ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2023

பக்தி கொண்டு வாழ்ந்து உடலை விட்டுப் பிரிவோரின் கடைசி நிலை

யாம் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்த காலங்களில்
1.இறந்த பக்தி கொண்ட ஆன்மாக்கள் அதே போல் பக்தி கொண்டவர்கள் உடலுக்குள் புகுந்த பின்
2.எப்படி எல்லாம் அவர்கள் அவஸ்தைப் படுகின்றார்கள்…? அவருடைய எண்ணங்கள் எப்படி ஆகின்றது…? என்பதையெல்லாம்
3.குருநாதர் காட்டிய வழியில் அறிந்து கொண்டோம்.

கிராமத்தில் ஒரு அம்மா இருந்தது. அது ஒரு முருக பக்தர். அந்த அம்மாவிற்குச் சொத்து அதிகம் இருந்தது, எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்து விட்டது.

என்னை அந்த அம்மா இருந்த வீட்டில் திண்ணையில் உட்காரச் சொன்னார் குருநாதர். அந்த அம்மாவால் எழுந்து நடக்க முடியாது.

அந்த அம்மாவிற்கு வயது எழுபது இருக்கும். அது புலம்பிக் கொண்டே இருந்தது.

என்னிடம் இருந்த சொத்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, என்னை அநாதையாக்கி விட்டார்கள். செல்வமும் செருக்கும் உள்ள பொழுது என் மடி மேல் உட்கார்ந்து விளையாடுவையே, “முருகா…!”

இப்பொழுது எங்கடா போனாய்…? செல்வம் இருப்பவர்களைத் தான் பார்ப்பாயா…? நான் இப்பொழுது அநாதையாக இருக்கின்றேன் என்னைக் காக்கவில்லையா…? நான் அநாதைதானா…? என்று புலம்பிக் கொண்டு உள்ளது.

ஆனால் உடலெல்லாம் மலத்தால் சூழ்ந்து அசிங்கமாக வைத்திருந்தது.

அந்த அம்மா வீடு பெரியது… சொத்துக்களும் அதிகம். ஆனால் நோய்வாய்ப்பட்ட பின் சாலையில் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள்.

“முருகா…!” நான் நினைக்கும் பொழுதெல்லாம் வரம் கொடுத்தாய். நான் சொல்கின்றவருக்கு எல்லாம் நல்லது செய்தாய். எனக்கு நல்ல வழியும் காட்டினாய்.. என்னிடம் செல்வம் இல்லையென்று நீ கூட இப்போது வராமல் போய் விட்டாயேடா…! என்று சொல்லிக் கொண்டு இருந்தது.

நான் அவர்களுக்கு எல்லாம் செய்தேனே… எனக்கு இப்படிச் செய்கின்றார்களே…! எனக்குச் சொத்து வேண்டாம்.. நீ இருந்தால் போதும் முருகா…!

என்னை இந்த நிலைக்கு விட்டு விட்டார்கள்… நான் அசிங்கமான நிலையில் இருக்கின்றேன்… என்னைக் கவனிப்பதற்கு நீ கூட வரவில்லையே. இந்த அசிங்கத்தைப் பார்த்து நீ கூட விலகி விட்டாயா…?” என்று கேட்டுக் கொண்டிருந்தது.

இரண்டு மணி நேரம் அந்த அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அந்த அம்மா புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் கதவைத் திறந்து உள்ளே போனேன். அந்த அம்மவைப் பக்கத்தில் இருந்த கிணற்றில் குளிக்க வைத்துத் துணிகளை துவைத்துக் கொடுக்கச் சொன்னார் குருநாதர், செய்தேன்.

பின்பு ஆசீர்வாதம் கொடுத்தேன். மனது தெளிவடைந்து அந்த அம்மா அமர்ந்தது,

“முருகா…! நீ வந்துவிட்டாயா…?” “நீ இந்த ரூபத்தில் வருவாய் என்று எனக்குத் தெரியவில்லையே…” என்று அப்போதும் முருகனைத் தான் நினைக்கின்றது.

என் பிள்ளை மாதிரி என் மடியில் அமர்ந்து விளையாடுவாய். இப்பொழுது பெரிய ஆளாக வந்து இருக்கின்றாய்… “நீ திருடனப்பா…!” என்று சொல்கின்றது.
1.நான் முருகன் இல்லை… சாதாரண மனிதன் தான்…! என்று சொன்னேன்.
2.முதலில் முருகன் வந்தான் என்றால் இப்போது ஏன் வரவில்லை…? என்று கேட்டேன்.

இது எல்லாம் மந்திர வழியால் (மந்திர ஒலிகள்) எடுத்துக் கொண்ட உணவுகள் தனக்குள் சிக்கப்பட்டு இதே உணர்வு கொண்டு முருகன் மேல் பக்தியாகச் சென்ற ஆன்மாக்கள் இறந்த பின்
1.உடலுடன் உள்ளவர்கள் அதே பக்தியை யார் கொள்கின்றார்களோ அந்த உடலுக்குள் புகுந்து
2.அவர்கள் வாழ்ந்த காலத்திலே (இறந்தவர்) கடைசியிலே நோய்வாய்ப்படும் பொழுது அவர்களை எப்படிக் கவனிக்காமல் விட்டார்களோ
3.அதே ஆன்மா இங்கே “முருகனைப் போன்று காட்சி தருவதும்…” பல நிலைகளைச் செய்வதும்
4.ஆனால் நாளடைவில் அந்தக் காட்சியின் உணர்வுகள் விளைந்து இப்படிக் கடும் நோயாக மாறுகின்றது.

