ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 7, 2023

முறைப்படி தியானம் செய்தால் உங்கள் மூச்சலைகள் பட்டாலே “பளீர்… என்று ஒளிகள் மின்னும்…”

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் கணவர் பெற வேண்டும்… என் மனைவி பெற வேண்டும்… அவர் இரத்த நாளங்களில் கலந்து ஜீவான்மா ஜீவணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும்; எங்கள் இரு மனம் ஒன்றாக வேண்டும்; இரு உயிரும் ஒன்ற வேண்டும்; இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்; அருள் ஞான சக்தி எங்கள் இருவருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் என்று இருவருமே “தினமும் ஒரு பத்து நிமிடமாவது” ஒருவருக்கொருவர் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

1.இரவு முழிப்பு வரும் பொழுதெல்லாம் இதைப் போன்று செய்ய வேண்டும்
2அதே சமயத்தில் இரவு படுக்கும் போது எண்ணிவிட்டு உறங்கச் சென்றிருந்தால் காலையில் நான்கு மணிக்குத் தன்னாலே விழிப்பு வரும்.
3.நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் நிச்சயமாகத் தட்டி எழுப்பும்… உங்களை அறியாமலே அந்த முழிப்பு வரும்.

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

ஆண்கள் தங்கள் மனைவிக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்றும் பெண்கள் தங்கள் கணவருக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்றும் “அவசியம்” எண்ண வேண்டும்.

அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் குரு அருள் அவர் பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் அவர் பார்வையில் மற்றவர்கள் இருளைப் போக்கும் சக்தியாக அந்த உயர்ந்த சக்தி அவருக்குக் கிடைக்க வேண்டும்.

1.அவர் பார்ப்பவர் எல்லாம்… அவரைப் பார்ப்போர் எல்லாம்… நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று
2.இப்படிக் கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் இந்த உணர்வைப் பாய்ச்சி பழகுதல் வேண்டும்.

மற்றதை அதிகமாக எண்ண முடியவில்லை என்றாலும் இப்படி எண்ணினாலே போதுமானது.

அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும்… செயலிலே புனிதம் பெற வேண்டும்… அவரைப் பார்ப்போர் எல்லாம் அந்தப் புனித நிலை பெற வேண்டும் என்று கணவன் மனைவிக்கு எண்ணுவதும்… மனைவி கணவனுக்கு எண்ணுவதையும்… இரண்டு பேருமே ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்

1.காலையில் எழுந்து அடுத்த வேலைகளைச் செய்யும்போது ஒரு ஆனந்தமான நிலை ஏற்படும்.
2.உங்கள் வீட்டில் இந்த உணர்வுகள் பாய்ந்து பளீர்… பளீர்..ர்ர்… என்று வெளிச்சங்கள் வரும்… வீட்டுக்குள்ளே ஒரு விதமான வெளிச்சம் வரும்.

ஏனென்றால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து ஒருவருக்கொருவர் பாய்ச்சப்படும் பொழுது
1.அந்த அலைகள் வீட்டிற்குள் பட்ட உடனே மோதி இருளை நீக்கி
2.பளீர்..ர்ர்… என்று வெளிச்சமாகத் தெரிய வரும் பார்க்கலாம்…!
3.உங்கள் மூச்சலைகள் பட்டு அத்தகைய நிலை ஏற்படுகின்றது.

சூரியன் தான் வெளிப்படுத்தக்கூடிய பாதரசத்தால் மற்ற நிலைகள் அருகில் வரும் போது அதிலே மோதி விஷத்தைப் பிரித்து விட்டுப் பளீர்… என்று இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக ஆக்குகின்றது.

இதே மாதிரித் தான்
1.கணவன் மனைவி இருவருமே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து ஒருவருக்கொருவர் பாய்ச்ச…
2.அந்தச் சக்தி தீமைகளில் மோதியவுடன் விலகிப் போகும்.
3.உங்களுக்குள் வெளிச்சங்கள் தோன்றும்… புது விதமான மகிழ்ச்சி இருவருக்குமே ஏற்படும்.

அனுபவத்தில் நீங்கள் இதைத் தெரிந்து கொள்ளலாம்…!

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும் பொழுதும் சரி… இரவு படுக்கைக்குச் செல்லும் போதும் சரி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இருவருமே எடுத்து ஒருவருக்கொருவர் பாய்ச்ச வேண்டும்.

இப்படி இருவருமே செய்து வந்தால்
1.உங்களுக்கு உபதேச வாயிலாக யாம் பதிவு செய்யும் ஞான வித்திற்கு
2.சக்தியை (சத்தை) ஊட்டிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

இந்த அருள் ஞானப் பயிர் உங்களுக்குள் வளர வளர பேரருள் பேரொளியாக நீங்கள் இருவருமே மாறுவீர்கள்.