ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2023

துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக “யாம் கொடுக்கும் நினைவுச் சின்னம்”

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பிறவி இல்லாத நிலை அடைந்தார்… ஒளியின் சரீரமாக இருக்கின்றார். அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நாம் நமக்குள் சேர்த்து இந்த வாழ்க்கையில் வரும் இருளைப் போக்கிக் கொள்ளலாம். இது நம் பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராக உள்ளவர்களுக்கு அருள் ஞானச் சக்கரம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் துருவ நட்சத்திரத்தை எண்ணி… அந்தச் சக்கரத்தை உற்றுப் பாருங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிகள் அந்தச் சக்கரத்திலிருந்து வரும்
2.நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… அது வளர ஆரம்பிக்கும்… உங்களுக்கு ஒரு தெளிவான மனது கிடைக்கும்.
3.இதனுடைய வரிசையில்… வளர்ச்சியாகி வரும் பொழுது நம் பிரபஞ்சமும் தெரியலாம்…
4.நமக்கு வழிகாட்டக்கூடிய மகரிஷிகள் யார்… யார்…? என்றும் நிச்சயமாகத் தெரிய வரும்.

தெரிய வரும் என்று இப்போது சொன்ன பின்… “எனக்குத் தெரியவில்லையே…!” என்று எண்ணத்திற்கு நீங்கள் போகக்கூடாது.

யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி “துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்…” என்ற உணர்வை மட்டும் நீங்கள் செலுத்தி அதை நுகர்ந்து கொண்டு வந்தாலே போதுமானது.
1.இது உங்களுக்குள் வளர்ச்சியாக…
2.தன்னாலே அந்த உண்மைகளை… நீங்களே அறிய முடியும்

ஒரு விதையை மண்ணிலே ஊன்றி.. அது முளைத்து வளர்ச்சியாகி வருவதற்கு முன்னாடியே அதிலே பூவைக் காணோம்… காயைக் காணோம்… கனியைக் காணோம்… வித்தைக் காணோம்…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் சரியாக வருமா…!

காரணம்… எத்தனையோ கோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி அடைந்த பின் தான் மனிதனாக இப்போது வந்திருக்கின்றோம். மனிதனாக வாழும் சந்தர்ப்பத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு உணர்வுகளுக்குள்ளும் இணை சேர்க்க வேண்டும்.

1.எல்லா உணர்வுகளிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்க்க வேண்டும் என்பதற்குத்தான்
2.அதை ஈர்க்கும் ஆற்றலும்… அந்த நினைவின் ஈர்ப்பும் வருவதற்காக
3.ஒரு மூன்று வருட காலம் அருள் உணர்வுகளைப் பாய்ச்சி அருள் ஞானச் சக்கரமாக உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அதை உங்கள் பூஜை அறையிலோ அல்லது உங்களுக்கு வசதியாகப் பார்க்கக்கூடிய இடங்களிலே அதை அமைத்துக் கொண்டு எங்கே வெளியே சென்றாலும் சரி… அதற்கு முன் நின்று பிரார்த்தனை செய்து.. அடுத்து உங்கள் காரியங்களைச் செயல்படுத்திப் பாருங்கள்.

குழந்தைகளுக்கு கல்வியாக இருந்தாலும் சரி… வியாபாரமோ தொழிலாக இருந்தாலும் சரி… அல்லது குடும்ப சம்பந்தமாக இருந்தாலும் சரி… எல்லாமே நலமும் வளமும் பெற வேண்டும்… எல்லோருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்துங்கள்.

எந்தக் காரியமாக (நல்லது) இருந்தாலும் சரி… “அது ஜெயமாக வேண்டும்” என்ற உணர்வை மீண்டும் மீண்டும் வலுப்பெறச் செய்யுங்கள்… மன உறுதி கிடைக்கும். உங்கள் சொல் கேட்பவர்களுக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சியூட்டும்.

1.எப்படியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான்
2.அருள் ஞானச் சக்கரம் (நினைவுச் சின்னமாக) கொடுக்கின்றோம்.

நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… குரு அருள் அவர்கள் பெற வேண்டும்… அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.அவரவர்கள் தனித்து நீங்கள் எண்ணினாலும் எல்லோருமே இப்படி எண்ணும் பொழுது
2.இது ஒரு பெரும் கூட்டமைப்பாக… ஏகமாக அமைகின்றது.