சமுதாயத்தில் அவர்கள் குடும்பத்திலே இந்த வயதான அம்மா மீது எப்படி வெறுப்படைந்தனாரோ அந்த வெறுப்பினால்… சேர்த்து வைத்த சொத்தைப் பறிக்கத்தான் முடிந்தது… முருகன் காக்கவில்லை…!

செல்வத்தைப் பெற்றோம்… சந்தோஷமாக இருப்போம் என்ற நிலை இல்லை. எப்பொழுது மடிவார்…! என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்… தொலைந்து விட்டால் தன் இஷ்டத்திற்குச் செய்துவிடலாம் அல்லவா…!

காரணம் என்ன என்றால்
1.உயிரோடு இருக்கும் பொழுது சொத்தை எல்லாம்
2.மற்றவர்களுக்கு உயிலாக எழுதி வைத்துவிட்டால் என்ன செய்வது…?

ஏனென்றால் ஒரு சிலர் உயில் எழுதி வைத்ததைத் தெரிந்து கொண்டால்
1.சொத்து தன் கைக்கு வராது… மற்றவர்களுக்குச் சேர்ந்து விடும் என்றால்
2.இப்படி எல்லாம் சில குடும்பங்களில் நடக்கிறது.

செல்வம் இருந்தாலும்… அதைக் கொடுத்துச் சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நிலையில் இருந்தாலும்… அவர்களைக் காக்கும் நிலை கூட மாறி விடுகின்றது.

இந்த அம்மா “யாருக்கோ உயிலை எழுதி வைத்துவிட்டார்…” என்று சொன்னதற்காகறகக வேண்டி இவரைத் தொல்லைப்படுத்திச் சொத்தைப் பறித்து அனாதையாக இப்படி விட்டு விட்டார்கள்.

குடும்பத்தில் இன்றும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

சொத்து என்று வந்து விட்டால் அம்மா அப்பா என்று கூடப் பார்ப்பதில்லை… சகோதரர்களுக்குள்ளும் பகைமை வருகின்றது…!

1.முருகனை பக்தி கொள்கின்றோம் சிவனை வணங்குகின்றோம் என்று எல்லாம் தான் சொல்கிறோம்.
2.அதே சமயத்தில் அம்மாவோ அப்பாவோ சகோதரர்களோ அவர்கள் எனக்குத் துரோகம் செய்கிறார்கள் என்ற எண்ணத்துடன்தான் தெய்வத்தை வணங்குகின்றோம்
3.மந்திரத்தைச் சொல்லி சகோதரன் சாக வேண்டும்.. அல்லது தந்தை சாக வேண்டும் என்ற எண்ணத்துடன் முருகனை வணங்குகின்றார்கள்
4.ஆக பக்தி எந்த அளவிலே இருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ளலாம்.
5.உடலின் மேல் இச்சை கொண்டு தெய்வத்தைச் சாட்சியாக வைத்துச் செய்யக்கூடிய செயல்கள் தான் இது.

ஆனால் நல்ல உணர்வுகளை எடுத்துத் தீமைகளை அகற்றும் அந்த உணர்வின் தன்மை பெற்றால் நமக்குள் “நாம் தெய்வமாகலாம்…”
1.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்
2.தெய்வீக குணத்தைப் பெற வேண்டும்
3.தெய்வீகப் பண்புடன் இருக்க வேண்டும்
4.தெய்வீக வாழ்க்கை வாழ வேண்டும்
5.பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்றும்
6.நாம் ஒவ்வொருவரும் எண்ணினால் பகைமை மாறிவிடும் என்பதற்காக
7.ஆலயங்களில் இதைச் சொல்லி இருந்தாலும் இதை யாரும் செயல்படுத்துவதில்லை.

பக்தி என்ற பேரில் ஆலயத்திற்குச் சென்றாலும் தன் ஆசையின் நிலைகள் கொண்டு சந்தர்ப்பவசத்தால் சாமி சிலையையோ அல்லது படத்தையோ திரும்பத் திரும்பப் பார்த்துப் பதிவாக்கி எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் “தெய்வமாகக் காட்சி தருவதும்… மற்ற நிலைகளும்…”

இப்படி மனிதனுடன் பழகிய நிலைகள் இந்த மனித வாழ்க்கைக்குத் தான் அது பயன்படுகிறது. தான் எண்ணியது கிடைக்கவில்லை அல்லது நடக்கவில்லை என்றால் உடனே வேதனை வருகின்றது.

வேதனைகள் அதிகமான பின் அடுத்து மற்ற தெய்வங்களை
1.காளிக்கோ அங்களேஸ்வரிக்கோ மாடசாமிக்கோ முனுசாமிக்கோ ஆடுகளையும் மற்றதையும் பலியிட்டு
2.அந்த இரத்தத்தை அபிஷேகித்து மகிழும் நிலையில் தான் இருக்கின்றது.

இப்படி எல்லாம் செய்தால் அந்தத் தெய்வம் நம் கஷ்டத்தை நீக்கும் என்று தவறான வழிகளைத் தான் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

அந்த தவறின் நிலைகளில் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்தால் அசுர உணர்வு உண்டு மாடனாகவும் முனியனாகவும் இன்னொரு உடலுக்குள் ஆவியாகச் சென்று ஆட்டிப்படைக்கும்.

ஆகவே நாம் வணங்கும் முறைகள் எதுவோ உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றி வெளியே செல்லப்படும் பொழுது நாம் எந்தத் தெய்வத்தை வணங்கினோமோ அந்த உணர்வு தான் அங்கே காட்சியாக… நோயாக மாறுகின்றது.

இது எல்லாம் மனிதனால் மனிதனுக்குள் உருவாக்கப்பட்ட நிலைகள்…!