ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 28, 2023

போற்றலுக்காக ஏங்கினால் ஆற்றலை இழந்து விடுவோம்

விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளில் ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்தால் எந்த நிலை ஆகிறது...? என்று பார்ப்பார்கள். அதைச் செய்து முடித்து ஓட்டும் போது செயலிழந்து விட்டால் அது எப்படி... ஏன் தவறாக ஆனது...? என்று உடனே கண்டுபிடிப்பார்கள்..

உதாரணமாக ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றார்கள் என்றால் கால சூழ்நிலை எல்லாம் பார்த்துத் தான் அனுப்புகின்றார்கள்.
1.போகும் பாதையில் 27 நட்சத்திரங்களுடைய அதிர்வுகள் வரும்.
2.இராக்கெட் செல்லும் பாதையில் இந்த அதிர்வுகள் அதிகமானால் இயந்திரத்தைத் தாக்கும் தன்மை வரும்.
3.அதிர்வுகளிலிருந்து மீட்பதற்காக மேக்னட்டை (காந்தத்தை – SENSOR) வைத்திருப்பார்கள்.

அதிர்வினால் தாக்கப்பட்டு கீழே விழுந்தாலும் அந்த உணர்வின் தன்மையை பூமியில் (தரையில்) தொடர்பு வைத்திருப்பார்கள்.

இராக்கெட்டில் சென்றவன் இறந்தாலும் இது எந்த அதிர்வினால் தாக்கப்பட்டது...? என்று கண்டறிந்து... இதற்கடுத்து பாதுகாப்பான நிலைகள் கொண்டு இராக்கெட்டை அனுப்ப முற்படுகின்றார்கள்.

ஏற்கனவே அனுப்பியது எரிந்து கடலிலே விழுந்து விடுகின்றது. ஆனாலும் அதிலே எதிர்மறையான உணர்வின் எக்கோ (ECHO) அதிலே பதிய வைத்திருப்பான்.

பதிவானதை எடுத்துப் பரிசீலித்து
1.இராக்கெட் எதனால் செயல் இழந்தது...?
2.எதனுடன் எது மோதியது...? ஏன் இவ்வாறு பாழடைந்தது...?
3.எதனால் கீழே விழுந்தது...? என்று கண்டுபிடித்து அதைச் சரி செய்து மீண்டும் இராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புகின்றனர்.

அது ஏற்கனவே நடந்த நிகழ்ச்சி. ஆரம்பத்தில் அமெரிக்கா... இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி அதை மீண்டும் திரும்பத் தரையில் இறக்கலாம் என்று விரும்பினார்கள்.

ஆனால் ரஷ்யா அதை என்ன செய்தது...?

விஞ்ஞானத் தத்துவப் பிரகாரம்
1.மனிதனின் உணர்வுகளை அந்த இயந்திரத்தில் (அமெரிக்க செலுத்திய இராக்கெட்டில்) பின்னாடி அது இணைக்கப்பட்டு
2.எக்கோ (ECHO)... கண்களைக் கொண்டு உடலில் பதிவு செய்து “எர்த்” ஆக்கி
3.இராக்கெட் விண்ணிலே சென்ற பின் உணர்வைப் பாய்ச்சி எரியும்படி செய்தான்.

இரண்டு மூன்று தடவை இவ்வாறு செயல்படுத்தினார்கள். அமெரிக்கா இராக்கெட்டுகள் இப்படி வீழ்ச்சி அடைந்தது.

பின்பு இது எதனால் வந்தது...? அந்த எக்கோ எதிலிருந்து பாய்ச்சப்படுகிறது...? என்று அவன் அறிகின்றான். ரஷ்யாவில் இருந்து தான் இது பாய்ச்சப்பட்டது என்று அறிந்து கொள்கிறார்கள்.

அறிந்த பின் அமெரிக்கா என்ன செய்கின்றது...?

ரஷ்யா தான் தன் இராக்கெட்டுகளை வீழ்த்தியது என்று கண்ட பின் ரஷ்ய அணு மின் நிலையத்தைக் கதிரியக்கங்களைப் பாய்ச்சி அதைச் செயலிழக்கும்படி செய்தான் அமெரிக்கா.

