ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 10, 2026

“மெய் ஞானத்தின் மூலங்களை எல்லாம்” படிக்காதவன் வெளிப்படுத்துகின்றேன்

“மெய் ஞானத்தின் மூலங்களை எல்லாம்” படிக்காதவன் வெளிப்படுத்துகின்றேன்


மது காவியங்களில் பேருண்மைகளைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். அதனின் மூலக்கூறுகளை நாம் சற்று சிந்தித்துப் பார்த்து இருக்கின்றோமா…?
 
1.ஆனால் நான் படிக்காதவன் தான்…! அந்தக் காவியங்களையும் நான் படிக்கவில்லை.
2.இருந்தாலும் அதனின் விளக்கங்களை உங்களிடம் சொல்கிறேன்.
3.காரணம் குருநாதர் காட்டி அருள் வழியில் என்னால் அதை அறிய முடிந்தது.
4.அந்த இயற்கையின் உண்மைகள் மறைந்து விடவில்லை.
 
இன்றைய விஞ்ஞான அறிவு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே பூமிக்குள் எந்தெந்த நிலைகள் பதிவாகியுள்ளதோ எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்ற முறைப்படி அதனின் உணர்வின் அதிர்வுகளை எடுக்கின்றான்.
 
அந்த அதிர்வுகளை வைத்து அந்தக் காலத்தில் வாழ்ந்த உயிரினங்களோ மனிதர்களோ அவருடைய எண்ண அலைகளை வைத்து உருவத்தையும் காட்டுகின்றான்…”
 
இதைப் போன்று தான்
1.மெய் ஞானிகள் கண்ட உண்மை உணர்வை மெய் ஞானத்தைக் கண்ட நமது குருநாதர் எனக்குள் பதிவு செய்து…”
2.அதை ப்படி அறிய வேண்டும்…? என்று உணர்வுகளை ட்டினார்.
 
அதன் வழியில் நான் செல்லப்படும் பொழுது அதை எல்லாம் காண முடிந்தது.
1.அந்த உண்மையின் சக்திகளைப் பெறும் தகுதியைப் பெற்றேன்.
2.நீங்களும் அந்தத் தகுதியைப் பெற வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.
 
ஒரு கம்ப்யூட்டரில் பதிவானால்தான் அது இயக்கும். ரேடியோ டி.வி. ஸ்டேசன்கள் எங்கேயோ இருந்து கொண்டு ஒலி/ஒளிபரப்பு செய்கின்றார்கள். அந்த அலைவரிசையில் இங்கே நாம் திருப்பி வைத்தால் தான் காற்றிலிருந்து வருவதை எடுக்க முடியும்.
 
இதே போன்றுதான் பகைமை உணர்வு வெறுப்பு கொண்ட உணர்வு கோப உணர்வு இப்படி எண்ணிலடங்காத உணர்வுகள் உங்கள் ஒவ்வொருவர் உடலிலும் பதிவாகியுள்ளது.
 
தை நினைக்கும் போதெல்லாம் அதற்குத் தக்கவாறு அதனுடன் தொடர்பு கொண்டு கவர்ந்து சுவாசிக்கப்பட்டு இயக்குகின்றது.
 
ஆனால் குரு கொடுத்த தீமைகளை அகற்றிடும் அருள் ஞான சக்திகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
1.எப்பொழுதெல்லாம் இதை எண்ணுகின்றீர்களோ
2.அந்த அலைவரிசையைத் திருப்பி வைத்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எல்லாம் மாற்றி விட்டு
3.வாழ்க்கையைச் சீராக்க நிச்சயம் இது உதவும்.
4.”உதவ வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.