நண்பனுக்கு நண்பன் உதவி செய்தான் என்று எண்ணினால் விக்கல் ஆகிறது… துரோகம் செய்கின்றான் தொல்லை கொடுக்கின்றான் பாவி என்றால் புரையேறுகின்றது.

இதைப் போன்று இந்த அருள் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று சக்கரத்தைப் பார்த்து இந்த நினைவை இந்த உணர்வைச் செலுத்தினால் அனைவருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்கக்கூடிய தகுதி உருவாகின்றது.

குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் அது கிடைக்கின்றது குடும்பத்தில் ஒன்று சேர்ந்து வாழவும் மகிழ்ச்சியான உணர்வுகளை வளர்க்கவும் எதுவாகிறது.

நாம் குடியிருக்கும் தெரு மக்கள் நன்றாக இருக்க வேண்டும்… நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் வேலை செய்வோர்… எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்… அவர் குடும்பம் நலம் பெற வேண்டும்.

அதே போன்று இந்த ஊரும்… உலக மக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்று இப்படி வரிசைப்படுத்தி எண்ண வேண்டும்.

ஏனென்றால் எல்லோருடைய உணர்வுகளும் ஏதோ ஒரு வகையில் நமக்குள் பதிவாகி விடுகின்றது.
1.அவர்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டும்… அவர் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று
2.இந்த உணர்வைச் சேர்க்கச் சேர்க்க… நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொன்றையும் அரவணைக்கும் சக்தியாக வளர்கின்றது
3.வெறுப்பின் தன்மை மாறுகின்றது… பேரானந்த நிலை கிடைக்கிறது.

கூட்டாகத் தியானம் செய்யும் போது இதை எல்லாம் எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.

அதே சமயத்தில் நம் வீட்டிலும் சரி அல்லது வேறு எங்கு தியானம் செய்தாலும் அந்த ஒளி அலைகள் அங்கிருக்கக்கூடிய வீட்டின் சுவரிலே பதிகின்றது. நம் வீட்டிற்குள் மகிழ்ச்சி பெருகுகின்றது.

உதாரணமாக வேலை நிமித்தம் நாம் வெளியிலே சென்றாலும் சந்தர்ப்பவசத்தில் சண்டையிடுவோரையோ வேதனைப்படுவோரையோ பார்த்துவிட்டுத் தான் வீட்டுக்குள் வருகின்றோம்.
1.களைப்பாக வந்தவுடனே “உஸ்ஸ்… அப்பா…” என்று சோர்வடையப்படும் போது
2.அடுத்து அந்த சண்டையிட்ட வேதனைப்பட்ட உணர்வுகள் பிறிதொரு மூச்சலைகள் இங்கே நமக்குள் இயக்கமாகின்றது.

ஏனென்றால்…
1.திறந்த வெளியில் இருப்பது வேறு… அந்த சொல் வேறு விதமாக இருக்கும்
2.ஒரு வீட்டிற்குள் அடைப்பட்ட இடத்திலே வெளிப்படுத்தும் போது… இந்த சொல் அதனுடைய ஒலி (ECHO) வித்தியாசமாக வரும்.

அதாவது வீட்டின் சுவர்களில் கட்டிடங்களிலே பாய்ந்து தான் இந்த உணர்வு (சொல்லின் ஒலி) வெளி வருகின்றது. சோர்வடைந்தது… வேதனைப்பட்டது… அது போன்ற தீமை செய்யும் உணர்வுகள் வீட்டின் சுவரில் இருந்தால் அது நம்மை அதன் வழிக்கே இழுத்துச் சென்றுவிடும்.

அதை மாற்ற வேண்டுமல்லவா…!

ஆகவே ஏற்கனவே பதிவான அந்தத் தீமையோ வேதனையோ கோபமோ அதை மாற்றி அமைக்க
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த வீடு முழுவதும் படர வேண்டும் என்று நாம் பரப்பியே ஆக வேண்டும்
2.இவ்வாறு செய்யச் செய்ய பேரானந்தப் பெரு நிலையாக வாழக்கூடிய
3.அந்த உன்னதமான நிலையை உணர முடியும்…!

செய்து பாருங்கள்.