ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 3, 2014

முன்னோர்களின் உயிராத்மாக்கள் இன்னொரு மனித உடலுக்குள் சென்றிருந்தாலும் விண் செலுத்த முடியும்


ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது முறைப்படி இந்த தியானத்தை அவசியம் செய் வேண்டும். வீட்டில் இருப்போர் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானம் செய்ய வேண்டும்.

ஆக இதைப்போன்று, முறைப்படி கூட்டுத் தியானம் செய்து கொண்டவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.

ஏனென்றால், நம் மூதாதையர்கள் நம்மை வளர்ப்பதற்காக வேண்டி எத்தனையோ இன்னல்கள் பட்டு, வேதனைப்பட்டு அவர்கள் இறந்திருப்பார்கள்.

அவர்கள் இறந்திருந்தாலும், இறந்தவர்கள் எந்தெந்த நிலைகள் கொண்டு ஒரு உடலுக்குள் புகுந்திருந்தாலும், அதாவது மிருக உடலைப் பெற்றிருந்தால் மாற்ற முடியாது.

ஒரு மனிதனுக்குள் போய் வேதனை செய்து அந்த மனிதன் வாழ்க்கையிலே வளர்ந்து கொண்டிருந்தால் அந்த மனிதன் இறந்தபின் இந்த உயிராத்மா வெளியிலே வந்துவிட்டால் இரண்டு உணர்வும் கலந்து உயிரான்மா வந்துவிடும்.

ஏனென்றால், நம்மைச் சேர்ந்தவர்கள் உடலுக்குள் புகுந்து பேயாகவோ, மற்ற அருளாகவோ ஆடியிருந்தாலும் அதனுடைய நிலைகள் வேதனையாகி விஷமாகி மாறிவிட்டது என்று சொன்னால் அது வெளியிலே வரப்படும்போது நம்மால் விண் செலுத்த முடியும்.

இந்த உணர்வின் மணம், அதற்குள் மறைந்திருக்கக்கூடிய மணம் நம்மிடமும் உண்டு. இறந்தவர்களுடைய உயிராத்மா சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டுமென்று நாம் எண்ணும்போது,
நம் உடலிலே இருக்ககூடிய உணர்வுகள்
அவர்கள் உடலின் உள்ளே மறைந்திருந்தாலும்,
நாம் எடுத்துக்கொண்ட சக்தி கொண்டு
இந்த உயிராத்மாவை நாம் இழுத்து விண் செலுத்த முடியும்.

அப்படி விண் செலுத்திவிட்டால் இன்னொரு உடல் பெறும் அந்த உணர்வின் சத்தை,
சப்தரிஷி மண்டல அலைகளுடன் கலந்தவுடன்
அந்த மனித உடலைப்பெறும்
அல்லது மிருக உடலைப்பெறும் நிலைகளை
அது சுருக்கி விடுகின்றது.

அதற்குள் மனித உடலை வளர்த்த அந்த உணர்வின் அணுக்கள் இருக்கும். அதனுடைய உணர்வின் அணுக்கள்தான் நம் சரீரம்.

இந்த உடலான நிலைகளில் விண் செலுத்தப்படும்போது, அங்கிருக்கக்கூடிய சக்தியை, நாம் வான மண்டலத்தை எண்ணியவுடன்
எந்த உடலிலிருந்து நாம் பிறந்தோமோ,
அந்த உணர்வின் சத்தை நாம் இழுக்கப்படும்போது
விண்ணை நோக்கி ஏகியவுடன்
சப்தரிஷி மண்டல உணர்வுகளை அது எடுத்து வளரப்படும்போது,
நாம் இங்கிருந்து எண்ணும்போது
அங்கிருந்து சக்திகளை நாம் சுலபமான நிலைகளில் பெற்று,
நம் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை மாய்க்க அந்த சக்தி நமக்கு உதவும்.

ஏனென்றால் இப்பொழுதே இந்த மாதிரி பழக்கிக் கொண்டால்தான் நாம் இந்த உடலைவிட்டுச் சென்றபின், முறைப்படி குழந்தைகள் இப்படி தியானமிருக்கும்போது
அம்மா அப்பாவினுடைய உயிரான்மாக்கள்
சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்
அவர்கள் ஒளிசரீரம் பெறவேண்டும் என்று
உந்தித் தள்ளச் செய்யமுடியும்.
அப்படி உந்தித் தள்ளுவதற்குத்தான் இந்த முறை.