ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 28, 2021

நம் எண்ணத்திலும் பார்வையிலும் வரக்கூடிய தீமைகளைப் போக்க வேண்டும் என்பது தான் “அஷ்டமி நவமியின் தத்துவமே...”

 

1.கண் வழி தான் நாம் கவர்கின்றோம்... அது தான் பதிவாக்குகின்றது.
2.கண்ணின் காந்தப் புலன் கவர்வது நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.இந்த உடலுடன் இணைந்தது எதுவோ அது பதிவான பின் உயிர் அந்த உணர்வின் தன்மையை இழுக்கின்றது.

அதாவது... நமக்குள் எத்தனையோ உணர்வுகள் அணுக்களாக இருப்பினும் கண் கொண்டு பதிவாகி உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ அதைக் காற்றிலிருந்து பிரித்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

மாற்றியபின் சுவாசித்து உயிரால் தான் அது இயக்கப்படுகின்றது... நவமி.
1.எதன் உணர்ச்சிகளை எண்ணுகின்றோமோ அந்த எண்ணம் நவமி,
2.ஆனால் அதே சமயம் அஷ்டமி...! கண்களின் வழி நாம் நுகர்ந்தாலும் ஆன்மாவாகிறது... (தானாக) இயக்கும் சக்தி இல்லை.

நுகர்ந்து உயிரிலே பட்ட பின் அஷ்டமி என்றாலும் உயிருடன் ஒன்றிய பின் அந்த உணர்வின் அறிவாக நாம் தெரிந்து கொள்வது தான்.

அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகள். அந்த இருளிலே எதையும் செய்யாதீர்கள் என்பார்கள். ஆக... அஷ்டமியிலும் நவமியிலும் நல்லது எதையும் செய்யாதீர்கள் என்பார்கள்.

எதன் உணர்வின் தன்மை சேர்த்து அந்த உணர்வை அறிகின்றோமோ அறிந்து கொண்ட உணர்வு அதை அறியச் செய்வது இந்தக் கண்கள் தான்.

1.அறிந்து கொள்ளும் அறிவின் தன்மை கொண்டு நாம் எந்த நல்லதை எண்ணுகின்றோமோ
2.அதன் அறிவாக நம் உயிர் இயக்கும் என்பதைத்தான் அஷ்டமி நவமி... எதன் தெளிவின் தன்மை வருகின்றதோ ஈர்க்கும்.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று பார்க்கின்றோம். இந்த உணர்வின் தன்மை இது அஷ்டமி என்றாலும் அந்த உணர்வுகள் இருள் சூழ்கிறது.

1.வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் இப்படி இருள் சூழ்ந்தால்
2.அந்தத் தீமையை எண்ணாதே என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறதே தவிர
3.இவர்கள் சொல்வது மாதிரி சாங்கிய சாஸ்திரம் அல்ல.

வேதனை என்ற உணர்வுகள் உயிரில் பட்ட பின் அது இருள் சூழ்ந்து விடுகின்றது. ஒன்பதாவது நிலையில் நவமி என்றாலும் வேதனை என்ற உணர்வுகள் தான் நமக்குள் எண்ணங்களாக வருகின்றது.

ஆகவே அந்த வேதனையை நவமிக் காலங்களில் எண்ணக்கூடாது என்று காட்டுகிறார்கள். அதே மாதிரித் தான் அஷ்டமி இருள் சூழ்ந்த நிலைகளை எடுக்கக்கூடாது என்று காட்டுகிறார்கள்.

1.அதாவது தீமை என்று தெரிந்து கொண்ட பின் அந்தத் தீமையை நீக்கும் உணர்வுகளை
2.நாம் நுகர்ந்தறிவதற்குத் தான் இந்தக் கண்களைக் காட்டுகின்றார்கள்.

அன்றைக்கு நாம் நல்லது செய்ய வேண்டும்... நல்லவர்களாக வேண்டும்... நல்ல பயன்களை அடைய வேண்டும்...! என்று இப்படி எண்ணினால் அதன் உணர்வின் தன்மையே நமக்குள் அறிவாக அது இயக்குகின்றது.

சாஸ்திரங்களிலும் வேத நூல்களிலும் மூலங்களை இப்படிக் கொடுத்துள்ளனர்.
1.ஆனால் அந்த மூலத்தை மற்றவர் யாரும் அறிந்து கொள்ளாத நிலைகளில்
2.அஷ்டமி நவமி என்ற அந்த இரண்டு நாளும் நல்லதையே எண்ணி விடாதே என்று மாற்றிவிட்டார்கள்.

ஒரு நல்ல காரியத்தை முழுமையாகச் செய்து சந்தோஷப்பட்டு அதை எண்ணினோம் என்றால் நம் உயிர் அதன் உணர்வின் உணர்ச்சியாக இயக்குகின்றது.

ஒருவர் வேதனைப்படுகிறார் என்று கண் கொண்டு பார்த்தால் அந்த வேதனையை நுகராதபடி எப்படி அவரை நல்லவராக்க வேண்டும் என்ற உணர்வின் தன்மை எடுக்க வேண்டும்.

தீமை வரும் நேரத்தில் எப்படி எண்ண வேண்டும் என்று தான் ஞானிகள் காட்டியுள்ளனர்.

இப்படி அந்த அஷ்டமி காலங்களிலும் நவமிக் காலங்களிலும் நாம் நல்ல காரியங்களைச் செய்து அந்த உணர்வின் தன்மை தெளிவாக்க வேண்டும் என்பதையே வேத பாட நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

நம் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று உள்முகமாக நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

அதன் பின் எந்த நல்ல காரியமோ அது நடை பெற வேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் அது நிச்சயம் நல்லதாகும்.