ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2023

மகரிஷிகளுடன் நாம் ஒன்றும் வழி

1.எத்தனை வகையான உணர்வுகளுடன் இயங்குகின்றோமோ அத்தனை உணர்வுகளையும் தட்டி எழுப்பி
2.அந்தந்த உணர்வுகளுடன் மகரிஷிகளின் உணர்வுகளை இணைக்கச் செய்வதற்கும்
3.நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வுக்குள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் செய்வதற்கும்
4.நடைமுறையில் இயக்கும் உணர்வுகளையும் உங்களுக்குள் தூண்டச் செய்து மகரிஷிகளின் உணர்வை இணைக்கச் செய்வதும் தான்
5.”இயக்கமும்... உணர்வின் சேர்க்கையும்...” என்ற நிலையில் இப்பொழுது உங்களுக்குள் எம்மால் (ஞானகுரு) உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளது.

அதன் வழியில் வளர்க்கப்படும் பொழுது அது உங்களுக்குள் வளர்ச்சி பெறும். எத்தனையோ விதமான குணங்கள் நமக்குள் இயங்கிக் கொண்டுள்ளது “அத்தனை குணங்களிலும்” நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இணைத்தல் வேண்டும்.

அது மட்டுல்ல...
1.வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் நம்மை மோதும்
2.அக்காலங்களில் மகரிஷிகள் உணர்வுகளை அதனுடன் இணைத்தல் வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்... அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நாம் சேர்த்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்க்கையில் இவ்வாறு நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

ஏனென்றால் சிறு பிள்ளையாக நாம் வளர்ந்ததிலிருந்து எத்தனையோ உணர்வுகள் நமக்குள் வித்தாக ஊன்றப்பட்டு இருக்கிறது.

“ஊழ்வினை” என்று அவைகள் இருப்பினும் வினைக்கு அந்த உணர்வின் அணுவாக வளரப்பட்டு அதனின் மலமாக நம் உடலுக்குள் அணுக்களாக உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

1.அப்படி வளர்த்துக் கொண்ட அணுக்கள் அது முதுமை அடைந்து விட்டால் அதனுடைய மலம் குறையும்
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் இணையும்.
3.இணைந்து கொண்ட உணர்வுகள் உடலை விட்டுச் சென்ற பின் உயிருடன் ஒன்றும்
4.எது உயிருடன் ஒன்றுகிறதோ அது தான் நம்முடைய அடுத்த நிலைக்குக் காரணமாகிறது.

அதாவது பரமாத்மாவிலிருந்து நம் ஆத்மாவாகி உடலில் ஜீவாத்மாவாக விளைந்து அதிலே வடித்தது உயிராத்மாவாக மாறுகிறது.

ஏனென்றால் இந்த உடல் பெறும் உணர்வுக்கு அந்த மலம் இல்லை என்றால் அணுவின் தன்மை உடல் குறையும். ஆனால் அந்த உடலின் உணர்வின் தன்மை அணுவின் மலம் (தசைகள் உறுப்புகள்) அது முதுமை அடையப்படும் போது உயிருடன் ஒன்றி நிலைகொள்ளும். அந்த உணர்வின் அணுவே உயிருடன் ஒன்றி வெளி வரும்.
1.மீண்டும் தன் இனத்தைப் பெருக்க அதனின் செயலாக்கத்தை உருவாக்கிவிடும்
2.ஆகையினால் தான் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியினை எல்லாவற்றிலும் இணைத்தல் வேண்டும் என்று யாம் சொல்வது

வாழ்க்கையில் எத்தனையோ விதமான சந்தர்ப்பங்கள் வரும். அத்தனை சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்போது
1.அந்த மகரிஷிகளுடன் ஒன்றி நாம் ஒளியின் உணர்வாகவே நாம் வளர்கின்றோம்.
2.ஆகவே எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பேராசை கொள்ளுங்கள்.