ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 10, 2014

நீங்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான உணர்வுகளே எமக்கு அமுதாகின்றது - ஞானகுரு

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள்வழி கொண்டு, யாம் மிகவும் சிரமப்பட்டு 12 வருட காலம்
அந்த மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளைச் சேர்க்கும் நிலையும்,
அதை உங்களுக்குள் விளைய வைக்கும் நிலையும்,
ஒலியால் பாய்ச்சும் நிலையும்
குருநாதர் எமக்குக் கற்பித்ததனால், உங்களுக்குள் சேர்க்கின்றோம்.

இதை ஏன் சேர்க்கின்றேன்?

உங்கள் உயிர் இவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க உடலை எண்ணுகின்றது, இயக்குகின்றது.
இந்த உணர்வுக்குள் நல்லதை விளைய வைத்து,
மகிழ்ச்சியான உணர்வலைகளை வெளிப்படுத்துகின்றீர்கள்.

அப்பொழுது நீங்கள் மகிழ்ந்து,
"சாமியினால் எனக்கு நல்லதாகியது”,
என்று சொல்லப்படும் பொழுது, அந்த எண்ணம்
ஆயிரம் பேர் “இவர் நல்லவர், இவர் நல்லவர்”
என்ற உணர்வை நீங்கள் எடுத்து,
அந்த உணர்ச்சியின் தன்மையைப் பேசும்பொழுது,
எமக்கு நல்ல அமுதாகக் கிடைக்கின்றது.

இதைப் போன்று நீங்களும் எடுத்து,
உங்களுடைய உணர்வுகள் மற்றவர்களிடம் சொல்லும் பொழுது,
அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தூண்டும் பொழுது,
அவர்கள் உங்களை எண்ணுகின்றார்கள்.

அதாவது, பல சத்தின் நிலைகள் “தனித்த நிலையில் இருக்கும் பொழுது மாறியிருந்தாலும்”, நாம் குழம்பு வைக்கும் பொழுது, எல்லா உணர்வின் சத்தின் நிலைகளையும் ஒன்று சேர்த்து நாம் சுவை கொண்டதாக்கிக் கொள்கின்றோம்.

அதைப் போன்றே, ஒருவருக்கொருவர் அந்த மகிழ்ச்சியை, ஒருவர் உடலிலிருந்து நாம் சமத்துவப்படுத்திக் கொள்வோம்.

நாம் அனைவரும் அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம் எமது அருளாசிகள்.