ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 7, 2014

விதியை மதியால் வெல்லும் வழி - ஞானகுரு

நம் வாழ்வில் ஏற்படும் சாதனைகளோ அல்லது 
சோதனைகளோ எதுவாக இருப்பினும் அது
நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம்மிடம் இணைந்து
ஊழ்வினையாக ஆவதால் உண்டாகும் விளைவே.
ஆகவே இது விதி.

கொடிய நஞ்சு போன்ற நஞ்சுகளையும் துன்பங்களையும் ஒடுக்குவதற்கு ஒரே வழி - மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவதே என்று அறிந்து,
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற
குரு காட்டும் வழியில் செயல்படுவதே “மதி”.

ஆக, இந்த மதியால் விதியை வெல்ல முடியும் என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும்.