ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2014

எம்முடைய உபதேங்களைப் பதிவு செய்தாலே போதுமானது, விஷத்தை முறியடித்துவிடலாம்

1. உலக இயல்பின் இயக்கத்தின் தன்மை எப்படிப்பட்டது?
விஷம் இல்லையென்றால் உலகமே இல்லை. சூரியனுடைய தன்மையை எடுத்துக் கொண்டால், இந்த விஷத்தை மாய்க்கும் ஆற்றல் பெற்றது. ULTRA VIOLET என்று சொல்வார்கள். அதில் வரக்கூடியது ஆறு கலர்கள்.

அது சமைத்துக் கொண்ட அலைகளை வெளிப்படுத்தியவுடன், உடல் அமைப்பிலே வராதபடி, வெளியிலே வரக்கூடிய அனைத்தையுமே சூரியன் பொசுக்கி, தனக்குள் நல்ல சக்தியை வடித்து எடுத்துக் கொள்கின்றது.

அப்படி வடித்து எடுத்துக் கொண்ட காந்த அலைகள் ஊடுருவி வரப்படும் பொழுது, வெளியிலே இருப்பதைத் தனக்குள் கவர்ந்து வருகின்றது. அவ்வாறு கவர்ந்து வந்த அந்தச் சக்தியின் நிலைகளைத்தான், நமது பூமி இதிலே மோதக்கூடிய சக்தியை இந்தச் சக்தியை எடுத்து, அந்த விஷத்தைத் தடுத்து நிறுத்துகின்றது.

ஆனால், அதே சூரியனுடைய காந்த அலைகள் அதைக் கவர்ந்து கொள்கின்றது. அதற்குப் பாதுகாப்பாக, விஷத்தன்மையை உள்ளே (பூமிக்குள்) விடுவதில்லை. ஏனென்றால்,
அதற்கு முன்னாடியும், விஷம்தான் இருக்கின்றது.
சூரியனுக்கும், விஷம்தான் முன்னாடி இருக்கின்றது.
நமக்கும், அந்த விஷம்தான் முன்னாடி இருக்கின்றது.

நாம் எடுத்துக் கொண்ட இந்த விஷத்தன்மை,
இந்த விஷம்,
நாம் எந்தெந்த குணத்தின் தன்மையை எடுத்துக் கொள்கின்றோமோ,
அந்தந்த குணத்தின் ஆற்றல் கொண்டு,
வலு கொண்டுதான், மற்றதை வராதபடி தடுத்துக் கொள்ளும்.

நல்ல குணத்தை நாம் எண்ணினாலும், அந்த விஷத்தின் தன்மை முன்னாடி வந்து, அதைத்தடைப்படுத்தும். அந்த விஷம் கலக்கவில்லை என்றால், அதற்கு ஆற்றலே கிடையாது.

ஆகவே, மிகவும் பலவீனமான நிலைகளில் விஷம் இருந்தால், நீங்கள் மேலும் மேலும் சோர்வடைந்து, மற்ற எதையும் வரவிடாதபடி தடுத்துக் கொண்டு, மேலும் உங்களை உள்ளுக்குள் கொண்டு போகும்.

ஏனென்றால் அது அப்படி எடுத்து, தனக்குள் பெருக்கிக் கொண்டேதான் இருக்கும். நல்லதைத் தடுத்து நிறுத்தத்தான் செய்யும். உலக இயல்பின் இயக்கத்தின் தன்மை அதுவே.
2. எம்முடைய உபதேங்களைப் பதிவு செய்தாலே போதுமானது, விஷத்தை முறியடித்துவிடலாம்
மெய் உணர்வின் இயக்கத்தின் தன்மையைக் கண்டுணர்ந்தபின், யாம் சொன்ன பின்னும், “சாமி எனக்குச் செய்யவில்லையே” என்று எண்ண வேண்டாம்.
யாம் உங்கள் ஒவ்வொருவருடைய உயிரையும்
கடவுளாக மதிக்கின்றோம்..
அதை யாம் சதா பிரார்த்திக்கின்றோம்.

உங்களுக்குள் மகிழ்ச்சியைத் தூண்ட வேண்டுமென்று எண்ணுகின்றோம். நமது குருநாதர் காட்டியபடி சதா அந்த மெய் ஒளியை எடுக்கின்றோம். அது, உங்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டுமென்றுதான் பிரார்த்திக்கின்றோம். அதற்குத்தான் இந்த உபதேசமே.

ஆகவே, நல்லதைப் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும், எனக்குள் மகிழ்ச்சி பெருக வேண்டும், என் சொல்லுக்குள் இனிமை பெறவேண்டும், மகரிஷிகளின் அருள் சக்தியால், என் உடலில் உள்ள நோய்கள் நீங்கவேண்டும், என்று உங்களுக்குள் நினைவைச் செலுத்துவது ஒரு கஷ்டமா?

ஓம் ஈஸ்வரா என்று, உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு, உணர்வின் தன்மையை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள். நோய்கள் பறந்துவிடும். நமக்குள் இருக்கக் கூடிய துன்பங்கள் நீங்கும்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும், உங்களை நீங்கள் நம்பி, நாம் இடும் மூச்சலைகள்தாம் இங்கே வேலை செய்கிறது என்று அறிதல் வேண்டும். நீங்கள் இடும் மூச்சலைகள் தான், எதிர்காலத்தில் விஷத்தன்மையை முறியடிக்ககூடிய சக்தியாக மலர வேண்டும்.

ஒன்றுமே தெரியவில்லை என்று எண்ண வேண்டாம். நாம் படிக்கவில்லையே என்றெல்லாம் எண்ண வேண்டாம்.
இதைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
யாம் சொல்லும் இந்த முறைப்படி செய்து பாருங்கள்.
சிரமப்பட்டு எடுக்க வேண்டியதில்லை.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும்,
எங்கள் ஜீவான்மா, ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும்.
எங்கள் பேச்சும், மூச்சும் தெய்வ நிலைகளில் இருக்கவேண்டும்.
மகரிஷிகளின் அருளால் எல்லாம் நலம் பெறுவதாக இருக்கவேண்டும், 
என்று இந்த உணர்வை வெளிப்படுத்தி, ஒளியை ஜெபமாக்குங்கள். அதனுடைய உண்மையை நீங்கள் பார்க்கலாம், எமது அருளாசிகள்.