ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 8, 2014

துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் புருவ மத்தியில் மோதச் செய்யவேண்டும்

1. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நமக்குள் மோதச் செய்யவேண்டும்
எப்படி நாம் காற்றடிக்கும் பம்பை வைத்து, காற்றடிக்கின்றோமோ,
பெட்ரோல் இன்ஜின் ஓடும் பொழுது,
அதிலுள்ள பிஸ்டன் இழுத்து,
தனக்குள் எடுத்துக் கொள்கின்றதோ,
இதைப் போல நம் உயிரின் ஈர்ப்பு, அது துடிக்கும் பொழுது, அதனின் “ஈர்ப்பின் சக்தி அதிகமாகின்றது”.

நாம் நம் உடலில், “ஓம் ஈஸ்வரா’ என்று உயிரின் துடிப்பின் நிலைகளைக் கூட்டும் பொழுது, நம் உயிரின் துடிப்பின் வேகம் கூடுகின்றது.

அப்பொழுது நாம் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணி, அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நமக்குள் மோதச் செய்ய வேண்டும்.

அப்படி மோதச் செய்யும் பொழுது, ஏற்கனவே இருந்த துடிப்பைக் காட்டிலும், அதிகமான நிலைகளை நமக்குள் சேர்க்கப்படுகின்றது. ஆக நம் உடலிலே காந்த சக்தி கூடுகின்றது.

இந்த வேகத்துடிப்புடன், நம் சுவாசத்தை மேல் நோக்கி நாம் எண்ண வேண்டும்.
2. சுவாசித்த துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உடல் முழுவதும் பாய்ச்ச வேண்டும்
புருவ மத்தியிலே நம் உயிர் இருப்பதனாலே நம் கண்ணின் புலனறிவை, ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி, உடலுக்குள் அந்த நினைவைச் செலுத்தும் பொழுது,
எந்த பாகத்தில் அந்த நினைவைச் செலுத்துகின்றோமோ,
அந்த உணர்வின் நிலைகள் கூட,
ஊடுருவிச் செல்லும் நிலைகள் இருக்கின்றது.

அதைப் போல, நம் கண்ணான புலனறிவின் நிலைகளை உயிருடன் ஒன்றி இணைக்கச் செய்து, இந்த ஆற்றலை நாம் செயல்படும் பொழுது, அந்த உயிருக்குள் அந்த வேகத் துடிப்பின் நிலைகள் அதிகமாகின்றது..

இந்த அலைகள் நம் சுவாச நாளங்களில் ஊடுருவி,
உடல் முழுவதற்கும் செல்கின்றது.

அவ்வாறு சுவாசித்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள்
நம் உயிருடன் சுழற்சியாகி, அந்தச் சுழற்சிக்குள் பட்டவுடன்,
உயிரின் காந்தத் துடிப்புகள் மோதியவுடன்
அதனுடைய நுண்ணிய அணுக்கள்
அந்த உணர்வினுடைய நிலைகளை கவரச் செய்கின்றது.

அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் உடல் முழுவதற்கும் பரப்பச் செய்கின்றது.