ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 5, 2023

எலெக்ட்ரிக் மீன்

27 நட்சத்திரங்களின் சக்திகளும் கடுமையான விஷத்தன்மை கொண்டது ஏனென்றால் அது பிற மண்டலங்களிலிருந்து எடுத்துக் கொண்டது.

1.நம் பூமிக்குள் வரும் பொழுது மின்னலாக மாறுகின்றது.
2.கடலிலே தாக்கப்படும் பொழுது மணலாக மாறுகின்றது
3.விஷத்தின் தன்மை மற்ற தாவர இனங்களில் எதிர்மறையாக பொழுது மரம் கருகுகின்றது
4.இதன் உணர்வின் ஈர்ப்பு பூமிக்குள் நடு மையம் சென்றால் அந்த உணர்வின் வேகத்தால் பாறைகள் உருகுகின்றது.
5.பாறைகள் உருகிய பின் நிலநடுக்கம் ஆகின்றது.

இது எல்லாம் 27 நட்சத்திரங்களின் மின்னலால் ஏற்படும் நிலைகள்.

ஆனால் இத்தகைய நஞ்சையும் அடக்கிப் பழகியவன் அகஸ்தியன். தாய் கருவிலிருக்கும் போது பெற்ற பச்சிலை மூலிகைகளின் சக்தியால் அவனுக்கு அந்த ஆற்றல் கிடைக்கிறது.

மின்னலிலிருந்து வரக்கூடிய ஆற்றல்களை வெள்ளிக் கோள் அந்த ஒளிக்கற்றைகளை எப்படி எடுத்துக் கொள்கின்றதோ… அதைப் போல் அகஸ்தியன் தன் உடலுக்குள் அதைப் பெருக்கி… உயிரைப் போன்ற உணர்வின் அறிவாக “ஒளியாக மாற்றிக் கொள்கின்றான்…”

மின்னல் தாக்கப்படும் பொழுது கடலிலே விழுந்தால் ஒரு பக்கம் மணலாக மாறினாலும்… அந்த மணலுக்கடியில் சந்தர்ப்பத்திலே ஒரு மீன் சென்றால் அதன் மீது மின்னல் தாக்கப்பட்டால் அது “எலக்ட்ரிக் மீனாக…” மாறுகின்றது.

1.எப்படி மின்னல் தாக்கும் பொழுது “ஒளிக்கற்றைகள்…” உருவாகின்றதோ
2.இந்த உணர்வின் தன்மை மீன் இனங்களுக்குள் சென்ற பின்
3.உராய்ந்து செல்லும் பொழுது எலக்ட்ரிக் மீனாக மாறுகிறது.

இயற்கையின் நிலையில் இவ்வாறு தான் மாற்றங்களாகின்றது என்று அகஸ்தியன் கண்டு கொள்கின்றான்.

அகஸ்தியன் துருவனாகி அவன் பதினாறாவது வயதில் திருமணமான பின் அவன் கண்ட இயற்கையின் உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்குச் சொல்கிறான்.

அகஸ்தியனின் மனைவி தன் உடலுக்குள் அதைப் பதிவாக்கி வளர்த்துக் கொண்ட பின் “தன் கணவன் உயர வேண்டும்…” என்று எண்ணுகின்றது இப்படி இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் உயர்த்திடும் உணர்வு கொண்டு
1.துருவ ரிஷியாக (துருவ மகரிஷி) மாறுகின்றனர்.
2.கணவன் மனைவி ஒன்றிணைந்து ரிஷித் தன்மை பெறுகின்றனர்
3.இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றாகித் துருவ நட்சத்திரமாகின்றனர்.

தாவரங்களோ உயிரினங்களோ எதுவாக இருந்தாலும் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தால் தான் அதனுடைய இன வித்துக்களை உருவாக்க முடியும்.

ஆகையினால் தான் கணவன் மனைவியாக இந்த அருள் சக்திகளைப் பெறும்படி சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவன் தன் மனவி பெற வேண்டும் என்றும்… மனைவி தன் கணவன் பெற வேண்டும் என்றும் ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்திவாய்ந்த உணர்வுகள் உடலுக்குள் செல்லப்படும் பொழுது “ஒரு மின்சாரம் பாய்வது போன்று…” உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.

இப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறப்படும் பொழுது
1.உங்கள் புருவ மத்தியிலே மின் அணுக்கள் உருவாகும்
2.உயிர் வழி நுகர்ந்து உடலுக்குள் செல்லும் பொழுது உடலுக்குள் ஒளி மயமான உணர்வுகள் தோன்றும்
3.உடலிலிருந்து வெளிச்சமும் வெளிப்படும்… மகிழ்ச்சியான உணர்வுகளையும் ஊட்டும்.

இதை எல்லாம் தியானத்தில் நீங்கள் காணலாம்… உணரலாம்…!