ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 4, 2014

நமக்குப் பாதுகாப்பு நமது எண்ணமாகத்தான் வரவேண்டும்

இன்று நாம் பணத்தை சம்பாதித்து வீட்டிற்குள் வைத்திருந்தாலும், நம் பணத்தை நம் பணமென்று சொல்ல முடியாது.

காரணம் இன்றைய விஞ்ஞான நிலைகளில் சிந்தனையற்ற நிலைகளில் வீட்டிற்குள் ஆள் இருந்தாலே கொள்ளையடிக்கும் நிலை வருகின்றது.

பயத்தால் திருடன் வந்துவிடுவானோ?”
என்று அடிக்கடி நாம் எண்ணியிருக்கும் போது
இந்த உணர்வின் தன்மைகள்
வீட்டிற்குள் திருடர்கள் புகும் நிலைகள் வந்துவிடுகின்றது.

இதைப்போல நாம் வீட்டில் எத்தனையோ இருந்தாலும் பாதுகாப்பற்ற நிலைகள் இருக்கின்றது. நமக்குப்  பாதுகாப்பு நமது எண்ணமாகத்தான் வரவேண்டும்.

கணவன், மனைவி இருவரும் இந்த தியானம் எடுத்துக்கொண்ட நிலைகள் கொண்டு
எண்ண அலைகளை வீடு முழுவதும் பாய்ச்சப்படும்போது
அந்த உயர்ந்த மகரிஷிளின் அருள் சக்திகள்
இங்கே அவர்கள் எண்ணிய எண்ண அலைகள் வரும்.

இதற்கு மத்தியில் திருடக்கூடியவனுடைய எண்ணங்கள் வரப்படும்போது இதைச் சுவாசித்தவுடன் வன் சிந்தனையை மாற்றிவிடும்.

ஆக வேறு பக்கம்தான் திரும்பிவிடுமே தவிர, திருட வருபவனையும், தடுக்கக்கூடிய சக்தி இருக்கிறது.

அதைப்போல நாம் இந்த எண்ணங்களை எண்ணும்போது ஆபீஸில் எதிர்ப்புகள் இருந்தாலும் அது குறையக்கூடிய சக்திகள் வரும். இதையெல்லாம் நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகையினால் நமது வாழ்க்கையில் சக்தியின் துணை கொண்டுதான் காத்துக்கொள்ள முடியுமே தவிர,
சாமியார் காப்பாற்றுவார்,
சாமி காப்பாற்றும்,
ஜோசியம் காப்பாற்றும்,
ஜாதகம் காப்பாற்றுமென்றால்,
நாம் தெரிந்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை.

ஆக, அந்தந்த சந்தர்ப்பத்தில் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சிகள்தான், அதைச் செயல்படுத்துகின்றது.

ஆனால் ஜாதகத்தைப் பார்க்கும்போது உனக்குக் கஷ்டம் இருக்கிறது என்று அவன் சொல்லிவிட்டால் போதும்,
அந்தக் கஷ்டமான உணர்வை நாம் எடுத்து,
நமக்குள் விளையவைத்து,
கஷ்டத்திலேதான் வாழ்க்கையை நடத்திக்கொள்கின்றோமே தவிர,
அதிலிருந்து மீள்வதில்லை.

நல்லதைச் சொல்லி நாம் மீளவேண்டும் என்றால் முடியாது. ஏனென்றால், கஷ்டம் என்று சொல்லப்படும்போது வேதனை துரித நிலைகளில் நமக்குள்
கூடிவிடுகின்றது.

நல்லது நடக்கும் என்று ஜோசியம் சொல்லியிருந்தால், நீங்கள் என்ன தான் தலைகீழாக மாற்றினாலும்கூட அது வராது. ஏனென்றால், வக்கிர புத்தியிருந்தால் வந்துகொண்டே இருக்கிறது என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்

இல்லையென்றால் சாந்தி செய்துதான் அதை நிவர்த்திக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் யாரும் எதையும் செய்யமுடியாது. இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மகரிஷிகளின் அருள்சக்தியைச் சுவாசியுங்கள்
உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவட்டும்.