
நாம் தெய்வமாக ஆவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்
முன் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக இந்த மனித உடல் பெறும் பொழுது
1.நாம் எதை எண்ணுகின்றோமோ அதை ஜீவனாக்கும் திறன்
பெற்றது.
2.ஒவ்வொரு பொருளையும் தெரிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்றது.
3.அதனால் தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா
என்று சொல்வது.
மனிதனின் ஆறாவது அறிவு சரஹணபவா…! நாம் சாப்பிடும்
ஆகாரத்தில் கலந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிவிட்டு ஆறாவது
அறிவாக நம் உடலில் அந்த மணம்
வருகின்றது.
இந்த ஆறாவது அறிவின்
மணம் கொண்டு சரஹணபவா குகா கந்தா பல
பொருள்களை எண்ணினாலும் கடம்பா அதை உருவாக்கி கார்த்திகேயா என்று சொல்லும் பொழுது
தெரிந்துணர்ந்து செயல்படும் திறன் பெற்றவன்.
அருள் ஞானிகள்
உணர்வை எண்ணி அதை நமக்குள் ஜீவன் செய்யப்படும் பொழுது ஓ…
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் ஜீவனாக்கி அதை ம்… என்று நம் உடலாக ஆக்கும்போது அது ஓம்
நமச்சிவாய…!
1.எல்லாவற்றையும் அடக்கிய அந்த அருள் ஞானியின் உணர்வுகளை
நமக்குள் கணங்களுக்கு அதிபதியாக்கி
2.நமக்குள் சிறுமை ஊட்டும் உணர்வின் தன்மையை அடிமைப்படுத்தி மெய் ஞானிகள் உணர்வை நமக்குள் அதிபதியாக்கி
3.இந்த வாழ்க்கையில் தீமை அகற்றிடும் உணர்வாக விளைய
வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொன்னார்கள் ஞானிகள்.
குடும்பத்தில் அறியாது சலசலப்பு சஞ்சலமும் வெறுப்பு வேதனைகள் வந்தாலும் இதை
அகற்றிட ஆலயத்தை அருள் ஞானிகள்
காட்டினார்கள். அங்கே விண்ணை நோக்கி ஏங்கிவிட்டுக் கோவிலுக்குள் சென்ற பின் தீப ஆராதனை காட்டப்படும்
பொழுது பொருள்கள் தெரிகின்றது.
பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெற வேண்டும் இந்தத்
தெய்வ குணத்தைப் பெற வேண்டும். இந்த
உண்மையை உணர்த்திய அருள் மகரிஷிகளின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் மலரின் மணம் பெற வேண்டும். இவை அனைத்தும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்னைப் பார்ப்போருக்கு அந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அங்கே வைத்திருக்கும்
கனியைப் பார்க்கும் பொழுது கனியைப் போன்ற
சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என் சொல்லைக்
கேட்போர் வாழ்விலே இனிமை பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
1.ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் இந்தத் தெய்வ குணம்
பெற வேண்டும்
2.அவர் குடும்பம் நலம் பெற
வேண்டும்… அந்தக் குடும்பங்கள்
அனைத்தும் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
தொழில் நடத்தினால் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். தெய்வ குணங்களைப் பெற வேண்டும் வாடிக்கையாளர்
குடும்பங்களில் எல்லா நலங்களும் பெற வேண்டும்.
எங்கள் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும். என்னைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
இப்படி எண்ணி… நம் உயிரான
ஈசனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை இந்த ஆலயத்தில் இருக்கும் நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து நடக்கும்படி தான் அன்று ஆலயங்களை
அமைத்தார்கள் ஞானிகள்.
நம்மையறியாது
நமக்குள் வரும் வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு
கோபம் குரோதம் என்ற தீமையான உணர்வுகள் அழுக்காக உடலுக்குள் சென்று நல்ல குணங்களை மாசுபடச் செய்யும் நிலையில் இருந்து நம்மைத்
தூய்மைப்படுத்த விநாயகர் தத்துவத்தைக் காட்டினார்கள்.
