ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 6, 2023

நாம் இயற்கையான அழகைப் பெற வேண்டும்

இன்று நாம் அணியும் ஆடைகளில் விஞ்ஞான அறிவால் எடுத்துக் கொண்ட நிலைகளில் கடும் விஷம் கொண்ட கெமிக்கல் தான் சாயங்களாகப் பூசப்படுகிறது அதிலிருந்து.

அதிலிருந்து வெளிப்படும் விஷமான ஆவியைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. அதே சமயத்தில் நாம் அந்த ஆடைகளை அணிந்திருக்கும் போது
1.எந்த விஷத்தின் தன்மை அதிலே சாயமாக உருவாக்கப்பட்டதோ
2.நமக்குள் இருக்கும் காந்தப்புலன் அதன் மணத்தை நுகர்ந்து சுவாசிக்கும்படி செய்து
3.உடலுக்குள் அந்த விஷத்தை ஊட்டி விடுகின்றது.

ஆனால் அன்று அகஸ்தியன் காலத்தில் விஷத்தை முறித்திடும் தாவர இனங்களை எடுத்து மற்ற மற்ற தாவரங்களுடன் அது கலக்கப்பட்டு அதைத் தான் சாயங்களாக பல நிறங்களில் உருவாக்கினார்கள்.

அத்தகைய சாயங்களை ஆடைகளிலே பூசி பின் அதை அணிந்து கொண்டால் விஷத் தன்மை புகாதபடி பாதுகாக்கும் சக்தியாக வந்தது… அக்காலங்களில்…!

பல தாவர இனங்களின் தன்மையை ஆடைகளாக உருவாக்கப்பட்டு தீமை உடலுக்குள் புகாதபடி அகஸ்தியன் வாழ்ந்த காலங்களில் பெரும்பகுதி அப்படித் தான் தடுத்துக் கொண்டனர்.

1.தாவரங்களின் பட்டைகளைத் தட்டி ஆடைகளாக நெய்து பல பச்சிலை மூலிகைகளை இந்த நாருடன் கலக்கப்பட்டு
2.பிற விஷங்கள் தங்களைத் தாக்காதபடி பாதுகாப்பாக உருவாக்கிக் கொண்டனர்
3.அன்று அகஸ்தியன் காலத்தில் வாழ்ந்த புலஸ்தியர்கள் என்று சொல்லும் மக்கள் அனைவரும்.

ஆனால் இன்று நாம் அழகுபடுத்த என்ன செய்கின்றோம்…?

முகத்தில் பூசுவதற்கு என்றே எத்தனையோ பவுடர்களை இன்று கெமிக்கல் கலந்து உருவாக்கி வைத்துள்ளார்கள். கெமிக்கல் கலந்த பவுடர்களை நாம் பூசிக் கொண்ட பின் என்ன நடக்கிறது…?

முதலிலே முகம் மிக அழகாகத் தோன்றுகின்றது. ஆனால் பின்னாடி முகத்தில் உள்ள தோல்கள் எல்லாம் சுருங்கி விடுகின்றது நாளடைவில் பார்க்கப்படும் பொழுது “வயதானவர்…” போன்றே தோற்றம் அளிக்கின்றது.

ஆனால் மீண்டும் அந்தச் சாயங்களைப் பூசினால் தான் அழகுபடுத்த முடிகின்றது அதே சமயத்தில் அந்த விஷத்தின் தன்மை சுவாசிக்கப்படும் பொழுது இயற்கையின் அழகையும் கெடுத்து விடுகின்றது…!

குறிப்பாக பெண்களுக்கு என்று எத்தனையோ அழகு சாதன பொருட்களை கெமிக்கல் கலந்த நிலையில் உருவாக்கிக் கொண்டே உள்ளார்கள்.

சினிமாவில் நடிக்கக் கூடியவர்கள் அதைப் பூசிக் கொள்கின்றார்கள். அப்படிப்பட்ட அலங்காரம் செய்வதற்கு என்று தனி நபர்களும் இருக்கின்றார்கள் காசைக் கொடுத்துச் செலவழித்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.

ஆக உள் அழகைப் போக்கிவிட்டு விஷத்தின் தன்மை நாளடைவில் கவரப்படுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

இயற்கையான அழகை நாம் பெற வேண்டும் என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று அதை நுகர்ந்து பாருங்கள்… முகங்களில் எவ்வளவு அழகு வருகின்றது என்று…!
2.அருள் உணர்வுகளைப் பெருக்கினால் இயற்கை அழகை நாம் பெருக்கிக் கொள்ள முடியும்.

வேறு ஒன்றுமே வேண்டியதில்லை…! ஒரு தாய் கருவுற்று இருக்கிறது என்று தெரிந்து கொண்டால் மகாலட்சுமி படமோ சரஸ்வதி படமோ எத்தனையோ அழகான தெய்வப் படங்கள் இருக்கின்றது. அழகாக உருவாக்கி வைத்துள்ளார்கள்.

அதை உற்றுப் பார்த்து அந்த அழாகன வடிவில் என் குழந்தை உருவாக வேண்டும்… வளர வேண்டும்… அழகாக வர வேண்டும்… என்று எண்ணினால் அந்தக் குழந்தை நிச்சயம் அழகாக வரும்.

அதே போன்று தான் உயர்ந்த உணர்வுகளை நுகர்ந்து என் முகம் அழகாக வேண்டும் என்று எண்ணினால் முகம் செழிப்பாக வரும்.

சங்கடமாக இருக்கும் போது முகம் சுருங்கி விடுகின்றது… இருளாகின்றது…! ஆனால்
1.அருளைப் பெற வேண்டும் இருளை அகற்ற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்துப் பாருங்கள்.
2.முகத்தில் நல்ல மறுமலர்ச்சி ஏற்படும். மகிழ்ச்சி தோன்றும்… நம்மைப் பார்ப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி தோன்றும்.

ஆகவே அன்றைய மெய் ஞானிகள் காட்டிய வழியிலே உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றும் தகுதியை நாம் பெற வேண்டும்.

இன்று எல்லாவற்றையும் காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைக்குக் கொண்டு சென்று விட்டோம். இது போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்