
குரு பீடம்
துன்பத்தைக் கேட்டறிந்தால் அடுத்த
கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று “துன்பத்தை மாற்றி அமைத்த உணர்வினை” உடலுக்குள்
சேர்த்துக் கொண்டால் அதை மாற்றலாம்.
1.முன்
செய்த வினையின் தன்மைதான் இன்று நமக்குள் வினையாக
விளைந்து
2.இந்த வாழ்க்கையைச் சீர்கெடச் செய்கின்றது… இது விதி ஆகிறது.
நம் வாழ்க்கையில்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு குணத்தை எடுத்து
வளர்த்திருப்போம். வேதனைப்படுவோரைப்
பார்த்திருப்போம்… நண்பன் என்ற நிலையில் இதையெல்லாம் கேட்டறிந்து
இருப்போம்… அல்லது சொன்னதைக்
கேட்டிருப்போம்.
இதையெல்லாம் நாம் நுகர்ந்த பின்
1.அதை உயிர் உடலுக்குள் அணுவாக மாற்றி… நண்பன் சொன்ன சொல்லையே
உணவாக எடுத்து வளரும்.
2.இவ்வாறு
மனித உடலில் விளைந்து விட்டால் அது விதி
ஆகிறது.
உதாரணமாக ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றப்படும்
பொழுது செடியாகிறது. வளர்ச்சியில் வித்துக்களாக விளைந்த பின் செடி பட்டு விடுகின்றது.
இருந்தாலும்
அதனுடைய இனங்களாக வந்த பின் அதனுடைய வித்திற்கே மீண்டும் அந்தச் செடியின்
சத்து உணவாகின்றது… செடியாக வளர்கின்றது,
இதைப் போன்று தான் நாம் மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ கோபமோ வேதனையோ உணர்வுகள் அனைத்தும்
உடலுக்குள் வித்தாகின்றது. இதுவே விதியாகவும் வளர்ந்து விடுகின்றது.
1.ஒவ்வொரு குணமும் விதியாக வளர்ந்து அந்தந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது
2.கடும் நோயாகவும் நாம் அவஸ்தைப்பட நேருகின்றது.
இதிலிருந்து மீள வேண்டும் என்றால் நம்முடைய மதியைச் செலுத்துதல் வேண்டும். அதற்கு அந்த மகரிஷிகள் உணர்வுகளை
நாம் பெறுதல் வேண்டும்.
மகரிஷிகளின்
அருள் சக்தியால் நாங்கள் உடல் நலம் பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்…
அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற வேண்டும்.
1.தபோவன
குரு பீடத்தில் உள்ள சூரியனைப் உற்றுப் பார்த்து
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்.
3.இதற்கு
முன் அறியாது சேர்ந்த தீவினைகள் அனைத்தும்
அகன்று உடல் நலம் பெற வேண்டும் என்று உற்றுப் பாருங்கள்.
அந்த மகரிஷிகள்
உணர்வுகள் உங்களுக்குள் பாய்ந்து முன் சேர்த்துக் கொண்ட வினைகளை அகற்றும் சக்தியாக
அருள் ஒளி படர்ந்து எந்த வலி வேதனை இருந்தாலும்
மற்ற குறைகள் இருந்தாலும்… அனைத்தும் குறைந்து மன பலத்தையும் மன வளத்தையும் பெருக்கும்.
மனக் கவலையோ சோர்வோ இருந்தால் மன பலம் பெறுவீர்கள் அந்தத் திறன்
கிடைக்கும். ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்னை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்… மெய்
ஞானிகள் உணர்வு எனக்குள் வளர வேண்டும்… என்
பார்வையால் நான் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி இருங்கள்.
1.இப்பொழுது உங்களுக்குள் அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் ஊடுருவுவதையும் உடலில் ஆற்றல்
பெருகுவதையும் உணர முடியும்.
2.அன்று
வாழ்ந்த அந்த மகரிஷிகள் உருவங்களும் சிலருக்குக் காட்சியாகத் தெரிய வரலாம்.
3.சப்தரிஷி மண்டலங்களை நீங்கள் காணலாம்.