நற்குணங்களின் தன்மையை… நறுமணத்தின்
உணர்வைத் தனக்குள் எடுத்து நம்மைப்
பிறர் பார்க்கும் பொழுது இந்த நறுமணங்கள் அங்கே வர வேண்டும். என் சொல்லைக் கேட்கும் பொழுது அவர்களுக்கு
மகிழ்ச்சி ஏற்பட வேண்டும் என்ற இந்த எண்ணங்களைத்
தோற்றுவிக்கும் இடம் தான் ஆலயம்.
அபிஷேகம் ஆராதனைகளை இன்று செய்கிறோம். செய்துவிட்டு நமக்குள் கொதிப்பையும் வேதனையையும்
தான் எண்ணுகிறோம்.
நல்லதைச் செய்தேன் ஆனால்
தீமையே செய்கின்றான்…! என்
குழந்தை நன்றாக வர வேண்டும் என்று விரும்பி உன்னைத்தான் வணங்கினேன். ஆனால் அவன் தவறு செய்கின்றானே எதிர்த்து பேசுகின்றானே…! என்று வேதனைப்பட்டு
1.அந்தத்
தெய்வம் தான் செய்யும் என்று நாம் நம்புகின்றோம்.
2.ஆனால் அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் எடுத்தால் அந்த
எண்ணம்
3.நம் செயலின் தன்மை அந்தத்
தெய்வத்தின் தன்மையாகச் சொல்லால்
இயக்கும்.
4.நாம் எண்ணிய தெய்வ குணத்தின் உணர்வுகள் நமக்குள் அந்தச் சக்தியாக மலரும்.
5.நாம் அந்தத் தெய்வமாக ஆவதற்குத் தான் ஆலயங்களை அமைத்தார்களே தவிர
6.அந்தத் தெய்வம் செய்யும் என்று யாரும் சொல்லவில்லை.
ஆனால் தெய்வம் செய்யும் என்ற நம்பிக்கையில் தான் செல்கின்றோமே தவிர
1.அந்தத் தெய்வ குணத்தை நமக்குள்
எடுத்தால்
2.அந்தத் தெய்வ சக்தி நமக்குள் இருந்து நம் சொல்லையும் செயலையும் அது இயக்கும் என்ற நிலை காலத்தால்
மறைந்து விட்டது.
நம்மை நாம் அறியாமலே நமக்கு நாமே நல்ல குணங்களுக்கு அடிக்கடி தீங்கு
விளைவிக்கின்றோம்.
மனிதனை உருவாக்கிய… அனைத்தையும்
அறிந்திடும் சக்தியாக இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனுக்கு வேதனையும் சோர்வையும் எண்ணி எண்ணி
1.அந்த ஈசனுக்குச் சரியான நிலைகள் பணிவில்லாதபடி
அவனுக்குண்டான சேவைகள் செய்யாதபடி
2.நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு அடிக்கடி
வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் என்ற
3.தீமையின் உணர்வின் சக்தியைத் தான் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.
ஈசனை வணங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
ஞானிகள் காட்டிய விநாயகத் தத்துவப் பிரகாரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற
வேண்டும் என்று இதை வினைக்கு நாயகனாக இந்த உடலுக்குள் ஆக்கிட
வேண்டும்.
அதைக்
கணங்களுக்கு அதிபதியாக்கி நமக்குள் தீமை விளைய வைக்கும் அந்த உணர்வினை அடக்கி ஞானிகள் உணர்வின்
தன்மையை “ஒளியின் சுடராக…” நாம்
உருவாக்க வேண்டும்.
வைரம் எப்படி நஞ்சினை ஒடுக்கி ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை… நஞ்சினை மகரிஷிகள்
சக்தி கொண்டு ஒடுக்கினால்
2.நமக்குள் அறிந்திடும் ஆற்றலும்… உணர்வுகள் ஒளியாக மாறும் நிலையும் வருகின்றது.
இதைத்தான் ஞானிகள் நமக்கு ஆலயத்தில் தெளிவாக வழிகாட்டி உள்ளார்கள்.