ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 11, 2021

“மனிதனின் எண்ண வலிமை” எப்படிப்பட்டது...? - ஈஸ்வரபட்டர்

 

காட்சி:-
வண்டியில் சக்கரம் சுழன்று... வண்டி ஓட அது உதவியாக வருகின்றது. ஆகவே வண்டி ஓட அந்தச் சக்கரம் தேவை தான். ஓடும் பொழுது அவ்வாச்சாணி முறிந்து சக்கரம் சுழன்று ஒரு பக்கம் உருண்டோடி விடுகின்றது... வண்டியின் குடை சாய்ந்து விடுகின்றது.

வண்டி ஓட அச்சாணி எப்படி முக்கியமோ அதைப் போன்று இந்த வாழ்க்கை என்ற வண்டி ஓடவும்... உடல் என்ற வண்டி ஓடவும்... அச்சாணி தேவை.

விளக்கம்:-
1.வாழ்க்கை வண்டிக்குப் “பொருளான அச்சாணி” வேண்டும்.
2.இந்த உடல் என்ற வண்டிக்கு இவ்வெண்ண “சுவாச அச்சாணி” வேண்டும்.
3.எண்ணத்தின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் செயலைக் கொண்டு தான் இப்பிம்ப உடலின் ஆரோக்கியத் தன்மையே உள்ளது.

“எண்ணத்தால் தான் அனைத்தும் நடக்கின்றது...” என்று உணர்த்துகின்றேன். ஆனால் இந்த உடலின் உணர்வு நிலை எதன் தன்மை கொண்டது...? என்று கேட்பீர்கள்.

உடலின் உணர்வினால் உணவையும் பசியையும் தாகத்தையும் உறக்கத்தையும் உடல் இச்சையையும் நாம் எண்ணத்தில் எடுப்பதற்கு முதலிலேயே “உணர்வின் உந்தலினால்...” நம் எண்ணத்தால் கொண்ட சுவாசத்தில் உணர்கின்றோம்.

இந்த உணர்வின் நிலை எப்படி ஏற்பட்டது...? எண்ணத்தால் இந்த உணர்வின் அலையை மாற்றி அமைக்க முடியும்.

ஆரம்பக் காலத்தில் இரண்டு வகை குண அமிலச் சேர்க்கையின் ஈர்ப்பில் ஜீவ சக்தி தோன்றியவுடன் அவ்வமில குணம் திடப்பட்டு வளர்ச்சியின் ஜீவ சக்தி உயிர் சக்தி ஏற்படுகிறது.

ஏற்பட்டவுடன் அதன் வளர்ச்சிக்குகந்த ஈர்ப்பின் உணர்வுக்கு மேன்மேலும் தன் உணவைச் சேமித்து... அதன் வட்ட வளர்ச்சி கூடக் கூட உணர்வின் தன்மையும்... உணர்வுக்குகந்த ஈர்ப்பு ஆகாரத்தையும்... சேமித்த இந்த உணர்விலிருந்து தான்... “உருவின் நிலையும் பெறுகின்றது ஜீவ ஆத்மாக்கள்...”

ஆரம்பக் காலத்தின் அமில குணச் சேர்க்கை என்று உணர்த்தியது இந்த உடல் பிம்பத்தைப் பெறத் தக்க அமில குணச் சேர்க்கைக் காலத்தைத்தான் குறிப்பிட்டேன்.

இப்படி இதன் வளர்ச்சி நிலை கூடிக் கூடிப் பல காலமாகச் சேமித்த இந்த உணர்வலையின் வழி சக்தியினால்தான் “எண்ண சக்தியே வலுப் பெற்று” ஜீவ ஆத்மாக்கள் வளர்ந்துள்ளன.

