ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 15, 2014

இனி வரும் காலத்தில் எந்த நேரத்தில் எதுவும் நடக்கும்...!

முன்பு வாழ்ந்த மனிதரின் நிலைகளில் அவர்கள் சூது வாது அற்ற நிலைகள் கொண்டு தனக்குள் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றவர் பல கோடி பேர்கள்.

1.இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னாடி நடந்த நிகழ்ச்சிகளுக்கும் 
2.இன்று விஞ்ஞான நிலைகளில் போன வருடம் நடந்ததற்கும் இந்த வருடம் புதிய நிலைகளாக வருகிறது.
3.இப்பொழுது ஒரு மாதத்திற்குள் கூட துரித நிலைகளில் மாறிக் கொண்டே வருகிறது.

இன்று மனிதனே கூண்டுடன் அழியக் கூடிய தன்மைகள். நாட்டுக்கு நாடு ஒவ்வொரு அரசும் தன்னைத் தற்காத்துக் கொள்ள மாற்று அரசை வீழ்த்திக் கொண்டுள்ளது.

ஏனென்றால், அவன் வளர்ந்துவிட்டால் தன்னை அழித்து விடுவான் என்ற இந்த அழிக்கும் உணர்வுகள் 
1.அரசு போர் முறைகளில் பாயப்பட்டு மக்கள் மத்தியிலே குடி கொண்டு
2.போர் முறைகளில் உலகத்தையே அழிக்கக்கூடிய நிலைகள் துரித நிலைகளில் உருவாகி,
3.கூடிய சீக்கிரம் மனித இனமே இல்லாத நிலைகளுக்கு ஆகப்போகின்றோம்.

மனித இனம் இருக்கலாம். மிருக நிலைகள் கொண்டு ஆரம்ப நிலைகளில் சிந்தனையற்ற நிலைகளில் இருந்தானே, அதைப்போன்று இந்த விஞ்ஞான உலகத்திலே இப்பொழுது நாம்
1.மனிதன் என்ற தர்மத்தையே இழந்து
2.இன்று சிந்தனையற்ற நிலைகளில் இருக்கின்றோம்.

இதைக்காட்டிலும் விஷ அணுக்களின் தன்மையை நம்மை அறியாமலேயே நமக்குள் நுகரச் செய்துவிட்டார்கள். அதனால் இன்று வாழும் மனிதர்கள்
1.தன் பிள்ளைகள் யார்?
2.தன் வீடு எது? என்கிற சிந்தனையே அற்ற நிலைகள் வர ஆரம்பித்துவிட்டது.

இதைப் போன்றுதான் போர் முறைகளில் நவீன ஆயுதங்கள் எடுத்து மற்ற அரசை மடக்கிக் கொண்டு, இப்படித்தான் நாம் பயந்த சுவாசத்தின் நிலைகளில் வளர்ந்து வளர்ந்து இன்று விஞ்ஞான அறிவின் தன்மையால் ஒருவருக்கொருவர் அழிக்கும் நிலைகளில் இன்று முழுமையாக அழித்துக்கொள்ளும் நிலைகளுக்கே எல்லை கடந்து வந்துவிட்டோம்.

எந்த நிமிடத்திலும் எதுவும் நடக்கும் நிலைகளில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.