ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 19, 2023

நம்மைக் காப்பதற்கும்… எதிர்காலச் சந்ததியினரைக் காப்பதற்கும் உண்டான வழி

ஒரு தாய் கர்ப்பமுற்றிருக்கும் பொழுது… சர்க்கரைச் சத்து நோய் உள்ளவரை ஒன்றில் இருந்து தொண்ணூறு நாட்களுக்குள் உற்றுப் பார்த்தாலே போதும். இந்த உணர்வு தாயின் இரத்தத்தில் கலந்து கருவில் இருக்கும் குழந்தைக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

இது தாய்க்கு அதிகமாகச் சேர்வதில்லை. ஆனால் இந்த உணர்வு கருவுக்குள் சென்ற பின் குழந்தைக்கு இணைத்து விடுகின்றது. குழந்தையாக இருக்கும் போததே அதற்கு சர்க்கரைச் சத்து நோய் வந்து விடுகிறது.

அந்தக் குழந்தை தவறு செய்ததா…? இல்லை.

எங்கள் குழந்தைக்குச் சர்க்கரைச் சத்து நோய் இருக்கிறது.. சரி செய்ய வேண்டும் என்று சொல்லி என்னிடம் தூக்கிக் கொண்டு வருகின்றார்கள்.

1.தாய் உற்றுப் பார்த்து எடுத்துக் கொண்ட உணர்வினால் தான் குழந்தைக்கு அது வந்தது
2.ஆகையினால் தாய் தான் எண்ணி அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொன்னேன்
3.மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் குழந்தை உடல் முழுவதும் படர்ந்து சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் என்று
5.”குழந்தையின் கண்களைப் பார்த்து” அந்த உணர்வுகளைப் பாய்ச்சும்படி சொன்னேன்.

அப்படித்தான் அதைக் குறைக்க முடியும்… மருந்து கொடுத்து அல்ல. சிறிய வயதிலேயே இன்சுலின் இன்ஜெக்க்ஷன் போட்டுச் சர்க்கரை சத்தை மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்றால் முடியாது

காசு இருக்கிற வரைக்கும் செய்வார்கள். இன்சுலின் போட்டுக் குழந்தையைக் காக்க வேண்டும் என்று செய்தாலும் ஒரு நாளைக்கு இல்லை என்றால் மயக்கப்பட்டு அது கீழே விழுந்துவிடும்.

தாயின் கருவில் உருவாகக்கூடிய குழந்தைகளின் நிலை இன்று இப்படித்தான் இருக்கின்றது.

ஏனென்றால் வீட்டில் டிவி மற்ற எல்லாமே இருக்கின்றது. விளையாட்டுகளையும் கேளிக்கை நிகழ்ச்சிகளையும் எத்தனையோ அதிலே காட்டுகின்றார்கள்.

தாய் இதை எல்லாம் உற்றுப் பார்க்கும் போது பதிவாகி விடுகின்றது கருவிலே இது இணைந்து… குழந்தை பிறந்த பின் டிவி மற்ற சாதனங்களை சிறு வயதிலேயே அதைச் சீராக இயக்குவதும்… விளையாட்டுகளை ஆனந்தமாக விளையாண்டு ரசிப்பதும்… இதையெல்லாம் இன்று நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
1.ஆனால் படிப்பையோ மற்ற நல்ல பழக்க வழக்கங்களையோ எளிதாகக் கொண்டு வர முடியவில்லை.
2.பெரும்பகுதி குழந்தைகள் டிவி மற்றும் அதைப் போன்ற சாதனங்களிலேயே இன்று நாட்டமாக இருப்பார்கள்.

