ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 13, 2021

இயற்கையை வளப்படுத்துபவன் தான் சித்தன் - ஈஸ்வரபட்டர்

 

உணர்வலையின் ஜீவ பிம்ப ஞானத்தால் தான் “நுண்ணிய காந்த ஈர்ப்பலையை...” நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

1.இந்த மனித உடலுக்குள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும் இவ்வுணர்வலையின் செயலையும்
2.இவ்வெண்ண சுவாசத்தால் “ஒரு நிலைப்படுத்தும்” பக்குவ மேம்பாட்டினால்
3.ஞான ஈர்ப்பின் நுண்ணிய காந்த அலையின் வளர்ச்சி ஒளியை
4.இவ்வுடல் முழுமைக்கும் ஈர்க்கவல்ல சக்தி முறையை வழிப்படுத்தும் செயல் உணர்ந்து
4.நம் ஜெப நிலை இருக்கும் பக்குவம் தான் “ஓ...ம் என்ற நாதமுடன் ஈர்த்து வழி பெறுங்கள்...!” என்பதே யான் சொல்லி வரும் நிலை.

இந்த உடலுக்கு உணர்வும்... உணர்வுடன் கூடிய குண அமிலங்களும்... குண அமிலங்களுடன் வழி நடத்தும் எண்ண சுவாசமும்... இருந்தால் தான் ஜீவ சக்தியான நுண்ணிய காந்த அலையின் சக்தியை நாம் எடுக்க முடியும்.

நம் உயிராத்மாவிற்கு சேமிக்கும் சொத்து எது...? என்று பல தடவை வினாக்களை ஏற்கனவே எழுப்பியுள்ளேன்.

உயிராத்மாவிற்குத் தேவையான சொத்தைச் சேமிக்க வேண்டும் என்றால்... பலவான எண்ணத்தில் உணர்வின் உணர்ச்சி அலையின் வாழும் மனிதனின் ஞானம் எத்தகையதைப் போல் இருந்திடல் வேண்டும்...?

இன்றும் பல காலமாகவும் பல மேதைகள் புதிய புதிய செயல் முறைகளைக் கண்டுபிடித்து விஞ்ஞானச் செயலும் கல்வி ஞானமும் இன்னும் சிலர் கவிதை ஞானமும் பெற்றுத்தான் வாழ்கின்றனர்.

இந்த ஞானம் எத்தகையதைப் போன்றது..?

சித்தனின் ஞானத்திற்கும் இந்த ஞானத்திற்கும் மாறுபாடு என்ன...? சித்தனின் வளர்ச்சியும் ஞானம் தான்...! இவையும் ஞானம் தான்...!

சூரியனின் ஒளி சக்தியினால் இந்தப் பூமியின் வளர்ச்சி பூமி எடுத்து வளர்ந்து பலவாக உள்ளது. வளர்ந்துள்ள இயற்கையில் இருந்து அதிலுள்ள சத்தான நமக்குகந்தது எது..? என்று அறிந்து அதன் பெருக்கத்தை உற்பத்தியாக்கி அதன் சுழற்சி செயலில் இருந்தே மேன்மேலும் புதிய புதிய படைப்புகளை ஒன்றுடன் ஒன்று கலந்து அதன் பலனைப் பெறுவது போன்ற ஞானம் தான் விஞ்ஞானமும்.. இன்றைய கல்வி ஞானமும்... கவி ஞானமும்...! எல்லாமே.

ஆனால் சித்தனின் ஞானம் எப்படிப்பட்டது...?

இயற்கையில் பலவான நிலையில் இப்பலவற்றையும் கண்டு இவற்றிற்கு மேல் இவற்றையே வாழ வைக்கும் நிலை எவை..? என்பதனை உணர்ந்து இந்நிலையின் வளர்ச்சியின் “மூலம் அறிந்திட...” இந்த மூலத்துடன் சென்றடையும் நிலையில் கலந்தால் தான் இன்றைய படைப்பைப் போன்று பலவான புதிய படைப்புகளை இயற்கையில் படைக்கவல்ல ஆற்றலுக்கு வழி பெறச் செல்லுகின்றான் சித்தன்.

1.இயற்கையில் விஞ்ஞானம் காணுகின்றான் மனிதன்.
2.அந்த இயற்கையையே வளரச் செய்கின்றான் சித்தன்...!

காற்றிலும் நீரிலும் ஒளியிலும் உள்ள அமிலங்களைக் கொண்டு விஞ்ஞானச் சாதனையான அணு குண்டையும் விஷ வாயுக் குண்டையும் பலவாகப் படைக்கும் இன்றைய மனிதன்
1.நீரையும் காற்றையும் ஒளியையும் படைக்க முடியுமா...?
2.இயற்கையில் விளைந்த நாணல் புல்லைக் காற்றும் நீரும் ஒளியும் இல்லாமல் விஞ்ஞானத்தால் படைக்க முடியுமா...?

ஆனால் காற்றையும் நீரையும் ஒளியையும் படைத்தவனும் மனிதனே.. சித்தனாகவும் ஆனான்.. சப்தரிஷியாகவும் ஆனான்... சகலத்தையும் படைக்கும் ஆற்றலின் ஒளி காந்த சக்தியாகவும் ஆனான்...!

அத்தகைய ஞானத்தின் படைப்பு தானப்பா நீயும் நானும்...!

அந்த ஞானத்தையே பெறவல்ல சக்திக்கு ஜீவத் துடிப்புக் கொண்ட எண்ண சுவாசம் இருந்தால் தான் “எந்த ஞானமும் பெற முடியும்...!”