பல பல கோடி ஆண்டுகள் இந்த உணர்வின் அடிப்படை குண அமில ஈர்ப்பை வளர்த்துக் கொண்டு எண்ணியதைச் செயலாக்கும் மனித உரு பிம்ப ஜீவன்களுக்குத் தன் உணர்வின் அலையின் சக்தியும் இந்த எண்ண வளர்ச்சி ஏற்பட்ட ஜீவ உடல் கொண்ட பிறகு...
1.இயற்கையில் உடலில் தன் உணர்வை வெளிப்படுத்தும் செயல் அமிலங்களின் நிலை உள்ளன.
2.எண்ண வளர்ச்சி நிலை கொண்ட மனிதனால் மட்டும்
3.தன் எண்ணத்தால் உடலில் ஏற்படும் இயற்கை உணர்வு தன்மையையும் மாற்றி அமைக்க முடியும்.
4.இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் நிலைக்குகந்த செயலினால்
5.இவ்வுணர்வலையையும் மாற்றி அமைக்க முடியும்.
6.இவ்வுடலுக்கு உணவும் தூக்கமும் இச்சையும் தேவையில்லையா...?
7.இதனை மாற்றியமைப்பதனால் உடல் பிம்ப நிலை எப்படி நிலைத்திருக்கும்..?

உடலுக்குத் தேவையான உணவும் உறக்கமும் வேண்டியது தான்.

ஆனால் இவ்வெண்ணத்தின் செயலினால் அதன் பால் அந்த உணர்வின் தன்மைக்குகந்த வழித் தொடரிலேயே நம் எண்ணத்தைச் செலுத்தி அதன் செயலுக்கே நாம் சென்றுவிட்டோம் என்றால் அதே உணர்வின் எண்ண ஈர்ப்பின் லயிப்பில் தான் நம் ஜீவித காலம் அனைத்தும் சென்றுவிடும்.

பலதரப்பட்ட குணமும் பலதரப்பட்ட சுவையும் விரும்பக்கூடிய ஆத்மாக்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகை சுவையும் உறங்கும் தன்மையும் இருந்திடும்.

அவனது குண நிலையும் சுவை நிலையும் அவனால் இந்த வாழ்க்கையில் மட்டும் எடுத்ததல்ல. ஆரம்ப அமில குண வளர்ச்சி காலத்திலேயே அவன் ஈர்த்து உணர்ந்த எண்ணத்தின் தொடர்பு தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று வரை உள்ளது. உணர்ச்சியிலும் அவனது உடலின் இச்சையின் நிலையும் இவ்வாரம்பக் காலத்தின் வளர்ச்சியில் வந்தது தான்.

பசியும் தூக்கமும் ஆரம்பக் காலத்தில் குழந்தைப் பிராயத்திலிருந்தே அறிந்து உணர முடிகின்றது. ஆனால் வளர்ந்த பிறகு தான் உடல் இச்சையின் உணர்வு ஏற்படுகின்றது.

தாவரங்கள் அதன் வளர்ச்சியின் அமில குண சேர்க்கையின் சக்தி படிவத்தினால் அதன் பலனை வளர்ந்த பிறகு பூவாகி காயாகிக் கனியாகித் தருகின்றன.

அதைப் போன்று மனித வளர்ச்சியிலும் இவ்வளர்ச்சி முற்றலின் அமிலச் சேர்க்கையின் உணர்வின் நிலை குறிப்பிட்ட வயது வரம்பு சேர்க்கைக்குப் பிறகு வெளிப்படுகின்றது.

இந்த உணர்வின் வழித் தொடரினால் ஏற்படும் இந்நிலைகளை எண்ணத்தின் நிலைக்கொப்ப எப்படி ஒவ்வொரு மனிதனும் வழிப்படுத்தி வாழுகின்றான்...?

1.இந்த உடலின் தேவையான பசிக்கும் தூக்கத்திற்கும் இச்சைக்கும்
2.இவ்வெண்ணப் பழக்கத்தைச் செலுத்திய முறைப்படி அதன் தேவைகளை எல்லாம்
3.இவ்வெண்ணத்தின் பிடியில் அளவுடன் ஒரு நிலைப்படுத்த முடியும்.

தன் எண்ணத்தைக் கொண்டு இவ்வுணர்வின் இச்சைகளை எல்லாம் ஒரு நிலையில்... இவ்வுடலின் பிம்பத்திற்குத் தேவையான அளவுடன் செயல்படுத்தி வாழ்ந்து வரும் மனிதனின் வாழ்க்கை... அழகுடனும்... அமைதியுடனும்... மனிதன் மனிதனாக இருக்கவல்ல தன்மையுடனும் இருக்கும்.