ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 10, 2014

அனைத்தும் கைகூடும் ஞானம் எது...?

மக்கள் எல்லோரும் நம் சகோதரர்கள்
உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும் நம் சொந்தம். அவர்கள் அனைவரும் நம் சகோதரர்கள்.

ஒவ்வொருவரிடத்திற்குள்ளும் உள் நின்று இயக்கும் ஈசனுக்கு சாதியுமில்லை, மதமுமில்லை, மொழியுமில்லை.
இலக்கு இல்லாதவர் - இருளில் விளக்கு இல்லாதவர்
ஏங்கி எடுக்கும் உணர்வே ஈசனுக்கு உணவு.
அந்த உணர்வை நல் ஒளியின் உணர்வாய் வளர்ப்பது நமது கடமை.

நம்முடைய லட்சியம் எதுவாக இருக்க வேண்டும்? என்பதை நாம் அறிய வேண்டும். ஏனெனில்,
இலக்கு இல்லாதவர்
இருளில் விளக்கு இல்லாதவர் போன்றவர்.

உலகில் உயிர் ஒன்று மட்டுமே நமக்குச் சொந்தம். அந்த உயிருக்கு எது தேவையோ அதைப் பெறவேண்டும். அதனை குருவின் துணையுடன் பெறவேண்டும்.
அறிய வேண்டும் என்ற ஞானம்
இன்னும் அறிய வேண்டும் என்ற ஆவல் எழும்போது
அது ஞானத்தின் வளர்ச்சிக்கு உரமாகின்றது.

அனைத்தும் தெரியும் என்கிறபொழுது
அது ஞானத்திற்கு முற்றுப் புள்ளியாகின்றது.

பின், முன்னால் இருக்கும் உண்மைகள் கூட கண்ணால் காணமுடியாத் நிலை உருவாகிவிடும்.
அனைத்தும் கைகூடும் ஞானம்
உண்டு என்பவருக்கு உள்ளதாகவும்
இல்லை என்பவருக்கு இல்லாததாகவும்
செய்விக்கின்ற உணர்வின் தன்மையை அறிந்து
தன் ஆன்ம ஞானத்தை  வளர்ப்பவருக்கு அனைத்தும் கை கூடும்.