ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 27, 2014

பேரருளைப் பெற்று பேரொளியாக மாற்றுங்கள் - ஞானகுரு

குறுகிய காலமே இந்த உடல் வாழ்கின்றது. நீடித்த காலம் வாழ்வதில்லை.

இந்தக் குறுகிய காலத்திற்குள் அருள் ஒளி பெற்றால் என்றும் நீடித்த நிலையில் ஏகாந்த காலமாக என்றென்றும் ஏகாந்த வாழ்வு பெற்று, எதிர்ப்பே இல்லாத நிலையில் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றலாம்.

இந்த நிலை பெறுவதற்காகத்தான் இன்று நாம் எல்லோரும் சேர்ந்து,
மாமகரிஷி குருதேவர் எமக்கு அருளிய அருள் வழிப்படி
ஞானவித்தை எமக்குள் வளர்த்து,
அந்த ஞானத்தின் வித்தை
உங்களுக்குள் உபதேசம் மூலமாகப் பதிவுசெய்கிறோம்.

நாம் எல்லோரும் அதன் வழியில் சென்றோம் என்றால் பேரருளாக மாறுகின்றது. பெரும் அருளாக மாறுகின்றது. அப்படிப் பேரருளாக மாறும்போது, உயிர் ஒளியாக நமக்குள் மாறுகின்றது.

ஆக, பேரொளி என்ற நிலை வரும்போது இருளையும் மாற்றும் சக்தி வருகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் அருள் ஞானத்தைப் பெருக்குவோம். அருள் வழி வாழ்வோம் என்ற நிலைகளில் இந்த உணர்வை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த அமைதி பெறச் செய்யக்கூடிய உணர்வுகள் நாம் பெறுதல் வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் அமைதி பெறச் செய்யக்கூடிய நிலை பெறுதல் வேண்டும்.

உங்கள் உணர்வை துருவ நட்சத்திரத்துடன் இணைத்து, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டுமென்று உங்கள் ஆன்மாவை சுத்தப்படுத்தி, இந்த உணர்வுகளை பரப்பச் செய்யுங்கள்.

அதுசமயம், நமக்குள் பேருண்மையின் நிலைகளை நாம் உணரலாம்.