விஞ்ஞானத்தின் இவன் உணர்வுகள் எப்படி வளர்ந்தாலும் இதை எல்லாம் குருநாதர் காட்டிய வழியில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

ரஷ்ய அணு மின் நிலையம் வெடித்த பின் விவசாயம் மற்றது எல்லாம் அங்கே பாழ்பட்டது. விஷத்தின் தன்மை அதிகமான பின் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டது.

அந்த நாட்டிற்குள் கடவுளின் தன்மையைப் புகுத்தி மதப் போர்கள் இனப் போர்கள் அதிகமாகி... மக்களை அதை வைத்துப் பிரிக்கும் தந்திரத்தைக் கையாண்டது அமெரிக்கா.

அதனால் ரஷ்யா வல்லரசாக இருந்தாலும் பிரிந்து... வீழ்ச்சி அடைந்து விட்டது. இருந்தாலும் எல்லாப் பக்கமும் சேர்ந்து நெருக்கடி ஆகும் பொழுது அமெரிக்காவும் இன்று செயலிழக்கும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

உலகம் சுருங்கிக் கொண்டிருக்கும் இத்தகைய வேளையில் உலகைக் காக்கும் ஞானிகள் நம் நாட்டில் இருந்து வருவார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எந்தத் தாய் தந்தையர் அருள் உணர்வை வளர்த்துக் கொண்டார்களோ அவர்கள் கருவிலே ஞானக் குழந்தைகள் உருவாகி அவர்கள் தான் அதைச் செயல்படுத்துவார்கள்.

மெய் ஞானிகளைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் அந்த உயர்ந்த சக்திகளை நீங்கள் எடுக்கப் பழக வேண்டும் ஒவ்வொரு நிமிடத்திலும் அதை சேர்த்துப் பாருங்கள்.
1.உடலில் அந்த அணுக்கள் விளைந்து கொண்டே வரும்
2.நீங்கள் எண்ணக்கூடிய காரியங்கள் ஜெயமாகிக் கொண்டே வரும்
3.நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை செல்வம்.. தன்னாலே தேடி வரும்
4.உங்கள் சொல் பேச்சு இவைகளுக்கு மரியாதை கிடைக்கும்
5.பிறருடைய கஷ்டங்களும் நீங்கும்... உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணங்களும் வரும்.

அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் விளைய வைத்து அதை நீங்கள் வெளிப்படுத்தும் போது நண்பர்களுக்குச் சொன்னால் அவர்களுக்கும் நல்லதாகும்.

உங்களிடம் பேசி விட்டுச் சென்ற பின் என் தொழிலில் நன்றாக நடந்தது குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைத்தது என்று சொல்வதை நீங்கள் கேட்க முடியும். இதை எல்லாம் உங்கள் அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அருளைப் பெற வேண்டும் என்று சென்றால் நல்ல சிந்தனை வரும் எல்லாமே நம்மைத் தேடி வரும். உங்கள் எல்லோரையும் உயர்த்தும்.

அதைக் கண்டு மற்றவர்கள் போற்றலாம்
1.போற்றலுக்கு ஆசைப்பட்டு அதன் வழி சென்று விட்டால் நம்முடைய ஆற்றல் போய்விடும்
2.நாம் போற்றலுக்காக ஏங்கக் கூடாது.

எல்லோரும் உயர வேண்டும் என்ற அந்த உணர்வைத் தான் நாம் போற்ற வேண்டும். இல்லை என்றால் ஆற்றலை இழந்து விடுவோம்... நல்லதைச் செய்தும் பலன் இல்லாது போகும்.

எதுவாக இருந்தாலும் போற்றலுக்காக வேண்டி அதைச் செய்தால் பின்னாடி வெறுப்பின் தன்மையைத் தான் ஊட்டும். வெறுப்பான பின் நாம் செய்தும் பலன் இருக்காது. வெறுப்பு வளர வளர எல்லார் மேலும் அதிகமாகி கார உணர்ச்சிகள் தான் அதிகமாகும்.

ஆகவே... உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்...? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் கார்த்திகேயா என்ற நிலையில் ஞானிகள் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து ஒளியின் சரீரமாக நாம் உருவாக்குதல் வேண்டும்.
1.மீண்டும் இன்னொரு உடல் பெறக் கூடாது
2.இந்தச் சரீரத்திலிருந்தே ஒளிச் சரீரம் பெறுதல் வேண்டும்
3.உயிருடன் ஒன்றும் உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.