலை சிவமாக எண்ணி, மனிதனாக உருவாக்கிய நற்குணங்களை தெய்வமாக எண்ணி, அந்த உணர்வின் தன்மையை ஆலயமாக எண்ணினார்.

ஆக, மனிதருடைய உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் பரிமளிக்க வேண்டும் என்ற இந்த உள்நோக்கத்துடன்
முருகன் சிலையை
பழனியம்பதியின் மலைமீது
மேற்கே பார்க்கும்படி வைத்து
நாம் கிழக்கே பார்த்து வணங்குமாறு வைத்தார்கள்.
நாம் மலைமீது ஏறி தெய்வத்தை வணங்கச் செல்கின்றோம். அப்படி மலைமீது ஏறும் பொழுது, நமது உணர்வின் எண்ணங்களை விண்ணை நோக்கிச் செலுத்தி,மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும். அவர்கள் காண்பித்தருளிய அருள்ஞானங்களை நாங்கள் பெற வேண்டும்என்று எண்ணி ஏங்கும் பொழுது, மகரிஷிகளின் அருளாற்றல் நமக்குள் இணைகின்றது.

நாம் மலைப்படிகளில் ஏறி வரும்பொழுது வேகம் இருந்தாலும் கூட நமக்குள் சோர்வும் சேர்ந்துவிடுகின்றது. சோர்வடையும் பொழுது கலக்கமான உணர்வுகள் வரும்.

உடல் உறுப்புகள் சோர்வடையும் பொழுது, “மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும்என்ற உணர்வை எண்ணினோமானால், உடலில் களைப்பு வராது.

நமக்குக் களைப்பு ஏற்படும் பொழுது, இடும்பன் என்ற அசுர சக்தி நம்மை இடைமறித்து, நமது உயர்ந்த எண்ணங்களை அமிழ்த்து விடுகின்றது.

அப்பாடா…” என்று சோர்வடைந்து உட்காரப்படும் பொழுது
பாவிஎனக்கு இப்படியெல்லாம் துன்பம் செய்தார்களே
நான் எத்தனை பேருக்கு நன்மைகள் செய்தேன்
முருகாஎன்னை இப்படியெல்லாம் சோதிக்கின்றாயே…”
என்று எண்ணுவார்கள்.
நாம் களைப்பின் தன்மை கொண்டு அமர்ந்து, சோர்வான எண்ணங்களை எண்ணுகின்ற பொழுது, அது நம் நல் உணர்வின் செயலைத் தடைப்படுத்துகின்றது.

ஆக, இதனின் தன்மையை நமக்கு உணர்த்தும் விதமாக, நாம் நமது மனித வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்தாலும், பிறர் செய்யும் துயரத்தால் நமது மனம் சோர்வடையும் பொழுது, நம்மை அறியாது அசுர உணர்வுகள் உட்புகுந்து, நல்ல செயல்களை எவ்வாறு தடைப்படுத்துகின்றது? என்பதை உணர்த்துவதற்காக, நல் உணர்வைத் தடைப்படுத்தும் அசுர சக்திகளுக்கு, இடும்பன் என்று வைத்தார் போகமாமகரிஷி.

ஆனால், அங்கே என்ன செய்கின்றார்கள் இடும்பன் கோயிலுக்கு வாருங்கள், அர்ச்சனை செய்தால் நன்மை தரும் என்பார்கள். இடும்ப வைத்தியர் என்று கூட இருக்கின்றார்கள். ஞானிகள் உணர்த்திய நிலைகளை மறந்து, நல்ல குணங்களை சீர் கெடச் செய்யும் நிலைக்குதான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
நமக்குள் சந்தர்ப்பவசத்தால் வரும் சோர்வான உணர்வுகள்
நம்மை இடைமறித்து,
எப்படி நமது உயர்ந்த குணங்களின் செயல்களை
தடைப்படுத்துகின்றது என்பதை உணர்த்தினார் போக மாமகரிஷிகள்.

ஆனால், போகர் உணர்த்திய உண்மையின் தன்மைகளை எண்ணாமல், பட்டாடை தரித்து, கணக்குப் புத்தங்களை வைத்து, முருகனுக்கு பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம் எல்லாம் செய்தால், “எங்கள் அப்பன்.., என்னைக் காப்பாற்றுவான்என்று எண்ணுகிறோம்.

கவே, நாம் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும்,
என்னை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்,
மெய்ப்பொருள் காணும் திறன் பெற வேண்டும். என்று எண்ணி, இதனின் உணர்வை, நம் புருவ மத்தியில் இருக்கும், "உயிரான ஈசனுக்கு" அபிஷேகம் செய்ய வேண்டும்.