ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2014

விஞ்ஞான அறிவின் விளைவுகள் நெருங்கிவிட்டது...!

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டரும் மற்ற நிலைகளும், ரேடியோ, டி.விக்குள்ளும் நாம் வெளிப்படுத்தும் நிலைகள் சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப காந்தங்கள் தனக்குள் இந்த உணர்வின் ஆற்றலை
கெமிக்கல் கலந்த உணர்வின் ஆற்றலை
அது இழுத்து வைத்துக் கொள்கிறது.

அதே புகைப்படம் இயக்கும் இயந்திரத்தின் துணைகொண்டு, நாம் ஈர்த்து ரசித்து அந்த உணர்வை வெளிப்படுத்தும்போது நாம் செவி கொண்டு கேட்கின்றோம்.

அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் கூட்டப்படும்போது, எந்த விஞ்ஞான அறிவு கொண்டு இந்த உணர்வின் தன்மையைப் பரப்பினானோ
இந்த உணர்வுகளை நாம் சுவாசித்து
அந்த உணர்வாலே நம்மை இயக்கி மகிழ்கின்றோம்.

அப்படி மகிழ்ந்தாலும் இந்த உணர்வின் சத்தான நிலைகள் நம் உடலுக்குள் அந்த விஷத்தின் தன்மைகள் கலந்து விடுகின்றது.

இவ்வாறு கலந்து, கலந்து நாம் வெளியிட்ட மூச்சலைகள்
இந்தக் காற்றிலே படர்ந்து கொண்டிருக்கின்றது.
மிகுந்து கொண்டிருக்கின்றது.

இன்று பூமிக்கு வெளியிலே செயற்கைக்கோளைச் செயல்படுத்தி அந்த செயல்படுத்திய நிலைகள் கொண்டு விண்ணிலே இருக்கக் கூடிய விஷத்தன்மையானகளும் அதிலே கலக்கப்பட்டு அது ஒளிபரப்பப்படும்போது சிறுகச் சிறுகச் சேர்கின்றன.

இன்று மிகவும் விஷத்தன்மையான ஆற்றல்மிக்க நிலைகளை நாம் ரேடியோ, டி.வி. கம்ப்யூட்டர் மூலம் எந்த அளவுக்குக் கவனிக்கின்றோமோ, அந்த அளவிற்கு நமக்குள் அது பதிவாகின்றது.

செயற்கைக்கோளின் வழியாக நாம் வீட்டிலிருந்து ரேடியோ, டி.வி, கம்ப்யூட்டரை இரசித்துக் கொண்டிருக்கும் போது இந்த உணர்வைத் தூண்டி பதித்துக் கொண்டிருக்கும்போது அங்கே
சில எதிர் நிலையான கதிர்வீச்சுகளை,
அந்த டி.வி ரேடியோக்களில் கலந்து விட்டவுடன்,
நாம் இங்கே கேட்டுக் கொண்டிருந்தவருடைய புத்திகள் சிதறி,
என் பிள்ளைகள் எது? என் வீடு எது? என்ற நிலைகளுக்கு வரும்.

டிவி, கம்ப்யூடர் எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டு
தன் பிள்ளைகளையும் கொன்றுவிட்டு
இது என்ன உலகம்?
என்ற இருண்ட நிலைக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது.
கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

“இவர் என்ன பைத்தியக்காரத்தனமாக இவர் சொல்கிறார் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதைப்போன்ற நேரங்கள் நெருங்கிவிட்டது.”