ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2014

மந்திர ஒலிகளிலிருந்து நீங்கள் விடுபடவேண்டும்

பிருகு மகரிஷி அவர் அரசராக இருந்தபோது ஒரு மனிதனுடைய உடலில் மந்திரத்தை ஏற்றப்பட்டு, அந்த மந்திரத்தின் நிலைகள் கொண்டு மனிதனுக்குள் இருக்கும் குணத்தின் உணர்வின் அலையை
அந்த உடலிலிருந்து பிரித்தெடுப்பதும்
உடலோடு இருக்கும்போது எடுப்பதும்
உடலைவிட்டு உயிராத்மா பிரிந்து சென்றபின் எடுப்பதும்
இத்தகைய நிலைகளைச் செய்து கொண்டிருந்தவர்.

ஆக, சாதாரண புவிஈர்ப்பின் நிலைகளில்தான் அவருடைய இந்த செயல்கள் இருந்தது. ஆனால், அவருடைய செயல் விண்ணின் செயலுக்குச் செல்லவில்லை.

விடா முயற்சியின் நிலைகள் கொண்டு,
தான் செய்த தவறு எதுவாக இருந்தாலும்,
தவறை மாற்றியமைக்கும் முயற்சி எடுத்து புவி ஈர்ப்பின் பிடிப்பிலிருந்து விண் சென்றார் அந்த பிருகு மாமகரிஷி.

ஆகையினால், நாமும் நம் மனித வாழ்க்கையில் இப்பொழுது மந்திர ஒலிகளில் சிக்கித் தவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

ஏனென்றால், அரசர்கள் வாழ்வதற்கு மந்திரம் மிக முக்கியமாகத் தேவைப்பட்டது. அதனுடைய தன்மைகள் பக்தி மார்க்கத்தில் செயல்படுத்தப்பட்ட முறைகள்.

அதிலே சிக்குண்டவர்கள், அதே ஒலியை நாம் தட்டி எழுப்பியவுடன் எவ்வளவு பெரிய காரியங்கள் செய்திருந்தாலும் நம் உணர்வுகள் மாறி அதனுடைய நிலைக்கே இட்டுச் செல்லும்.

நாம் எந்த மந்திரங்களைப் பதிவு செய்திருக்கின்றோமோ அதன் அடிப்படையிலேதான் நம்முடைய இயக்கங்கள் இருக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் அவர் விடுபட்டு மந்திர உணர்வை மாய்த்த மெய் ஒளியின் உணர்வைத் தனக்குள் சேர்த்து விண் சென்றவர் பிருகு மாமகரிஷி.

அவர் இந்த பூமியில் இருக்கும்போது உன்னத சக்திகளை எடுத்து, தன் வாழ்க்கையிலே வந்த கடும் தீமைகளை மாய்த்து ஒளியான நிலைகள் பெற்றார்.

பிருகு மாமகரிஷி அவ்வாறு ஒளியின் நிலைகள் பெற்ற, அந்த உணர்வின் ஆற்றல்களை நீங்களும் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இதை உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அதை நீங்கள் எண்ணும் பொழுது அந்த மகரிஷியின் அருள் சக்திகள் இங்கே பரவிக் கிடப்பதை நீங்கள் நுகர முடியும். மந்திர ஒலிகளிலிருந்து நீங்களும் விடுபட முடியும்.