ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 15, 2023

நம் ஆன்மாவில் எது அதிகமாக இருக்கிறதோ… “அதுவே நம்மை இயக்கக்கூடிய சக்தியாக இருக்கும்”

வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். ஆனால் ஆண்கள் வெளியிலே வேலைக்குச் சென்று விட்டு வந்து வீட்டில் வெறுப்புடன் இருக்கின்றார்கள். அப்போது பெண்கள் ஏதாவது கேட்டால் உடனே வெறுப்பாகப் பதில் சொல்வார்கள்.

எப்பொழுது பார்த்தாலும் என்னிடம் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் என்ன செய்வது…! கொஞ்சம் அன்பாகச் சாந்தமாகச் சொல்லலாம் அல்லவா… என்பார்கள் பெண்கள்.

நானா கோபமாகப் பேசுகின்றேன்… நீ தான் எனக்குக் கோபத்தை உண்டாக்குகின்றாய்…! என்று மீண்டும் சண்டையைத்தான் ஆண்கள் போடுவார்கள்.

சண்டை போட்டவுடன்… சரி… கோபமாக இருக்கிறார்…! கொஞ்சம் பார்த்துச் செய்யலாம் என்று பெண்கள் வேலையைச் செய்தால் அடுத்து என்ன நடக்கும்…?

கணவர்… அவர் எண்ணிய வேகத்தில் அங்கே வேலை நடக்கவில்லை என்றால் “நான் சொல்வதை விட்டு விட்டு ஏறுக்கு மாறாகச் செய்கின்றாய்…! என்று பழையபடி சண்டை வரும்.

இதெல்லாம் உணர்வின் இயக்கங்கள்…! நம்மை அறியாமலே இயக்குவது.

இப்படிக் கணவர் கோபமாகப் பேசிய உணர்வுகள் என்ன செய்யும்…? அடுத்து அவர் சம்பாதிக்கப் போகும் இடங்களிலும் இதே உணர்வுகள் அங்கே தடையாக வந்து சேரும். அப்போது சம்பாதிக்கக்கூடிய நிலையைச் சரியாக வைத்துக் கொள்கிறோமா…?

காரணம்… இதெல்லாம் சந்தர்ப்பம் தான். மோதலினால் உராய்வாகி இப்படி வரப்படும்போது “இந்த உணர்வுகள் எப்படி எல்லாம் நம்மை மாற்றி அமைக்கின்றது…?” என்று நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இப்படி ஆனபின்…நம் ஆன்மாவில் எது அதிகமாக இருக்கிறதோ… “அதுவே நம்மை இயக்கக்கூடிய சக்தியாக இருக்கும்”

1.எனக்கு எல்லாமே மீண்டும் மீண்டும் கஷ்டமாக வருகிறது
2.என் மனதில் நிம்மதியே இல்லை என்ற எண்ணத்தில் தொழிலை விட்டு விடுவார்கள்.
3.சிந்தித்துச் செயல்படவில்லை என்கிற போது வேலையிலும் எதிர்ப்பு… வீட்டிற்கு வந்தாலும் எதிர்ப்பு…!

இது எல்லாம் எதனால் வருகின்றது…?

கோபத்தையும் வெறுப்பையும் விளைய வைக்கின்றேன்
1.வீட்டிற்குள் வந்து பொறுமை இல்லாதபடி சொன்ன பின்… அங்கேயும் வருகின்றது
2.அதே சமயத்தில் பொறுப்பு இழந்து தொழிலே சொல்லப்படும் போது அங்கே நாம் பார்க்கும் வேலையை மட்டமாக்குகின்றது
3.மேலதிகாரியோ அல்லது நம்மிடம் வேலை பார்ப்பவர்களோ நம்மிடம் எதிர்மறையாகச் செயல்படும் நிலை வந்து விடுகின்றது

இது எல்லாம் எங்கிருந்து எப்படி.. வருகிறது…?

குடும்பப் பற்றில் ஒருவர் இப்படி ஆகிவிட்டால் இந்த உணர்வுகள் குடும்பம் முழுவதும் பரவுகிறது. இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

அப்பொழுது அந்த இடத்திலே சுதாரித்து… நமக்குக் கோபம் வருகின்றது… அது எதனால் வருகின்றது…? என்று அறிதல் வேண்டும். தியானத்தைச் சீராகக் கடைப்பிடித்து வந்தால் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள முடியும்.

1.நம்முடைய உணர்ச்சிகள் ஏன் மாறுகின்றது…? என்று அதை மடக்கித் திருப்பி
2.அடுத்த கணமே அதை மாற்றி அமைக்க… ஆத்ம சுத்தியும் செய்யச் சொல்லும்.

