ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 25, 2014

உலக மாற்றத்தின் உண்மைகளை இனிமேல் விஞ்ஞானிகள் நாள்... நேரம்...எல்லாம் குறிப்பிட்டுச் சொல்வார்கள்...!

விஞ்ஞானிகளால் அணுவின் ஆயுதங்களினுடைய தன்மையும், துரித நிலைகள் கொண்டு எலக்ட்ரானிக்கும், துரித வேக நிலைகளில் இந்த உணர்வலைகளையும் கண்டுணர முடிந்தது.

இப்படி அலைவரிசையில் தான் கண்டுணர்ந்தாலும் அநேகமாக குண்டுகளினுடைய நிலைகள் பூமியை நீர்மூலமாக்குவதற்கு,
இன்று இந்த மணலைப் போன்றே உலகம் முழுவதுமே உருகி
அப்படியே கரைந்து ஓடக்கூடிய நிலைகளுக்கு
அணுகுண்டுகள் இந்த பூமியில் இருக்கின்றது.

ஏக காலத்தில் அது வெடித்தால் போதும், ஒவ்வொரு மண்ணுக்குள்ளும் இருக்கக்கூடிய கதிரியக்கங்கள் அது உருகிப் புயலாக மாறி விண்ணிலே இது ஆவியாகப் பறக்கும் நிலைகளுக்கு இன்று ஒவ்வொரு விஞ்ஞானியும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

இவையெல்லாம் விஞ்ஞானிகள் வெளியிலே சொல்லவில்லை. இன்று யாம் சொல்லியிருக்கின்றோம்.
1.“குறித்து வைத்துக் கொள்ளுங்கள்”,
2.,பூமிக்கடியில் எரிமலைகள் அதிகமாகி நெருப்புக் குழ்ம்பாகிவிட்டது
3.பனிப் பாறைகள் எல்லாம் உருகிக் கடல்கள் பெருகும்
4.கடலோர ஊர்கள் எல்லாம் நீருக்குள் மூழ்கும்
5.பூமியின் அச்சு மாறப் போகின்றது என்று
6.இனி ஒவ்வொன்றாக வரிசையாகச் சொல்லிக் கொண்டு வருவார்கள்
7.இத்தனாவது நாள் இத்தனை மணி என்றே சொல்வார்கள்...! .

அணுக் கதிரியக்கங்களினால் இன்று உலகம் முழுவதற்கும் சிதறுண்டு போகக்கூடிய நிலைகளுக்கு வந்துவிட்டது.

இப்படிச் சொல்கின்றாரே...! என்று நினைப்பதற்குப் பதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். யாம் இருபது முப்பது வருடங்களுக்கு முன் சொன்னதெல்லாம் இன்றும் வந்து கொண்டே இருக்கின்றது. முதலில் சொன்னது சிறிதளவே.

இன்று மனிதர்களாக இருப்பவர்கள் என்னதான் சத்தியத்தைப் பேசினாலும் தர்மத்தைப் பேசினாலும் எனக்குத் தியானம் இருப்பதற்கு நேரமில்லை என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்படியே தியானமிருந்து சக்தி கிடைத்தாலும் கூட அதையும் கொஞ்ச நாளில் விட்டு விட்டுச் செல்வதற்குத்தான் இருப்பார்கள். இப்படித்தான் இருக்கின்றோம்.

எவ்வளவு சிரமப்பட்டுக் கொடுத்தாலும் கூட அதை விட்டுவிட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

யாம் ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காப்பதற்காக வேண்டி நமது குருநாதர் காட்டிய முறை கொண்டு சில உணர்வுகளினுடைய நிலைகளில் தொடர்பு கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம்.

நம்முடன் இணைந்தவர்களுக்கு 
1.எப்படிக் குருநாதர் எமக்குத் தெரியாமல் எமக்குள் பல சக்திகளைக் கூட்டினாரோ
2.அதே மாதிரிதான் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு 
3.ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத் தெரியாமலே பல சக்திகளை ஊட்டிக்கொண்டே இருக்கின்றேன்.

யாம் ஒவ்வொரு நிமிடமும் பேசுவது வெறும் பேச்சல்ல. எமது குருநாதர் தொடர்பு கொண்ட அந்த உணர்வின் தொடர்பு கொண்டு அந்த ஒளிகளை உங்களுக்குள் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றோம்.

நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் இந்தச் சுழற்சியில் இருந்து தப்பலாம். இல்லை. நாளைக்கு நடப்பதை யார் அறிவார் என்று எண்ணிக் கொண்டு வாழ்ந்தால் அடுத்த சுற்று இந்தப் பிரப்ஞ்சத்தில் மனித உருக்கள் எந்தக் கோளில் எப்பொழுது உருவாகுமோ என்று சொல்ல முடியாது...!

அது வரை எடுத்துக் கொண்ட வேதனை உணர்வுடன் ஒரு ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்ட உயிரணு போல் துடித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்.