
போகர் பல சிலைகளை உருவாக்கினார்… ஒன்றல்ல…!
போகர் முருகன் சிலையைச் செய்திருக்கின்றார்.
1.மற்ற தாவர இனச் சத்துக்களை எடுத்துக் காயகல்பமாக உருவாக்கி... தான் அந்தக் கூட்டிலேயே இருந்து...
2.தான் சக்தி பெறும் வரையிலும் வேறு ஒரு உடலுக்குள் மாறவில்லை.
3.வெளியில் செல்வது மீண்டும் இந்தக் கூட்டிற்குள் வருவது மீண்டும் தான் சக்தியைப் பெருக்குவது.
இப்படித்தான் விண்ணினுடைய ஆற்றலை 27 நட்சத்திரங்களின் சக்தியையும் நவக் கோள்களின் சக்தியையும் எல்லாவற்றையும் இணைத்துத் தான் முருகன் சிலையை வடித்தது. அதிலே பாதரசங்களைச் சேர்க்கப்பட்டு முருகன் சிலையை வடித்து முழுமையாக்கப்பட்டது.
உணர்வின் தன்மையை ஒளியாக எப்படி மாற்றுவது…? என்பதற்குத் தான் சிலையை உருவாக்கி
1.அதே ஆவியை அவர் சுவாசித்து பகைமை உணர்வுகளை மாற்றி அதே ஒளியை எடுத்து அவர் சுவாசித்தார்.
2.குகைகள் இருக்கப்படும் பொழுது இந்தச் சிலையை வைத்திருக்கின்றார்.
3.அதன் மேல் சொட்டு சொட்டாக தண்ணீர் விழும்படி செய்து அந்த உணர்வின் சத்தை நுகர்வதும்
4.தனக்குள் அந்த அணுக்களின் தன்மை மாற்றுவதும் "இப்படிப் பல சிலைகள் உண்டு...”
அதே போல் சிலையை மக்களுக்குச் செய்யப்பட்டு மனிதனுடைய உணர்வுகளை மாற்றுவதற்கும் அவன் நினைவு வருவதற்கும் செய்தார் போகர். அவர் உருவாக்கிய முருகன் சிலை மீது அன்று பாத்திரத்தை வைத்திருப்பார்கள்... தண்ணீர் அது மேலே விழும்.
இப்பொழுது அது எல்லாம் இல்லை. கோயிலாகக் கட்டிய பின் அது எல்லாம் இல்லை. கோவில் கட்டுவதற்கு முன் வெறும் சிலை தான் இருந்தது.
பாத்திரத்திலிருந்து சிலை மீது தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டே இருக்கும்.
1.நெகட்டிவ் பாசிட்டிவ் அதிலிருந்து வரக்கூடிய சத்து ஆவியாக மாறும்.
2.அதை நாம் நுகர்ந்து எடுக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் விஷத்தன்மைகளைப் போக்கும்.
இப்படித்தான் காயகல்பமாக அவர் உருவாக்கப்பட்டு அந்த உணர்வின் சக்திகளைத் தனக்குள் சேர்த்து நட்சத்திர மண்டலங்களை எண்ணி ஒளியின் சரீரமாகப் பெற்றது.
இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி அந்த உடலில் இருந்து சமாளிக்க வேண்டும் என்று செயல்படுத்தியவன் போகன். அகஸ்தியன் தன் உணர்வை எடுத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக முதன் முதலில் விண் சென்றவன் துருவன் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது.
நம் குருநாதரும் பல உடல் தாவி வந்தவர்தான்... கூடு விட்டு கூடு பாய்ந்தவர். அபிராமிபட்டர் ஈஸ்வரபட்டர் என்று இப்படி ஒரு ஐந்து ஆறு உடல்களை எடுத்து வந்தவர் தான்.
அதிலேயும் பைத்தியக்காரராகத்தான் இதிலேயும் அப்படித்தான் இருந்தார். ஆனால் "தன்னுடைய காரியம் எதுவோ...” அதை சாதித்துக் கொண்டே வந்தார்.
தன் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது…? என்று உணர்ந்து கடைசி உடலாகச் சக்திகளை சேமித்த பிற்பாடுதான் ரகசியங்களை சொல்லி அதை எப்படி எடுக்க வேண்டும்…? என்று எம்மிடம் சொன்னார்.
தான் உடலை விட்டுச் சென்ற பிற்பாடு அது எப்படி ஒளிச் சரீரம் ஆக வேண்டும்…? என்று
1.அதற்குண்டான மார்க்கத்தைக் காட்டி
2.அந்த உந்து விசை கொண்டு விண் செலுத்தும் படிச் செய்தார்.