காரணம்… தாய் கருவில் பதிவானது இப்படி வந்து விடுகின்றது. ஆனால் பார்த்தது வேடிக்கைதான்… குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அது அமைந்து அதன் வழியே அந்தக் குழந்தையை வழி நடத்துகின்றது

அதே போல் தான் காக்காய் வலிப்பு வந்த ஒரு குழந்தையை கருவுற்ற தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் அதே நோய் வருகின்றது.
1.வாழ்க்கையில் இது போன்று சுவாசிக்கும் உணர்வுகள் நம்மையும் பாதிக்கின்றது
2.எதிர்காலக் குழந்தைகளையும் பாதிக்கின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனோ தாய் கருவிலே நஞ்சை முறிக்கும் ஆற்றல் பெற்றான். அகண்ட அண்டத்திலிருந்து வரக்கூடிய உணர்வுகளை அறியும் ஆற்றலும்… அதில் இருக்கக்கூடிய நஞ்சுகளை வெல்லக்கூடிய சக்தியும் அவனுக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைக்கிறது.
1.இது அவனுடைய சந்தர்ப்பம்… நஞ்சை வெல்லக்கூடிய சக்தி அவனுக்குக் கிடைக்கின்றது
2.மற்ற மனிதர்களைக் காட்டிலும் இவன் அறிவில் வளர்ச்சி கொண்டவனாக வருகின்றான்.

வான் வீதியை உற்று நோக்குகின்றான். 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படக்கூடிய துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின்னலாக மாறுகின்றது… அந்த ஒளிக்கற்றைகளை அவன் தனக்குள் நுகர்கின்றான்.

நம் பிரபஞ்சத்தைக் காட்டிலும் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய சக்திகள் இந்தப் பூமிக்குள் வந்தால் அது கடுமையான விஷத்தன்மையாக இருப்பதால் பல தீங்குகளைச் செய்கின்றது என்பதனை அறிகின்றான்.

ஆனால் அவன் உடலிலே அந்தத் தீங்கை மாற்றும் சக்தி இருப்பதால் அதை எல்லாம் நுகர்ந்து… தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு இரத்தத்தின் வழி அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்குகின்றான்.
1.மின் கதிர்களை ஜீரணிக்கக் கூடிய சக்தி அவனுக்கு வருகின்றது… அது வளர்ச்சி அடைகிறது
2.உயிரைப் போன்றே உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றிடும் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் வளர்ச்சி அடையத் தொடங்குகிறது.

27 நட்சத்திரங்கள் 27 விதமான நிலைகள் மோதும் போது அந்த மின் கதிர்கள் வெளிப்படுவதை அகஸ்தியன் சுவாசிக்கின்றான்… அது அவனுக்குள் அடங்குகிறது.

புறத்திலிருந்து வருவதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதிலுள்ள விஷத்தை ஒடுக்கிப் பாதரசமாக மாற்றி உமிழ்த்தப்படும் போது… “இந்த உலகிற்கே ஒளி தருவது போல…” 27 நட்சத்திரங்களின் ஆற்றலை அகஸ்தியன் நுகரப்படும் போது… இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் அறிவாக… அண்டத்தை அறியும் சக்தியாக அவனுக்குள் வந்து சேர்கின்றது

துருவத்தின் வழி இதையெல்லாம் அவன் உற்றுப் பார்த்துத் தனக்குள் அடக்கியதால் துருவன் என்ற காரணப் பெயரையும் வைக்கின்றார்கள். அந்த ஆற்றல்களை அவன் பெருக்கி வளர்ச்சியாகும் போது பதினாறாவது வயதில் அவனுக்குத் திருமணம் ஆகிறது..

செடி கொடியாக இருந்தாலும் கல் மண்ணாக இருந்தாலும் உயிராக இருந்தாலும் எல்லாமே “ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரம் என்ற இயக்கத் தொடர்கள் கொண்டது தான்” என்பதை உணர்கின்றான்.

தான் பெற்ற சக்திகளையும்… கண்ட பேருண்மைகளையும் மனைவிக்கு எடுத்துச் சொல்கிறான்… உணரும்படி செய்கிறான். அதன் வழி அவன் மனைவியும் நுகர்ந்தறிகிறது.

கணவன் மனைவியாக இருவருமே விண்ணின் ஆற்றலைத் தங்களுக்குள் வளர்த்து இரு உயிரும் ஒன்றாகி ஒளி உடலாகப் பெற்று துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்.

1.அந்த அகஸ்தியனைப் போன்று எல்லோரும் பேராற்றல்கள் பெற வேண்டும்…
2.அத்தகைய ஞானியாக நாம் உருவாக வேண்டும் என்பதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றோம் (ஞானகுரு).