ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 6, 2014

தீமைகளை நீக்க நாம் பழகிக் கொள்வோம் - 3

உயிரினங்களிடம் பாசம் பரிவு காட்டலாமா?
ஆடு, மாடு, நாய், பூனை போன்ற பிற உயிரினங்களிடம் நாம் காண்பிக்கும் பாசம், பரிவு கூட நம்மிடத்தில் சாகாக்கலையை உருவாக்கிவிடும்.
நல்ல குணங்களுக்குச் சுதந்திரம் வேண்டும்
நமக்குள் நல்ல உணர்வுகளை சுதந்திரமாக இயங்கவிடவேண்டும்.

வெறுப்பு, வேதனை, கோபம், குரோதம் போன்ற
நஞ்சான உணர்வுகளுக்கு
நமது நல்ல உணர்வுகளை அடிமைப்படுத்திவிடக் கூடாது.
தீமைகளைப் போக்கிடும் சக்தி துருவ நட்சத்திரத்திற்குத்தான் உண்டு
அன்பு, பாசம், பரிவு, பொறுமை, சாந்தம் என்று
நற்குணங்கள் அனைத்தும் மனிதரிடத்தில் இருந்தாலும்
சந்தர்ப்பங்கள் மனிதரிடத்தில் தீமைகளைக் கொண்டு வந்துவிடும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ஒன்றுதான் தீமைகளைப் போக்கும் அருமருந்தாகும்.
தீய உணர்வுகள் நம்மை நெருங்காது
ஒரு செடி பிறிதொரு செடியின் மணத்தைத் தன்னருகில் நெருங்கவிடாது.

அதே போன்று, மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம்முள் வளர்த்துவிட்டால்
அது தீய உணர்வுகளை, தீய எண்ணங்களை
நம் அருகே நெருங்கவிடாது.