ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 20, 2021

நம்மைப் படைத்தவனின் நோக்கம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

போகரின் காலத்திற்குப் பிறகு போகரால் வழிப்படுத்திச் சென்ற பண்டிகை தான் தீபாவளிப் பண்டிகை.
1.நம்முள் உள்ள அசுர குணங்களை அழித்து நற்குணங்களின் ஒளியைப் பெறத் தான்
2.தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் முறை உணர்த்தப்பட்டது.

ஆனால் இன்றைய எண்ண ஓட்டத்தில் அசுரனையே வணங்கும் முறைப்படுத்திச் செயல்படும் வழியில் எண்ண ஓட்டங்கள் வளர்ந்து விட்டன.

தீய குணங்களை அகற்ற வேண்டிய அந்த நந்நாளில் சமமான எண்ணத்தைச் சாந்தமுடன் புத்தாடை புனைந்து… மகிழ்ந்து… தீபமேற்றி… உற்றார் சுற்றமுடன் இனிமையுடன் கலந்துறவாட ஏற்படுத்திய தினத்தைச் “சந்தோஷமுடன் எந்த ஆத்மா எந்த வழியில் கொண்டாடுகிறது…?”

1.இன்றைய சமுதாய இனப் பிடிப்பாக “அந்த நாள்”
2.பல இன்னல்களுக்கு மனித ஆத்மாக்கள் செல்லக்கூடிய உணர்வு ஓட்டத்தில் சுழன்று கொண்டுள்ளது.
3.அன்று சித்தர்களினால் ஒவ்வொன்றையும் உணர்த்திச் சென்றதன் பொருள் வேறு
4.இன்றைய மனித ஆத்மாக்கள் செயலாக்கும் பொருள் வேறு…!

ஒவ்வொரு காலத்திலும் சப்தரிஷிகள் சில உடல்களை ஏற்று எதற்காக அவர்களின் உணர்வலைகளை வெளிப்படுத்திச் செல்கின்றனர்…?

1.படைப்பின் படைப்பையே
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக்க…
3.அவர்களின் செயல் முறை செயலாக்குகின்றதப்பா…!

ஆவியாகிப் பிம்பமாகி ஆவியாகிச் சுழலும் வளர்ச்சியில்
1.சுழற்சி நிலைக்கொப்ப வழி நிலை செல்லாமல்
2.சுழற்சியின் சக்தியைப் படைக்கப்பட்டவனிடம் சமர்ப்பிக்கும் செயலுக்குத் துணை செய்கின்றார்கள் சப்தரிஷிகள்.

நீரின் ஓட்டத்தை நாம் அதன் இச்சையில் (போக்கில்) விடாமல் அந்த நீரைத் தேக்கி வைத்து “அணையைக் கட்டி” அந்த நீரின் சக்தியைப் பல ரூபங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

அதைப் போல்… பால்வெளி மண்டலத்தில் படர்ந்து சுழன்று நிறைந்துள்ள அமில குணங்களின் ஈர்ப்பை
1.உருவான உலகமாக்கி
2.உலகினிலே கருவைக் கொண்டு உருவாக்கி
3.உருவின் உருக்களாகப் பல உருக்களை வளரச் செய்து
4.தன் ஞானத்தின் சக்தி அலைக்குச் சக்தி எடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்

நாம் பலன் காணத்தான் பலவற்றையும் செய்கிறோம். ஒவ்வொரு மனிதனும் அவன் எண்ணத்திற்குகந்த நிறைவைக் காண நித்தமும் செயலாற்றுகின்றான்.

இருந்தாலும்… எண்ணியோ எண்ணாமலோ எல்லா ஆத்மாக்களும் தன் உணர்வில் வழி பெறுவது எதனை…?

வாழ்க்கையில் தன் உணர்வுக்குகந்த எண்ணச் செயல் நிறைவுறாதவன் விரக்தி என்ற வீண் சலிப்புடன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தற்கொலை என்ற நிலைக்கும் தன் உணர்வைச் செயலாக்குகின்றான்.

வெறுப்பு விரக்தி என்ற நிலை மனிதனுக்கு எப்படி ஏற்படுகின்றது..?

