ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 1, 2023

இறந்த பின் எங்கே… எந்த நிலை அடைகின்றோம்…? என்ற உண்மையை உணர்ந்தால் யாரும் தீங்கிழைக்க மாட்டோம்

கோபப்படுபவனைப் பார்த்து இரக்கமற்றுக் கொல்பவனை நாம் பார்க்க நேர்ந்தால் இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு உணர்வின் கருத்தன்மை அடைகின்றது நம் இரத்தங்களிலே. ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

ஆக… இப்படித் தவறு செய்கின்றானே…! மற்றவனைத் துன்பப்படுத்துகின்றானே… கொல்கின்றானே…! என்ற இந்த உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் அதனின் உணர்வுகள் நமக்குள் பெருகி “இரத்தக் கொதிப்பாக” மாறுகின்றது. நல்ல உடலை உருவாக்கிய அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

ஆக…
1.எப்படி எல்லாம் உணர்வுகளை இந்த உயிர் இயக்குகிறது…?
2.எத்தனை விதமான உணர்வுகளை நுகருகின்றோமோ உயிர் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதை அறிவதற்குத்தான்
3.நகருக்குள்ளும் நாட்டுக்குள்ளும் காட்டுக்குள்ளும் எம்மைச் செல்லும்படி செய்து
4.அந்த இயற்கையின் உண்மையின் உணர்வலைகள் எப்படி இயங்குகின்றது…?
5.அதிலிருந்தெல்லாம் நீ எப்படி மீள போகின்றாய்…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

இரவிலே சுற்றும்படி செய்து ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கும்படி செய்வார்.
1.அந்தக் குடும்பத்தில் சாபமிட்டவர் எத்தனையோ பேர்கள்.. தொல்லைப்படுத்துவோர் எத்தனையோ பேர்கள்…
2.தொல்லைப்படுத்துவோர் இறந்தபின் அவர்கள் குடும்பத்தில் என்ன ஆகின்றது…?
3.ஆவியாக பின் அதே பற்றுடன் இன்னொரு உடலுக்குள் சென்று பேயாக அது எப்படி ஆட்டிப் படைக்கின்றது…?

அவர்கள் செல்வந்தராக இருந்தாலும் உடலுக்குள் சென்று அந்தச் செல்வத்தைக் காப்பதற்கு மாறாக தவறின் நிலைகள் இழைக்கப்பட்டு… அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் கடும் நோயாக உருவாக்கப்பட்டு… தேடிய செல்வத்தைப் பாதுகாக்க முடியாத நிலையும்… தன் உடலில் கடும் நோயாக அவர்கள் எப்படி வேதனைப்படுகின்றார்கள்…? என்பதையும் ஒவ்வொரு வீட்டிலும் இரவிலே அதைப் பார்ப்பதற்காகச் சுற்றி வரும்படி செய்வார் குருநாதர்.

அவர்கள் வீட்டிற்கு நேராக சில இடத்தில் அமரும்படி செய்து அதைச் செயல்படுத்துவார். ஆனால் இதை உள்ளூரிலே செயல்படுத்துவதில்லை. ஏனென்றால் “என்னை யார்…?” என்று தெரிந்து கொள்வார்கள் அல்லவா…!

ஆகையினால் வெளியூர்லேதான் இதையெல்லாம் அமர்ந்து பார்க்கும்படி சுற்றிப் பார்க்கும்படி செய்வார். தெரியாத இடத்திலே “ஒரு பிச்சைக்காரன்…” போன்று அமர்ந்து அதைப் பார்க்கும்படி சொல்வார்.

இறந்த ஆன்மாக்கள் பழி தீர்க்கும் உணர்வுடன் அந்தக் குடும்பத்திற்குள் சென்றது. அந்த உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…? அந்த உணர்வுகளை நுகரச் செய்வார்.

1.உடலுடன் இருக்கும் பொழுது “பாவிப்பயல்…!” இப்படியெல்லாம் என்னை மோசம் செய்கின்றான்…! என்று எண்ணிய உணர்வுகள்
2.“ஆக இப்படியா…!” என்று இவருக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலிலே விளைந்து அது எப்படிக் கடும் நோயாக மாறுகின்றது…?
3.உறுப்புகள் சிதைந்து போகச் செய்து நல்ல உறுப்புகளை எப்படிப் பாழ்படுத்துகிறது
4.கை கால் அங்கங்கள் வராதபடி எப்படிச் செயல்படுத்துகின்றது…?

இதனின் உணர்வுகள் வளரும் பொழுது…
1.இனம் புரியாதபடி விபத்துகள் ஏற்படுவதும்
2.முந்திய வினைகள் அந்த உணர்வின் வளர்ச்சி பருவம் வரும் பொழுது அதனுடைய இயக்கங்கள் எப்படி இயக்குகின்றது…? என்பதனையும்
3.இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளும்படிச் செய்தார்.

ஏனென்றால்
1.உண்மையின் உணர்வின் இயக்கங்களைப் பற்றி நீ நேரடியாகத் தெரிந்து கொண்டால் தவிர மற்றதை நீ உணர முடியாது
2.காரணம்… உன்னுடைய உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் நீ செல்வாய்.
3.பிறிதொரு உணர்வின் இயக்கம் மனிதனை எப்படி மாற்றுகின்றது…? என்பதனை நீ அறியவில்லை என்றால்
4.உன்னால் உனக்குள் புகும் தீமைகளை நீ மாற்றி அமைக்க முடியாது.

ஆகவே மனித வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை மாற்றி அமைத்த அந்த அருள் மகரிஷிகள் உணர்வுகளைப் பெறக்கூடிய தகுதி நீ எப்படிப் பெற வேண்டும்…? என்று இப்படித்தான் எனக்கு உணர்த்திக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.