ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 15, 2014

வெளியில் சென்றாலே சக்கரத்தைப் பார்த்து இரண்டு நிமிடம் தியானித்துவிட்டுச் செல்லுங்கள்

உதாரணமாக, ஒருவன் நம்மைத் திட்டினான் என்று வைத்துக் கொள்வோம். அவன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்றால், “நமக்குத் துரோகம் செய்தான், நம்மை ஏமாற்றினான், அவன் உருப்படுவானா” என்று எண்ணினால், அவன் உணர்வு நமக்குள் உண்டு, நம் உணர்வு அவனுக்குள் உண்டு, ஆனால், காற்றிலும் இது உண்டு.

நாம் எண்ணியவுடனே அங்கே பதிவாக்கிவிடுகின்றது. ஆனால், அங்கே அவன்
உணவு உட்கொள்ளும் பொழுது புரையோடுகின்றது.
வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் விபத்தாகின்றது.

இதைப் போன்று, நம் குழந்தை மேல் பற்று கொண்டு அவனை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால், “இப்படி இருக்கின்றானே” என்று வேதனைப்பட்டால், அந்த வேதனையான உணர்வு குழந்தைக்குத் தாக்கப்பட்டு, சிந்தனை இழந்து, அவனுக்கு விபத்தாகும், அல்லது கல்வியில் சிறப்பை இழக்க நேரும்.

ஆனால், சரியாகப் படிக்கவில்லை என்று “இப்படி இருக்கின்றான்” என்று அடிக்கடி எண்ணினால், இந்த உணர்வுகள் அவனை மாற்றியமைத்து நல்லவனாகக் கல்வி கற்கும் நிலையை மறந்து, அவனை மறந்திடும் இந்த நிலையைச் செய்யும்.

ஆகவே, ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு,
எதன் உணர்வோ அவனை வைத்து
நமக்குள் இதை வளர்த்து, நம்முடைய எண்ணங்கள்
அவனைக் குறை கூறும் உணர்வுக்கே சென்றுவிடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து மாற்றுவதற்குத்தான் வாழ்க்கையே தியானம்.

வெளியே போகும் பொழுதும், தொழிலுக்குப் போகும் பொழுதும் தியானித்துவிட்டுச் செல்லுங்கள். அங்கே சென்ற உடனே இதே மாதிரி தியானியுங்கள், இரண்டு நிமிடமோ அல்லது ஐந்து நிமிடத்திற்குள்ளோ, அங்கே தியானித்தை முடித்துக் கொள்ளலாம்.

தொழிலிலிருந்து வீட்டிற்கு வந்தாலும், இதைப் போன்று அமைதிப்படுத்தி தியானித்துவிட்டு மற்ற நல்ல பேச்சுகளைப் பேசிப் பழக வேண்டும். இப்படி ஒரு பழக்கத்திற்கு வந்துவிட்டால், தீமைகள் நமக்குள் வராது.

உங்கள் அனைவரது வாழ்க்கையிலும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச்செய்து, உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறச்செய்து, உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை பெறச் செய்து,
உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த
தீய வினைகள் அனைத்தும் நீக்கி,
குரு அருளைப் பெற்று, அருள் வழி வாழ்ந்து,
வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்,
தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடவும்,
தெரிந்து, உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும்,
பொறுப்புடன் வாழும் தன்மையும்,
தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று,
நமது குரு அருளை என்றென்றும் நீங்கள் துணை கொண்டு,
துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று,
உங்கள் வாழ்க்கையில் அருள் வழி வாழ்ந்து,
பேரின்பப் பெருவாழ்வு பெற
எமது ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

அருள் வழி வாழுங்கள்.
ஆனந்த வாழ்க்கை வாழுங்கள்.
பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையுங்கள்.
என்றும் பேரானந்த நிலை என்ற ஏகாந்த நிலை பெற எமது அருளும், குரு அருளும் நீங்கள் பெற்று, பேரின்பப் பெருவாழ்வு பெற எமது அருளாசிகள்.