ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 7, 2014

நம்மை ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்திலிருந்து விடுபடும் வழி

ஒரு நீரின் கீழ் தெளிந்த நீராக இருந்தவுடன், கீழே இருக்கக்கூடிய பொருளை நாம் காணமுடிகின்றது. 

ஆனால், நீர் தெளிவாக இருந்தாலும் அதே நீரின் தன்மைகள் அலைபாயும் பொழுது, தெளிவாகத் தெரிவதில்லை.

நமக்குள் நன்மையான நிலைகளையும், நாம் தெளிவாக்க முடியாத நிலைகளில் இருக்கும் இந்த நிலையைத்தான்,
அந்த மெய்ஞானியின் உணர்வின் அலையை,
நமக்குள் செலுத்தப்படும் பொழுது
பல உணர்வின் அலைகள்
அலைந்து கொண்டிருக்கும் நிலையை
அது நமக்குள் சமப்படுத்தி நிறுத்தும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி, மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்து தியானிக்கப்படும் பொழுது,
அந்தத் துன்பத்தைப் போக்கக்கூடிய
மெய்ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவுகின்றது.

வாழ்க்கையில் உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக் குழப்பத்தை, மனக் குடைச்சலை இது நிவர்த்தி செய்து, உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி, உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.

அதே சமயம் வியாபாரத்திலும் கூட உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.

குடும்பத்திலும் கூட உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது. குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.

ஆக, அந்த அருள் ஒளியின் தன்மை நமக்குள் உயிரான தன்மை கொண்டு, ஒளியாக வீசிக் கொண்டே இருக்கும், வளர்ச்சியாகும்.


அவ்வாறு அந்த உணர்ச்சியின் நிலைகள் பெற்று, வாழ்க்கையிலே மகிழ்ச்சி என்ற நிலையில் இந்த உடலைவிட்டுச் சென்றபின், இந்த உயிராத்மா ஒளியாக மாறி, எந்த மகரிஷிகள் காட்டி உணர்த்தினார்களோ அங்கே செல்ல முடியும்.