
கோடி கோடி - மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
1.ஒரு சொல்லை மட்டும் இலேசாகக் குறையாகச் சொல்லி அதற்கப்புறம் அடித்துப் பாருங்கள்
2.இந்த உணர்வுகள் மாறும்.
ஆக குரு எனக்குக் காட்டும் நிலைகள் அவர் என்னை அடிக்கப்படும் பொழுது
1.அந்த உணர்வின் தன்மை “எது…?”
எத்தனையோ கோடி உணர்வுகள் சேர்த்து
1.உன்னை நான் அடிக்கும் உணர்வுக்குள் இருப்பதை
நீ அண்டத்தை அறிந்துவிடு… ஒரு மனிதனின் உணர்வுக்குள் நீ சொல்லைப் பாய்ச்சிவிடு. அங்கே கிளரும் உணர்வின் தன்மையை நுகர்ந்தறி. நுகர்ந்து அறிந்தால் அவனுள் விளைந்த உணர்வின் தன்மை உன்னை இயக்கும். ஆனால் அவனை நீ மாற்ற முடியாது.
2.ஆனால் அதை எவ்வாறு மாற்றுவது…? என்று குருநாதர் என்னிடம் கேட்கிறார்.
இப்படித்தான் இதைப் போன்று கேள்விகள் கேட்டுப் பின் விளக்கங்கள் கொடுக்கிறார்.
1.“கோடி கோடி… கோடி கோடி… “கோடி கோடி…” என்ற நிலையில்
2.நான் “தேடித் தேடி… தேடித் தேடி…” சென்று இதைப் பெற்றேன்
3.உன்னை அது “நாடி… நாடி… நாடி…” வருகின்றது
4.நீ “தேடித் தேடி…” அதைப் பெற வேண்டும் என்று இப்படிச் சொல்வார்.
அவருடைய சொல்லுக்குள் பார்த்தோம் என்றால் உட்பொருள்கள் எவ்வளவோ இருக்கும்.
1.என்னை அடித்தவுடன்… “உன்னை தேடித் தேடி வருகின்றது… நீ நாடி நாடி அதைப் பெறுகின்றாய்…!” என்று இப்படிச் சொல்வார்.
2.ஏனென்றால் இதெல்லாம் குருநாதருடைய சொல்லுக்குள் அனைத்தும் சூட்சமம் தான்.
2.அவர் பிறவா நிலைகள் பெற்றதை… நாமும் பிறவா நிலை அடையும் மார்க்கமும் இதிலே அடங்கியுள்ளது.
விண்ணுலக ஆற்றலைக் “கோடி கோடி…” என்று சொல்லும் பொழுது “இந்தக் கோடியைச் சாப்பிட்டால்… நீ எதை எதையெல்லாம் போய்ச் சாப்பிடலாம்…? போய் சாப்பிடுடா பாருடா…!” என்று குருநாதர் சொல்வார்.
2.அதாவது உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை
3.அந்தத் தீமைக்குள் ஞானிகள் உணர்வுகளைக் கலந்தவுடன் அதை விழுங்கி அந்தத் தீமையை அடக்குகின்றது.
4.அப்படி அடக்கிய நிலைகள் கொண்டு உணவாக அதற்கு அமைகிறது.
1.ஞானிகளின் உணர்வை நாம் விழுங்கினால் தீமைகளை இது விழுங்கும்.
2.ஆகவே மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் அதிகமாகச் சேர்க்க வேண்டும்.
ஞானத்தை அறிய வேண்டும் என்றால் இப்பொழுது கேட்டறிந்த உணர்வுகள்… உங்களுக்குள் எத்தனை கோடி குணங்கள் இருப்பினும் அவை அனைத்திலும் எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கும் பொழுது இது உங்களுக்குள் பால்வெளி மண்டலமாகத் துகள்களாகச் சேர்கின்றது.
1.அதாவது அருள் உணர்வுகளை நுகர நுகர எண்ணங்களாக விரிவடைகின்றது.
அந்தத் திறன் நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உணர்வைப் பதிவு செய்கிறோம். இதன் துணை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும்.
2.அதை நீங்கள் நுகர வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.