ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 19, 2014

நோய்களும் ஆஸ்பத்திரிகளும் தான் பெருகிக் கொண்டுள்ளது...! இந்த மனித உடலுக்குப்பின் என்ன என்று சிந்திக்கின்றோமா...?

ஆங்கில மருத்துவத்தில் சில மருந்துகளைத் தயாரிக்க மற்ற உயிரினங்களின் உறுப்புக்களை எடுக்கின்றனர். எத்தனையோ வகையான பாம்பினங்களில் உள்ள விஷத்தை எடுத்து அதை மருந்துகள் தயார் செய்யும் பொழுது இணைத்துவிடுகின்றனர்.

மருந்தாக நாம் உட்கொள்ளும் பொழுது அந்த விஷத்தன்மைகள் நம் உடலில் எதிர்மறையாகி நம் உடலில் உள்ள அணுக்களில் சிறிது சிறிதாகச் சேர்ந்துவிடுகின்றது.

மனித உடலில் விஷ அணுக்களின் தன்மையான நோய்வாய்ப்படும் பொழுது அதை மாற்றியமைக்க
வீரிய உணர்வு கொண்ட விஷத்தன்மை கலந்த மருந்தை
இரத்தத்தில் கலக்கச் செய்து அதைப் பலவீனப்படுத்தி
இதை ஓங்கச் செய்கின்றனர்.

விஞ்ஞான அறிவுப்படி ஒவ்வொரு உடலின் தன்மைக்கேற்ப வலுக் கொண்ட உணர்வுகளை ஊட்டும் மருந்துகளை மருத்துவர்கள் கூறிய நாள்களுக்கு மேல் சாப்பிட்டோம் என்றால் மனித உடலின் வாழ்க்கைக்கு எதிர் நிலையாகின்றது.

இந்த மனித உடலில் வாழும் நால் வரையிலும் இந்த விஷத்தின் தன்மையைச் சேர்த்து சேர்த்து நன்றாக ஆனாலும்
இந்த விஷத்தன்மை பெருகி
மீண்டும் மனித உடலிலிருந்து
உருமாறும் தன்மை வந்துவிடுகின்றது.

ஏனென்றால், இந்த வீரிய விஷ உணர்வுகள் மிருக உணர்விலிருந்து எடுக்கப்பட்டது.

இதைப் போல தாவர இனங்களிலிருந்தும் அதிகமான நிலையில் எடுத்தால் எப்படி ஒரு தாவர இனத்தை நுகர்ந்து இன்னொரு தாவர இனத்தை நுகரும் பொழுது புழுக்கள் உருமாறும் தன்மையைப் போன்று மனித உடலிலும் உணர்வின் அணுக்கள் மாறி பிறிதொரு வித்தியாசமான உடலாக மாற்றிவிடும்.

சிலருக்கு சில மருந்துகளைக் கொடுக்கும் பொழுது இரண்டு எதிர்மறையான உணர்வுகள் மாற்றப்படும்போது நீர்ச்சத்து அதிகமாகி உடல் பிடிப்பு கனமாகிவிடும்.

உடலைக் காக்க மருந்தைக் கொடுத்தாலும்
இன்னொரு பக்கம் பாதிப்பாகிவிடுகின்றது.

இது போன்று எத்தனையோ வித்தியாசங்கள் உடலில் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. ஆனால், இந்த மனித உடலுக்குப்பின் என்ன? என்று யாரும் சிந்திப்பது இல்லை,

நம் குடும்பத்தைக் காத்திடும் நிலையில் நாம் ஒழுக்கமாக வாழ்ந்துவந்தாலும் அக்கம்பக்கத்தில் கொஞ்சம் மனது வித்தியாசமாகப் போய்விட்டால் இவன் இப்படிச் செய்கின்றானே என்ற உணர்வு வருகின்றது.

சிலருடைய வயல்களில் பார்க்கலாம். வரப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் குறைந்து கொண்டே செல்லும். பேசாமல் விட்டுவிட்டால் பார்க்கலாம் என்று இருப்பார்கள். அப்பொழுது வெறுப்பான உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொள்கிறோம்.

நாம் சந்தோஷமாக இருந்தாலும் எதிர்வீட்டில் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்தோம் என்றால் நம் நல்ல மனது விடிந்தால் இவர்கள் முகத்தில் விழிக்க வேண்டியதிருக்கிறது என்று நினைக்கிறோம்.

அவர்கள் அப்படிக் கொடூர உணர்வு கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிடும் உணர்வுகளோடு பேசும்பொழுது அந்த உணர்வுகளை நாம் நுகர்கின்றோம்.

தவறு செய்தது அவர்களாக இருந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் நம் உயிரிலே படுகின்றது.

இந்த உணர்ச்சிகள் அனைத்தும்
நம் உடலில் உணர்வுகளாகி எண்ணங்களாகி
அதற்குத்தக்க பேசச் செய்வதும் நம்முடைய முகம் சுருங்குவதும்
செயல்கள் மாறுவதுமான வேலைகளைச் செய்கிறது.
இவையனைத்தும் இரத்தத்தில் கலந்துவிடுகின்றது.

நாம் உணவு உட்கொள்ளும்போது நல்ல ருசியாக இருந்தால் நம் உடலிலுள்ள அணுக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ருசி மாறி புளிப்பு அதிகமானால் முகம் சுருங்குகின்றது.
கார்த்தைச் சாப்பிட்டடால் “ஆ” என்று அலறுகிறது.
கசப்பின் தன்மை அதிகமானால் வாந்தி வருகிறது.
சில சுவைகள் உமட்டலாகிறது.

இதன் வளர்ச்சியினால் அதற்குத்தகுந்த மாதிரி நம் உடலிலுள்ள நல்ல அணுக்களுக்கு மாற்றங்கள் வருவதும் தொல்லைகள் கொடுப்பதுமான நிலைகள் ஆகின்றது.

ஏனென்றால் நாம் ஒரு அணுவின் தன்மையால் உடலில் இல்லை. அதனின் மலங்களாகச் சேர்த்துத்தான் நாம் உடலாகி இருக்கிறோம். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நமது உடல் என்று நினைக்கிறோம். எப்படி தேனீக்கள் தேன் கூட்டைக் கட்டுகின்றதோ அதுபோன்றுதான் பல அணுக்கள் அதன் உணர்வுக்குத்தக்க மலங்கள் இட்டு அந்த உணர்வுக்குத்தக்க உடலாகிறது.

இதை உருவாக்குவது யார்? நமது உயிர்தான்.

நாம் சுவாசிப்பது அனைத்தையும் அணுக்களாக மாற்றி அந்த அணுக்களுக்குத்தக்க உடலை மாற்றிக் கொண்டே இருக்கிறது.

என் உடல், எனக்குச் சொந்தம் என்று எதுவுமில்லை.

ஆகவே, நாம் சொந்தமாக்க வேண்டியது எது?

மனிதனின் இந்த உயிர் எப்படியோ அந்த உணர்வு போல நம் உடலின் அணுக்களை ஒளியாக மாற்றுவதுதான். அப்படி ஆனவன் தான் துருவ நட்சத்திரம்.

அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உ:ள்ள சப்தரிஷி மண்டலம்தான் இந்த உடலுக்குப்பின் நாம் செல்ல வேண்டிய எல்லை.

இதுதான் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய பேருண்மையின் நிலைகள்.