தன் உணர்வின் எண்ணத்திற்கொப்ப எண்ணச் செயல் நிறைவுறாத தருணத்தில் சலிப்பும் சோம்பலும் விரக்தியும் உட்பட்டுத் தன் ஆத்மாவையே மாய்த்துக் கொள்ளும் வழிக்குச் செல்கின்றான்.

உணர்வாலும் உருவாலும் தன் நிலையை எண்ணுபவன்…
1.உருவ எண்ணத்தின் சுழற்சியிலேயே சிக்குண்ட வாழ்க்கை உணர்வை மாற்றி
2.எண்ணத்தால் உணரும் ஞான வழிபாட்டில் தன் உணர்வைச் செலுத்தினால்
3.விரக்தியும் சலிப்பும் அற்று விவேகம் பெறலாம்.

இவ்விவேக உணர்வலையின் ஞானத்தை உணர்ந்து வாழ்க்கையில் எண்ணும் நிறைவைப் பல ஆத்மாக்கள் பெறுகின்றனர்.

ஆனால் இன்றைய காலத்தில் மனிதனின் உணர்வலை அனைத்தையுமே அரசர்கள் ஆண்ட காலத்தில் தன் உயர்வை வெளிக்காட்ட
1.“கதைகளையும்… கற்பனைக் காவியங்களையும்..” உண்மை போல் வெளிப்படுத்தியதை…
2.அந்த மாய உணர்வுகளையே உண்மை என்ற வாழ்க்கையின் நெறியில் கலந்து விட்ட
3.அத்தகைய உணர்வலையின் சுழற்சியில் சிக்கி (CINEMA, TV, SOCIAL MEDIA) உழன்று கொண்டுள்ளது.

இந்த நிலை மாறிச் சப்தரிஷிகளின் செயல் வட்டத்திற்குள் சென்றால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே அவர்களின் உணர்வின் உணவு கிடைக்கப் பெறும்.

அதன் வழியில் அவர்களுக்கும் அவர்களின் சக்தி அமிலத்தைக் கூட்டிடல் முடியும். அதன் மூலம்
1.மீண்டும் மனிதக் கரு தோன்றினால் தான்
2.மனிதக் கருவின் பிம்ப உடல் ஞானத்தை வைத்துத்தான் மீண்டும் மனித சமுதாயம் காண முடியும்.

மனித சமுதாயத்தின் எண்ண ஈர்ப்பு அலை இருந்தால் தான் சப்தரிஷிகளின் செயலுக்கே உணவு கிடைக்கும். உணவு இல்லாவிட்டால் அவர்களின் உணர்விற்கு உருவில்லை.

சப்தரிஷிகளின் செயல் அந்தந்தக் காலகட்டத்தில் உணர்த்தப்படுகின்றதென்றால் இந்த அடிப்படையில் தான்…!

இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் இன்றுள்ள எண்ண உருவ சுவாச மக்கள் இதே உணர்வலையில் இந்தப் பிம்பங்களை மாற்றி மீண்டும் மனித அமில ஜீவன் தோன்றினால்… இன்றுள்ள ஞானத்தைக் காட்டினாலும்… உருவ பிம்ப அழகைக் காட்டிலும்.. முற்றும் மாறுபட்ட உருவ அமைப்பு ஞான உருவங்கள் தான் அமையப் பெறும்.

அதுவும் கலி மாறி கல்கி மனித ஜீவன் கொள்ளப் பல பல ஆண்டுகள் ஆகிவிடும்.
1.காற்று மண்டலத்தில் உருளும் அமில உயிர்களுக்கெல்லாம்
2.மீண்டும் ஜீவன் கொள்ளும் காலத்திற்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு விடும்.

அதனால் இன்றைய ஞான சக்திகளைச் செயலாக்கக்கூடிய பிம்ப ஜீவன்களான நாம் நம் சப்தரிஷிகளின் உணர்வலையின் சக்தியுடன் ஜெபம் கொண்டால்
1.அவர்களின் செயலின் சக்திக்கு
2.நம் சக்தியும் கூடிச் செயல் கொள்ள முடியும்.