ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2023

ஞானக்கனி

நாரதர் சிவனிடம் வருகின்றார்… கனியைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். உலகை யார் முதலில் வலம் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்தக் கனி.

முருகனின் வாகனம் மயில் ஆற்றல் மிக்கதாக இருப்பதால் ஏறி உட்கார்ந்தால் ஒரு நொடியில் உலகை சுற்றிச் வரலாம் என்று அவருடைய உணர்வு வேகம் செல்கின்றது.

ஆனால் விநாயகன் இருந்த இடத்திலிருந்தே… அதாவது
1.புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில்
2.பல உணர்வின் சத்துக்களை எடுத்துச் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக
3.மனித உடல் பெற்ற இந்த உடல் அது இருந்த இடத்திலேயே இருக்கின்றது.

இருந்தாலும்… இந்த உணர்வின் எண்ண அலைகள் ஊடுருவிச் செயல்படும் நிலைகள் அந்த எண்ணத்தைப் பாய்ச்சி அங்கே செல்கின்றது (முருகன்).

விநாயகன் இருந்த இடத்திலிருந்து உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து வினையாகச் சேர்த்து வினையின் ரூபமாகச் சேர்க்கப்பட்டது.

உடல் பெற்ற நிலையில் தாய் தந்தையருடைய நிலைகள் என்பது பேரண்டமும் பேருலகமும்… என்று (அதனின் சக்தியைத்) தனக்குள் எடுத்துக் கொண்டது. இருந்த இடத்திலிருந்து தன் உணர்வின் சக்தியை எடுத்துக் கருவாக எடுத்துச் சிசுவாக விளைய வைத்தது.

ஆகவே
1.ஒரு மரம்…! அது பல அலைகளின் தொடர் கொண்டு
2.தனக்குள் எடுத்துக் கொண்ட மணத்தின் நிலைகள் கொண்டு இந்த சத்துக்குள் விளைந்தது கனி (மாங்கனி)
3.அது போல் அன்னை தந்தையருக்குள் விளைந்ததே இந்த உணர்வின் வித்து… (மனித உடல்)
4.இந்த வித்தின் தன்மையே “உயிரான அந்தச் சத்து…!”

இந்த உடலிள் வினையாகச் சேர்த்துக் கொண்ட அந்த நிலையான நிலைகள் கொண்டு… இந்தச் சத்தின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாக
1.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ
2.அதைப் போல உயிரின் (ஒளியின்) தன்மை தனக்குள் எடுப்பது.

மாங்கனி அது வித்தாகி மரமாகி மீண்டும் தனக்குள் வித்தின் சத்தாகச் சேர்ப்பது போன்று
1.தன் இனத்தின் சத்தின் தன்மையை
2.ஒளியின் சுடராக வளரும் பக்குவ நிலைகள் பெறுகின்றது.
(சொல்வது அர்த்தமாகிறதல்லவா)

அந்தப் பக்குவ நிலையைக் காட்டுவதற்குத் தான் (நாரதன் கொடுப்பதாக) கனியைக் காட்டி
1.தாய் தந்தையருடைய பாசத்தால் தான் நாம் வளர்கின்றோம்
2.பாசத்தால் வளர்க்கப்படும் பொழுது… அந்த ஞானி காட்டிய உணர்வின் எண்ண அலைகளை நீ எடு
3.அவன் வழியில் நீ செல்…!

அன்று வான்மீகி வானை நோக்கி ஏகினான்… துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றான்…! துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய அணு தான் நாரதன். ஆகவே அந்த உணர்வின் தன்மை தான் வான்மீகிக்குள் ஈர்க்கப்பட்டது என்பதை “நாரதன் வான்மீகிக்கு ஓதினான் என்றார்கள்…”

ஏனென்றால் அது “விளைந்து முதிர்ந்த கனி…!” கனியிலிருந்து வரும் மணம் சுவையானது… இனிமை கொண்டது. நாரதனிடம் இருப்பது சுருதி ஏழு… சரஸ்வதியிடம் இருப்பது சுருதி ஏழு..! என்று இவ்வளவையும் படத்தைப் போட்டுப் பல உணர்வின் தன்மை அறிவதற்குக் காட்டுகின்றார்கள் மெய் ஞானிகள்.

தாய் தந்தை இறந்த பின் பாசத்தினால் இங்கு (பிள்ளைகளின் ஈர்ப்புக்குள்) வந்தாலும்
1.மெய் ஒளியின் தன்மை நாரதன் காட்டிய அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து
2.எண்ணத்தாலே தாய் எப்படி நம்மைக் (தன் பிள்ளைகளை) கருவாகக் கூட்டியதோ
3.அதே போல பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான்… அதற்குள் இருந்து தான் நீ ஜெனித்தாய்…! என்ற
4.இந்தப் பேருண்மையைக் காட்டி அது தான் உன்னை முதல் தெய்வமாக உருவாக்கியது
5.அதனுடன் நேசித்து நீ வளர வேண்டும் என்று தெளிவாக்குகின்றார்கள்.

ஏனென்றால் மரத்துடன் ஒன்றிய காய் “அது கனியாகும்…!”

காயாக (மரத்திலிருந்து) விழுந்து விட்டால் சுவை இருக்காது… இயக்கம் புளிப்பாகும். அதை எல்லாம் அன்று அந்த அகத்தின் இயக்கத்தின் தன்மையைத் தெளிவுற உணர்த்தப்பட்டது.

தாய் எப்பொழுதுமே தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே வாழ்கிறது. அதே வழியில் நாமும் நம் தாய் தந்தை உயர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி… அந்தப் பாசத்துடன் ஒன்றி… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் செயல்படுத்தி… அந்தச் சக்தியை வளர்த்திட வேண்டும்.

1.இப்படி இதன் வழியிலே வளர்ந்தவர்கள் தான் விண் சென்றார்கள்… கனியாக ஆனார்கள்…! என்று கனியைக் கொடுத்து (நாரதன் கொடுக்கும் கனி)
2.மக்களுக்கு விளக்கம் சொல்வதற்கு இப்படிக் கதையாகக் காட்டிப் பேருண்மையை உணர்த்திச் சென்றார்கள்.