ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 16, 2020

விஞ்ஞான அறிவின் அபரிதமான வளர்ச்சியை மெச்சிப் பயன்படுத்தினாலும் அதனுடைய தீய விளைவுகளை மறந்து விட்டோம்


விஞ்ஞான அறிவால் நாம் இன்றைக்குப் பல ஆடம்பர நிலைகளை விரும்புகின்றோம்.

அதன் வழியிலே நாம் செயல்பட்டாலும் விஞ்ஞான அறிவால் இன்றைக்கு டி.வி. மூலம் வெளிப்படுத்தும் உணர்வலைகளை வீட்டில் உள்ளோர்கள் இந்த உலகம் முழுவதற்கும் நடக்கும் அசம்பாவிதங்களைப் படமாக்கிக் காட்டுகின்றனர்.

அதை எல்லாம் உற்றுப் பார்க்கும் நிலை வரப்படும் பொழுது கர்ப்பமான தாய் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்களுக்குள் பார்க்க நேர்ந்தால் அதை நுகர நேர்ந்தால் அந்தக் குழந்தைக்குள்ளும் அந்தத் தீமைகள் உருவாகின்றது.

1.அங்கே சிதையும் உணர்வுகள் இங்கே வருகின்றது.
2.அந்தச் சிதைந்திடும் உணர்வுகள் கருவிலே இருக்கும் குழந்தையிடமும் வளர்கின்றது.
3.இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாமலே வருகின்றது.

ஆனால் அந்த அசம்பாவிதங்களை ஒவ்வொரு நாளும் ஒளி பரப்புகின்றனர். எங்கே சிதைந்த உடல்களிலிருந்து வெளிப்பட்டதோ கருவிலிருக்கும் குழந்தை அதையும் நுகர நேர்கின்றது.

இன்று உதாரணமாக அமெரிக்காவில் நடக்கும் சம்பவத்தை அங்கே பதிவு செய்தைதை “அடுத்த கணமே…!” இங்கே நம் வீட்டிலிருந்தே காண முடிகின்றது… அறிய முடிகின்றது.

இது காற்றின் அழுத்தத்தால் கம்ப்யூட்டர் என்ற சாதனத்தின் மூலம் அறிய முடிகின்றது. அதே சமயத்தில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற முறையை வைத்து இப்படி மாற்றுகின்றனர்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற தொடர்பு வைத்துக் கொண்டது. இதே அழுத்தத்தை இங்கிருக்கும் சாதனத்தில் கொண்டு வரும்போது அந்த அழுத்த உணர்வுகள் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்காக அந்தப் பதிவுகளை மனிதனுடைய உருவத்தையே இங்கே நமக்கு முன் உருவாக்குகின்றது.

இப்படித்தான் அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சிகள் இங்கே ஒரு நொடிக்குள் கிடைக்கும்படி விஞ்ஞான அறிவில் செய்கின்றார்கள். ஆனால்…
1மனிதனின் வாழ்க்கையில் இவ்வாறு செய்தாலும்
2.மனிதனுக்கு எவ்வளவு பெரிய தீங்கை விளைவிக்கின்றது என்பதை மறந்துவிட்டோம்.

ஏனென்றால்…
1.எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலை வரும் பொழுது
2.இந்த மனித உடலின் இச்சை தான் வருகின்றது.
3.ஆனால் பிறவியில்லா நிலையை அடையப் பெரும் தடையாகின்றது.

அன்று அகஸ்தியன் கண்ட உணர்வின் துணை கொண்டு அவன் பாதையில் நாம் சென்றோம் என்றால் அதன் உணர்வின் வழிப்படி சென்று அந்தப் பிறவி இல்லா நிலையை அடைய முடியும்.

ஆகவே தான் இந்தக் காலை துருவ தியானங்களை நாம் தெளிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வருகின்றோம்.

கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளைச் சேர்த்து
1.தன் கணவன் பெறவேண்டும் என்று மனைவியும்’
2.தன் மனைவி பெறவேண்டும் என்று கணவனும் ஒருவருக்கொருவர் எண்ணி
3.இரு உயிரும் அந்த உணர்வின் தன்மை ஒன்றிணைத்தே பழக வேண்டும்.

கணவனும் மனைவியும் இவ்வாறு இரு உயிரும் ஒன்றி ஒளியாக மாற்றினால் அடுத்து இன்னொரு பிறவி இல்லை…!