ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 24, 2014

கர்ப்பமானவர்கள் ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்...?

கர்ப்பத்தில் இருக்கும்போது, ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள்
நாம் வெளியே ரோட்டில் போகும்போது,
ஒருவர் “காக்கா வலிப்பு” வந்து கீழே விழுவதைப் பார்த்து,
“ஐயோ பாவமே!” என்று எண்ணினால் போதும்.

நாம் தவறு செய்யவில்லை.

ஆனால் நுகர்ந்த உணர்வு இரத்தத்தில் கலந்துவிடுகிறது. காரணம், பரிவுடனும் பண்புடனும் இருக்கின்றோம். இது வசிஷ்டர் கவர்ந்து கொண்ட சக்தி. நம் உடலில் அந்த அணுவின் தன்மை ஆகின்றது.

அதே சமயத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு இதை இணைத்தவுடன் அது இணைந்து நம் உடலில் இரத்தத்தில்தான் கலக்கின்றது.

இது சிறுகச் சிறுக போகும். ஆனால், கருவில் வளரும் குழந்தைக்கு கருவுறும் தன்மையிலேயே இணைந்து விடும்.

இப்போது விவசாயத்தில் என்ன செய்கிறார்கள். ஒரு விதையினுடைய தன்மையை இளமையில் இருக்கும்போதே மாற்றுவார்கள்.

அதுபோன்று நாம் கருத்தன்மையிலேயே இணைக்கும்போது அந்தக் குழந்தை தவறு செய்வதில்லை. ஆக இரத்தத்தில் கலந்தவுடன் இந்தக் குழந்தைக்கும் தே காக்கா வலிப்பு நோய் வந்துவிடுகிறது.

இப்படி ஆகிவிட்டதே என்று அந்தத் தாய் வேதனையை எடுக்கிறது. அதனுடைய வளர்ச்சியை எண்ணும்போது வேதனையைப் பார்த்தார்கள். அதனால் வேதனை பலவிதமான வேதனைகள் வருகின்றது.

எல்லாம் நன்றாக இருப்பார்கள். ஆனால், என் குழந்தை இப்படி இருக்கிறதே என்ற உணர்வுகளை எண்ணி எடுப்பார்கள்.

அந்த நேரத்தில் உடனே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்றும், குழந்தைக்குக் கிடைக்க வேண்டும், அருள்ஞானம் பெறவேண்டும் என்று இதையெடுத்து எண்ணிப் பாருங்கள்.

கருவில் இருக்கும் குழந்தைக்கும் அது நிச்சயம் மாற்றியமைக்கும். நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.

ஆனால் “இப்படி ஆகிவிட்டதே” என்று திருப்பி வளர்த்தீர்கள் என்றால் எல்லாம் கலந்து குழந்தைக்குத் தான் கொடுக்கின்றோம்.

சில குடும்பங்களில் மிகவும் ஏழையாக இருப்பார்கள். மெய் ஞானிகளைப் பற்றிய ஞான உணர்வுகளைக் கர்ப்பாமான தாய் அந்தத் தொண்ணூறு நாட்களுக்குள் கேட்க நேர்ந்தால் அந்தச் சந்தர்ப்பம் பூர்வ புண்ணியமாக அமைந்து, அந்தக் குழந்தை ஞானியாக உருவாகும்.

இதே மாதிரி நமது வாழ்க்கையில் இன்றைக்கு
எவ்வளவு திறமை உள்ளவராக இருந்தாலும்,
தாய் கருவிலே இருந்தபோது வந்த
பூர்வ புண்ணியமும் இணைந்தே வருகின்றது.

ஆகவேபிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் ஞானமாகவும் இருக்க வேண்டுமென்றால் எந்த அசம்பாவிதங்களையும் கருவுற்ற தாய் பார்க்கக் கூடாது.

அதாவதுஇன்றைய சினிமாடி.வி. மற்றும் பத்திரிக்கைகளில் வரும் அதிர்ச்சியான செய்திகளையும், உணர்ச்சிகளைத் தூண்டும் நிலைகளையும், முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

அதற்குப் பதிலாகதீமைகளிலிருந்து விடுபட்ட உயர்ந்த குணங்கள் கொண்ட ஞானிகளைப் பற்றியும்நல்ல தெய்வீகக் கருத்துக்களையும் தாய் எண்ணிப் பதிவாக்கினால் அந்தக் கருவில் இருக்கும் குழந்தை எத்தகைய தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடும். 

அந்தக் குழந்தையை எதுவும் அதைப் பாதிக்காது.

அவன் பிறந்தபின் தன்னையும் அறிவான், 
இந்த உலகத்தையும் அறிவான். 
நம் குடும்பத்தையும் காப்பான்,  
இந்த ஊரையும் உலகையும் காப்பான். 
அவனால் நாம் எல்லோருமே நலமடைய முடியும். 


இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, மிகவும் அவசியம்.