ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 2, 2023

என்னுடைய ஆசீர்வாதம் துன்பத்தைத் தாள் பணியச் செய்வதற்குத் தான்…!

வியாசகர் கீதையில் சொன்னது போன்று “குருக்ஷேத்திரப் போர் - ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணுங்கள்.. அது தான் உடலுக்குள் இருக்கும் அனைத்துக்கும் குரு.

ஓ…ம் என்பது பிரணவம் (ஜீவன்)… நாம் எண்ணியது ஜீவன் பெறுகின்றது ஆகவே உயிரை எண்ணி…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
3.குருக்ஷேத்திரத்தில் அவனிடமே கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து
3.அதைப் உணர்வு பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருங்கள்.

அந்த உணர்வின் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று… நான் கொடுக்கும் இந்த உணர்வின் நிலைகள்… அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடியதாக தகுதி பெற்று…
1.யாம் உபதேசித்த ஆற்றல் மிக்க சக்தியை
2.எண்ணிய போது எண்ணிய நிலைகள் கொண்டு உங்களுக்குள் கிடைக்கச் செய்து
3.துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் தாள் பணியச் செய்வதே “என்னுடைய ஆசி… (ஞானகுரு)”

ஆகவே அதைப் பெற வேண்டும் என்ற ஆசை கொண்டு மேல் நோக்கி நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்; என் உடலில் இருக்கக் கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும்; என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்; என் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்; நான் பார்ப்பதெல்லாம் அனைத்தும் நலம் பெற வேண்டும்; நான் பார்ப்போர் எல்லாம் நல்லதாக வாழ வேண்டும்…! என்று இதை மட்டும் எண்ணிக் கொண்டு வாருங்கள்.

1.உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அனைத்தும் தாழ் பணிந்து
2.உங்களுக்குள் ஒத்துழைத்து… உயர்வான எண்ணங்களுக்கு வழி காட்டியாக அது அமையட்டும்.

எது…?

எதுவும் கெட்டது அல்ல…!
1.உங்களுக்குள் வலுவூட்டும் வழி காட்டியாகவும் அது இருக்கும்.
2.கெட்டது என்று அதுதான் காட்டுகின்றது
3.அதை நீக்கி நாம் செல்ல வேண்டும்
4.கெட்டது என்று வழி காட்டினாலும் இந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்ந்து விடுகின்றது
5.ஆனால் வழி காட்டிய நிலைகளும் எனக்குள் பணிந்து நல் வழி காட்டியாக இருக்க வேண்டும்.
6.வழி காட்டிய அந்த நிலைகள் - “விஷமே” என்னை ஆட்கொண்டு விடக்கூடாது.

ஆசீர்வாதம் என்பது மெய் ஒளி பெறும் அந்தத் தகுதியின் தன்மை கொண்டு நாம் பெற வேண்டும் என்று அதுதான் ஆசி.

மீண்டும் மீண்டும் யாம் இதைச் சொல்வதன் நோக்கமே
1.அரசனுக்கு கீழ் பணிவது என்பது கௌரவத்திற்காக வேண்டிப் பணிவது
2.பெரியவரைக் கண்டால் பணிவது வேறு…
3.நமக்குள் ஒன்றைப் பணியச் செய்வது வேறு…!

அருள் வாக்கின் தன்மைகள் மெய் ஒளி நமக்குள் வளர்ந்து தீமை செய்து கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மை அதைத் தாள் பணியச் செய்வதே “ஆசீர்வாதம்…”

ஆகவே “நீங்கள் எப்பொழுதும் அந்த மெய் ஒளி பெற வேண்டும்…” என்று அந்த உணர்வின் அடிப்படையிலேயே உங்களுக்கு ஆசி வழங்குகின்றேன் அதை நீங்கள் பெறும்படி வேண்டிக் கொள்கின்றேன்.