இதையெல்லாம் உங்கள் அனுபவத்திலே தெரிந்து கொள்ளலாம்

ஆனால் அந்தப் பழக்கம் இல்லை என்றால் மீண்டும் சண்டைக்குத் தான் செல்வோம். அதற்குப் பின் வீட்டில் சண்டை வருகின்றது… எங்கே போனாலும் ஒரே பிரச்சினையாக இருக்கின்றது… நான் சொன்னால் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்…! என்று அப்படித்தான் போகும்

அதே சமயத்தில் முழுமையாகத் தெரியாதபடி “இந்தத் தியானத்தைத் தான் கடைபிடிக்கிறேன்” என்று ஒரு சிலர் நான் எதைச் செய்தாலும் எனக்குத் தொல்லையே வருகிறது… தொல்லை விடமாட்டேன் என்கிறது…! என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

காரணம்… இது எல்லாம் தாய் கருவிலே பூர்வ புண்ணியத்தால் வருவது. அப்படிப் பூர்வ புண்ணியத்தில் வந்தாலும் கூட துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இந்த உணர்வைக் கூட்டி நாம் அதையும் மாற்ற முடியும்

நம்மை அறியாமல் இயக்கக்கூடிய அத்தகைய நிலைகளை அடக்குவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியே கொடுக்கப்படுகின்றது. செய்து பார்த்தேன் முடியவில்லை என்று விட்டுவிடக்கூடாது.

அடுப்பில் சமையல் செய்கின்றோம் என்று அவசரத்துக்கு வேக வைத்தால் எப்படி ஆகும்…?

நெருப்பைக் கூட்டியவுடன் அடியில் உள்ளது கருகிவிடும். நடுப்பகுதியில் உள்ளது ஒரு மாதிரி இருக்கும் மேலிருப்பது வேகாமலே போய்விடும். இப்படி மூன்று நிலை ஆகிவிடும். நெருப்பை வைப்பதில் இத்தனை நிலைகளும் இருக்கிறது.

அதாவது கனமாக இருக்க கூடிய பொருள்கள் கீழே சென்று விடுகின்றது.. கருகிவிடுகிறது. அதற்கு மேல் இருப்பது குழைந்து விடுகின்றது அதற்கு மேல் அப்படியே அரிசியாக இருக்கின்றது. சூட்டினுடைய இயக்கங்கள் இப்படி மூன்று விதமாக வருகின்றது. சமையலில் பக்குவம் இல்லை என்கிற பொழுது சாப்பிட முடியாது போய்விடுகின்றது.

கோபமாக இருக்கும் பொழுது பாருங்கள்… அடுப்பிலே சூட்டை அதிகமாக்கிக் கொண்டே செல்வார்கள். அப்போது (வேகமாக) கொதித்து வரும் பொழுது கோபத்துடனே மூடியை வெடுக் என்று எடுப்பார்கள்.
1.துணியை வைத்து எடுப்பதற்கு மாறாக அப்படியே கையில் எடுப்பார்கள்
2.சூடு கையில் தாக்கியவுடன் சனியன்…! எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தேன்
3.கடைசியில் என் கையில் சுட்டு விட்டது…! என்று யாரால் இவர்கள் கோபமானார்களோ அவர்களைத்தான் குற்றமாகச் சொல்வார்கள்.

காரணம்… இது எதைச் செய்கிறது என்றால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான். இயக்கச் சக்தியாக மாறி நம்மை அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. இதை எல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா

இந்த மாதிரி உணர்வுகள் வந்தாலும் நம்மை அது ஆட்சி புரியக்கூடாது. ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
1.எதனால் அந்தக் கோபம் வந்ததோ அந்த நிலையை மாற்ற
2.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
3.என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
4.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… சிந்திக்கும் ஆற்றல் வர வேண்டும் என்று
5.இதை நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்.

நம் சொல் அடங்கி அடுத்து மற்றவர்களுக்கு நாம் தெளிவான ஆலோசனைகளைச் சொல்லக்கூடிய… பக்குவமான நிலையாக அது வெளிப்படும்.

ஆண்கள் கோபமாகப் பேசினாலும் பெண்கள் இந்த முறைப்படி செய்து தன்னையும் சாந்தப்படுத்தி… கணவரையும் சாந்தப்படுத்த முடியும்

இல்லையென்றால் ஓம் நமச்சிவாய… சிவாயநம ஓம்… அதாவது அவர்கள் உணர்வு இங்கே இயக்கி “என் கணவர் என்னைப் பார்த்துக் கோபமாகவே பேசுகின்றார்… என்னை பார்த்தாலே அவருக்கு ஆக மாட்டேன் என்கிறது…! என்று இப்படி வந்துவிடும்

அதற்குப்பின் கணவரிடம் என்னதான் திருப்பிச் சொன்னாலும் அந்தச் சொல் அங்கு எடுபடாது. சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். ஒவ்வொரு நொடிப்பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுத்து… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று இந்த உணர்வை வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்
1.என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
2.இதை நாம் ஒரு கவசமாக ஆக்கி… நம் ஆன்மாவிலே அதை அதிகமாக்கி… முன் பகுதிக்குக் கொண்டு வர வேண்டும்.