ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 25, 2023

என்னுடைய சேவை

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ கெட்டதைப் பார்க்கிறோம் சங்கடப்பபடுவோரைப் பார்க்கின்றோம்… அது பற்றிச் சொல்வதையும் கேட்கிறோம்.
1.இது எல்லாம் கண்ணில் உள்ள கருமணியில் பட்டுத் தான் உடலுக்குள் போகும்.
2.வேதனைப்பட்ட உணர்வுகள் கருமணிகளிலே பட்டு இழுத்து அதில் உள்ள வயர் (WIRE) எல்லாவற்றுக்கும் அனுப்புகிறது
3.கருமணிகளில் பட்டுத் தான் அந்த வீரியத் தன்மை போகிறது.

வேதனை வெறுப்பு கோபம் குரோதம் இது போன்ற உணர்வைக் கேட்டோம் என்றால் கூடக் கொஞ்ச நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… அது எங்கள் கருமணிகளிலே படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இப்படி எண்ணியவுடன் அங்கேயும் ரெக்கார்ட் ஆகின்றது கருமணிகளும் சுத்தம் ஆகின்றது கண்ணிலே ஒரு ஒளி அலைகள் வந்து அது தூய்மைப்படுத்துவதைக் காணலாம்.

ஆனால் தூய்மைப்படுத்தாதபடி வேதனை அதிகமாகச் சேரப்படும் போது சிறுநீர் கழிக்கும் போது எப்படி உறைகின்றதோ (உப்பு) இது போன்று அந்த மேக நீர்கள் கூடப்பட்டுக் கருமணியின் மேல் தோலில் படர்ந்து விடுகின்றது.

மேல் தோலில் இருந்தாலும் பரவாயில்லை…
1.அதற்குள் கருமணிக்குள் ஒரு சிறிய நிலை இருக்கின்றது
2.அதற்குள் அழுக்கு படிந்து விட்டது என்றால் அதை நோண்டிக் கழுவித்தான் இப்பொழுது வைக்கின்றார்கள்.
3.மேல் படலம் வேறு… கருமணி உள்ளே இருப்பது வேறு…! அதை எடுத்துத் தூய்மைப்படுத்திவிட்டு தான் இப்பொழுது வைக்கின்றார்கள்.

அதாவது கண்களை இரவல் கொடுக்கின்றார்கள் என்றால் ஐஸ் பெட்டியில் வைத்து… கருமணி பழுது இல்லாமல் இருந்தால் அதைத்தான் எடுத்து அடுத்தவர்களுக்கு வைக்கின்றார்கள்.

கண்ணை எடுத்து அப்படியே பொருத்துவதில்லை. சரியாக இருந்தால் கருமணியைத் தான் எடுத்துப் பொருத்துகின்றார்கள் (பேங்கில் இருந்து).

காரணம்… கண்ணின் கருமணியில் விஷத்தின் தன்மை அதிகமாக அங்கே தோய்ந்து விட்டால் அது எதுவும் இழுக்க முடியாதபடி… கிரகிக்க முடியாதபடி… மக்காகி விடுகின்றது…! பார்வை குறைந்து விடுகின்றது… திருத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.

அப்பேர்ப்பட்ட கண்களுக்கு இந்த கருமணிகளைப் பொருத்தி பார்வை உண்டாக்குகின்றனர்… “அது தனித்தன்மை வாய்ந்தது…”

காரணம் புழுவாக இருக்கும் போது தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைக் கவர்ந்து கண்கள் உருவாகி
1.அதற்குப் பின் ஒவ்வொன்றாகக் கவர்ந்து கவர்ந்து வந்து
2.மனிதனாகும்போது இந்தக் கண்ணின் கருமணிகளிலே வலுவான நிலை வருகிறது.

மனிதர்களால் இருட்டிலே மற்ற பொருளைக் காண முடிவதில்லை. ஆனால் மிருகங்களுக்கோ விஷம் அதிகம்… அதிலே எக்கோ உருவாகி இருளிலே பார்க்கும் சக்தி பெற்றது. காரணம்…
1.ஆதியிலே விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதித் ஒளியாக மாறியது
2.அதே மாதிரி இதில் உள்ள விஷமும் எதிரிலே மற்றதுடன் மோதிய பின் வெளிச்சம் ஆகின்றது.
3.மிருகங்களுக்கு இரவிலே கண் பார்வை தெளிகாகத் தெரிகிறது.

ஆனால் இன்று விஞ்ஞான அறிவு கொண்டு இரவிலே படம் எடுப்பதற்காக “கேமராக்களில் மெர்க்குரியை வைத்த பின் இதற்குள் வெளிச்சமாகி அந்தப் படத்தை எடுக்கின்றது…”

விஞ்ஞானிகள் செய்வது எனக்கென்ன தெரியும்…? குருநாதர் அதையெல்லாம் காண்பிக்கின்றார். இருந்தாலும் விஞ்ஞான அறிவிலே மிகவும் வளர்ச்சியானதை நான் (ஞானகுரு) அதிகமாகத் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.

ஏனென்றால் விஷக் கதிரியக்கங்கள் அது மிகவும் கடினமானது..! அதிலே ஆபத்துகள் வருவதை “எப்படி…?” என்கிற வகையில் கேட்டுத் தெரிந்து ஆபத்தை நீக்குவதற்ண்டான வழியை மட்டும் செய்கிறேன்.

குருநாதர் இட்ட கட்டளைப்படி ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து; ஒவ்வொரு உடலையும் கோயிலாக மதித்து; மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வங்களாக மதித்து
1.எத்தனை கோடி மக்கள் இதிலே தெளிந்து திருந்தி வாழ்கின்றார்களோ
2.அவர்களுக்கெல்லாம் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று ஈசனுக்குச் சேவை செய்கிறேன்.

இராமலிங்க அடிகள் சொன்னது போன்று “அருட்பெருஞ்ஜோதி நீ தனிப்பெரும் கருணை…” எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதையெல்லாம் உயிர் நமக்கு அறிவிக்கின்றது.

கோபப்படுவனை உற்றுப் பார்த்தால் நம்மையும் கோபப்படச் செய்கின்றது. தவறு செய்கின்றான் என்று உற்றுப் பார்த்தால் அந்தத் தவறை நமக்குள் தெரியப்படுத்துகிறது.
1.நான் தீயதைப் பார்க்கக் கூடாது… தீயதை நுகரக்கூடாது
2.தீய செயல்களுக்குப் போகக்கூடாது… அதைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பே வரக்கூடாது
3.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! என்று இராமலிங்க அடிகள் பாடுகிறார்.

அதாவது கூர்மையாக உணர்வின் தன்மை பிளந்து… எனக்குள் அறிவென்ற உணர்வை ஊட்டுகின்றாய்…! என்று அவருடைய பாடலுக்குள் மூலக்கூறுகள் எத்தனையோ உண்டு. சொல்லுக்குள் எத்தனையோ அர்த்தங்கள் உண்டு.

குருநாதர் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்து என்னைத் தெளிவாக்கினார். ஒரு பைத்தியக்காரன் போலத் தான் இருந்தார் ஆனால் பேருண்மைகளை எமக்குத் தெளிவாக்கினார்

அதைத்தான் உங்களிடம் இப்பொழுது யாம் சொல்லிக் கொண்டு வருவது…!